Showing posts with label சேரி. Show all posts
Showing posts with label சேரி. Show all posts

Monday, August 14, 2023

வெட்டிப் பய, சண்டாளப் பாவி என ஒருவரை திட்டலாமா?

ஒரு வாட்ஸ்அப் குழுவில் சமீபத்தில் ஒரு காணொளியைக் கண்டேன். அதில் வெட்டி என்று சொல்லுக்கான அரியதொரு விளக்கத்தைக் கூறுகிறார் ஒருவர். இதைப் பார்த்த வெட்டி என்பதற்கு சரியான விளக்கம் தந்திருப்பதாக ஒருவர் பதில் எழுதுகிறார்.


அவர் கொடுத்த விளக்கம் எப்படித் தவறானது என்பது குறித்தும், வெட்டி என்ற சொல்லுக்கு சரியான பொருள் குறித்தும் அந்த வாட்ஸ்அப் குழுவில் நான் எழுதிய எனது கருத்துக்களை இங்கே உங்களோடு பகிர்கிறேன்.

*****
வெட்டி என்பதற்கு இவர் கொடுக்கின்ற விளக்கம் தவறானது. குளங்களை வெட்டியவர்கள் எல்லா சாதியினரும் அல்ல. மாறாக சேரியிலே வாழ்ந்த ஒரு பிரிவினர். அவர்கள்தான் குளங்களை வெட்டுவது மட்டுமல்லால் ஊரில் இருக்கிற எல்லா எடுபிடி வேலைகளையும் காசு வாங்காமல் வெறும் கஞ்சிக்காக இலவசமாக செய்தவர்கள். 

இன்று ஒரு வேலையை செய்துவிட்டு வெறுங்கையோடு வந்தால் என்ன மதிப்பு இருக்கும் வீட்டில்?  மக்கள் மொழியில் சொன்னால் வெட்டியான் வேலை என்பது தம்பிடிக்கு பிரயோஜனம் இல்லாத வேலை என்று பொருள். அதனால்தான் சும்மா இருப்பவர்களைப் பார்த்து வெட்டிப்பய என்று வசை பாடுகிறார்கள். எனவே, வெட்டி என்ற சொல்லைப் பயன்படுத்துவது ஒரு குறிப்பிட்டு சாதியினரை இழிவுபடுத்துகின்ற ஒரு சொல். தயவுசெய்து யாரும் இந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டாம் என்பதே எனது கருத்து.

*****

சவக்குழி தோண்டுபவரை / பிணத்தை எரிப்பவரை வெட்டியான் என்று அழைப்பார்கள். இவர்கள் பட்டியல் சாதிப் பிரிவைச் சேர்ந்த சேரி மக்கள்‌. சுருக்கமாகச் சொன்னால் இவர்கள் சுடு / இடுகாட்டைக் காப்பவர்கள். இவர்களை 
அந்தியாவசாயி என்கிறான் மனு.

சண்டாள சாதி ஆணுக்கும், நிஷாத ஜாதி பெண்ணுக்கும் அந்தியாவசாயி பிறக்கிறான். இவனுக்கு சண்டாளன் தொழிலை விட கெட்டதான சுடுகாட்டைக் காப்பது தொழில். (மனு: 10-39)

சூத்திர ஆணுக்கும் பிராமண பெண்ணுக்கும் பிறந்தவன்தான் சண்டாளன். ( மனு-10-44).

இன்று பறையர்கள் என்று அழைக்கப்படுபவர் கள்தான் சண்டாளர்கள் என்கிறது மனுதர்மம்.

பிராமண ஆணுக்கும் சூத்திரப் பெண்ணுக்கும் பிறந்தவன்தான் நிஷாதன். (மனு 10-8)

எனவே ஒருவரை வெட்டிப்பய என்றோ, சண்டாளப் பாவி என்றோ வைவதும் திட்டுவதும் சேரி மக்களை இழிவு படுத்துகின்ற சொற்களாகும். சட்டப்படியாகப் பார்த்தால் இச்சொற்களைப் பயன்படுத்துவோரை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கலாம்.

பல்வேறு சாதிகளின் தோற்றம் குறித்து மனுதர்மத்தில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது. வேறு ஒரு சமயத்தில் அது குறித்துப் பார்க்கலாம்.

