Showing posts with label பில்லி சூனியம். Show all posts
Showing posts with label பில்லி சூனியம். Show all posts

Monday, July 29, 2024

ஜோதிடம் உள்ளிட்ட புரோகிதத் தொழிலை ஏன் தடை செய்ய வேண்டும்?

சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் உருவாக்கி அதன் மூலம் இன்றுவரை வயிறு வளர்ப்பவர்கள் பார்ப்பனர்கள் என்பதை முந்தையப் பதிவில் பார்த்தோம்.

ஆகப் பெரும்பான்மையான மக்கள் நம்பி வாழும் வேளாண்மையை, ஈனத்தொழில் என்று ஒதுக்கி வைத்துவிட்டு, வேதம் ஓதுவதை மட்டுமே தங்களுக்கானத் தொழிலாகத் தீர்மானித்துக் கொண்டனர் பார்ப்பனர்கள். வேதம் ஓதுவதால் மட்டுமே பெரிய அளவில் வருவாய் கிடைக்காது என்பதனால், புரோகிதம் மற்றும் ஜோதிடம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை தமதாக்கிக் கொண்டனர்.
 
"தட்சணை, தானம் என்ற வகையில் அவர்களுக்குப் பொருள் குவிந்ததால், பொழுது போக்குவதில் நாட்டம் செலுத்துதல், களியாட்டங்களைக் காணுதல், சொகுசு படுக்கைகளில் உறங்குதல், கேவலமான கதைகளைச் சொல்லி அடுத்தவர்களோடு உரையாடுதல், அதன் மூலம் தங்களை அறிவாளிகளாகக் காட்டிக் கொள்ளுதல், இதையே ஆதாரமாகக் கொண்டு அடுத்தவர் மீது அதிகாரம் செலுத்துதல், ஆதாயத்திற்காக மந்திரத் தந்திரங்களில் ஈடுபடுதல், கைரேகை-சகுனம் பார்த்தல், மச்சங்களுக்கான பலன் சொல்லுதல், பில்லி-சூனியம் வைத்தல், பேய்-பிசாசு ஓட்டுதல், பாம்புக்கடி விஷ முறிவு மந்திரம் ஓதுதல், ஆயுள் ஜாதகம் கணித்தல், அதிர்ஷ்டக் குறி சொல்லுதல், இடி-மின்னல் வருவதை முன்னுரைத்தல், சந்திர-சூரிய கிரகணம் வருவதை கணித்தல், பெருமழை-பஞ்சம் வருவதை உரைத்தல், முகூர்த்தம்-முதலிரவு நாள் குறித்தல்கர்ப்பம் தரிக்க மந்திரம் ஓதுதல், கடன் பெற-செலவு செய்ய-உடன்படிக்கை மேற்கொள்ள நல்ல நாள்-நேரம் குறித்தல், தெய்வவாக்கு சொல்லுதல், நேர்த்திக்கடன் செய்தல், வீடு-மனை-நிலம் தேர்வு செய்தல், பூமி பூஜை-வேள்வி செய்தல், விலங்குகளைப் பலியிடும் சடங்கைச் செய்தல், பிரச்சனைகள் அதிகரிக்கும் பொழுது மனித உயிர்ப் பலியை செய்ய வைத்தல் உள்ளிட்ட இழிந்த கலைகளை தமதாக்கிக் கொண்டு, துட்டு, கோதுமை-அரிசி-ஆடு-பசு, காளைகளை தானமாகப் பெற்றுக் கொண்டு, தங்களது ஜீவனத்திற்காக மேற்கண்ட கீழான வழிகளையே பார்ப்பனர்கள் மேற்கொண்டனர்" என்பதை  அம்பேத்கர் பட்டியலிடுகிறார். (தொகுப்பு நூல்: தொகுதி-7).

இன்றைய நவீன காலத்திலும், ஒரு சில கலைகளை, அவர்கள் கைக்கொள்ளவில்லை என்றாலும், புரோகிதம்-ஜோதிடம் உள்ளிட்ட பெரும்பாலானவற்றை  மேற்கொள்வதன் மூலமாகத்தான் தங்களது ஜீவனத்தை பார்ப்பனர்கள் நடத்தி வருகின்றனர் என்பதை நாம் அறிவோம். உழைக்காமலேயே காசு கொட்டும் கலையாக இவை இருப்பதால், பார்ப்பனர் அல்லாத மற்ற சிலரும் இன்று இத்தகைய ஈனத் தொழில்களில் ஈடுபடுவதையும் காணமுடிகிறது.
 
புரோகிதர்கள் கணித்தபடி நடக்கவில்லை என்றால், யாரும் நட்டஈடு கேட்டு எந்த பஞ்சாயத்தையும் கூட்ட முடியாது; நீதிமன்றங்களையும் நாட முடியாது. இதுதான் புரோகிதர்களின் பலமே!
 
"இந்தப் புரோகித முறை மதங்களைக் கடந்து பார்சிக்கள் உள்ளிட்ட பலரிடமும் பரவி உள்ளதையும் நாம் காண முடிகிறது.
 
சமூகத்தில் உயர்ந்தவர்களாக புரோகிதர்கள் தங்களைக் கருதிக் கொள்கின்றனர்.

பிறப்பு-திருமணம் என மகிழ்ச்சிக்கான சடங்குகள், பிறகு தந்தை-இறுதியில் மரணம், தெய்வங்களுக்குப் படையல்,  அதைத் தொடர்ந்து நீண்டகால துக்கம் என வாழ்க்கை நெடுகிலும்,  ஒரு தீய நுண்ணறிவாளனைப் போன்று புரோகிதன், மனிதனை நிழல் போலத் தொடர்வதால், அவன் எங்கும் நீக்கமற 
நிறைந்திருக்கிறான்.

சாஸ்திரங்களை மீறுதல் பயங்கரமான தண்டனைக்குரியதாக மக்களை நம்ப வைத்திருக்கிறான். 99% மக்கள் இதற்குப் பலியாகி உள்ளனர். காண முடியாத சக்திக்கும், திக்கற்ற மனிதனுக்கும் இடையில் ஒரு சாத்தானைப் போல, புல்லுருவியாக, தரகனாக இருந்து கொண்டு தனது வாழ்க்கையை ஓட்டுகிறான்.
 
மூடநம்பிக்கைகளுக்கு
ஆதரவாக புரோகிதன் இருப்பதால்மகிச்சிகரமான திருமணமானாலும், துக்ககரமான மரணமானாலும் இரண்டு சம்பவங்களையும் புரோகிதன் சமநோக்கில்தான் பார்க்கிறான்

புரோகிதம் நாகரிகத்திற்கு ஒரு முட்டுக்கட்டை; எனவே, புரோகிதத்தைக் கட்டுப்படுத்தி, அதன் வளர்ச்சியை தடுக்க வேண்டிய அதே வேளையில், புரோகிதத் தொழிலை ரத்து செய்வதை நோக்கமாகக் கொண்டு நாம் செயல்பட வேண்டி உள்ளது என்பதையும் அம்பேத்கர் சுட்டிக் காட்டுகிறார். புரோகிதத்தில் தீமைகளே மலிந்து கிடப்பதால் அதை உடனடியாக ஒழித்துக் கட்ட வேண்டும்; ஒத்தி போடக்கூடாது" என்கிறார்.
 
"ஒரு அலுமினிய டம்ளர் கூட வாங்க முடியாமல் ஏழ்மை நிலையில் இருந்த ஒரு ஆண் இறந்த பிறகு, இறப்புச் சடங்குகளைச் செய்வதற்கு, ஒரு வெள