நன்றி

ஊரான்

Sunday, October 2, 2022

ஐயம் இருப்போர் ஆய்வு செய்க!

"இந்தியக் கிராமம் ஒரே ஒரு சமூக அலகாக இல்லை. அது பல சாதிகளைக் கொண்டது.

1.கிராமத்தின் மக்கள் தொகை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. (1).தீண்டத்தக்கவர்கள் (2).தீண்டத்தகாதவர்கள்.

2. தீண்டத்தக்கவர்கள் பெரிய சமுதாயமாகவும், தீண்டத்தகாதவர்கள் ஒரு சிறிய சமுதாயமாகவும் உள்ளனர்.

3. தீண்டத்தக்கவர்கள் கிராமத்தின் உள்ளேயும், தீண்டத்தகாதவர்கள் கிராமத்திற்கு வெளியேயும் தனித்தனிப் பகுதிகளில் வசிக்கின்றனர்.

4. பொருளாதார ரீதியில் தீண்டத்தக்கவர்கள் பலமான, சக்தி வாய்ந்த சமுதாயமாக உள்ளனர். தீண்டத்தகாதோர் ஏழைகளாக, சார்ந்து வாழ்கின்ற சமுதாயமாக உள்ளனர்.

5. சமூக ரீதியில், தீண்டத்தக்கவர்கள், ஆளும் இனம் என்ற இடத்தில் உள்ளனர். தீண்டத்தகாதவர்கள் பரம்பரையான, பிணை வேலைக்காரர்களைக் கொண்ட, ஆளப்படும் இனம் என்ற இடத்தில் உள்ளனர்.

இந்தியக் கிராமங்களில் தீண்டத்தக்கவர்களும், தீண்டத்தகாதோரும் சில நிபந்தனைகளின் அடிப்படையில் இணைந்து வாழ்கின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும், அதற்கு சில விதிகளை வைத்திருக்கின்றனர். இவற்றை தீண்டத்தகாதவர்கள் பின்பற்றி நடக்க வேண்டும்.  எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது, எதைச் செய்தால் குற்றம், எதைச் செய்யத் தவறினால் குற்றம் என்பவை குறித்து அவை கூறுகின்றன.

அவற்றில்,

தீண்டத்தகாதவர்கள், இந்துக்கள் வசிக்கும் இடத்திற்கு அப்பால் தனியான பகுதிகளில் வசிக்க வேண்டும். இவ்வாறு பிரித்து வைக்கும் விதியை மீறுவது குற்றமாகும். (மனு: 10-51)

தீண்டத்தகாதோர் வசிக்கும் பகுதிகள் தெற்கு திசையில் இருக்க வேண்டும். ஏனென்றால், தெற்குதான் நான்கு திசைகளில் மிகவும் அமங்கலமானது. இந்த விதியை மீறி நடப்பது குற்றமாக கருதப்படும்.

தீண்டத்தகாதவர்கள் தீட்டு ஏற்படுத்தும் தூரம் அல்லது நிழல் தீட்டு பற்றிய விதியை பின்பற்ற வேண்டும். இந்த விதியை மீறுவது குற்றமாகும்."

-அமபேத்கர் நூல் தொகுப்பு-9.

இந்தியா முழுக்க இதுதான் விதி. ஐயம் இருப்போர் ஆய்வு செய்க!

தீண்டாமையின் தொடக்கப் புள்ளியே ஊரும் சேரியும் தனித்தனியாக இருப்பதுதான். இதற்கு விதி வகுத்தது சனாதன தர்மம். அந்த சனாதனத்தைப் போற்றிப் பாதுகாப்பது என்பது தீண்டாமைக்கு துணை போவதாகும். இதுதான் இந்து தர்மம். இதைத்தான் பார்ப்பனியம் பேசி வருகிறது; பாஜக ஏற்றிப் போற்றுகிறது, அதற்காகத்தான் மோடி ஓடோடி உழைக்கிறார். வானதி வால் பிடிக்கிறார். தமிழிசை தாளம் போடுகிறார். கிருஷ்ணசாமி ஜால்ரா அடிக்கிறார். 

-ஊரான்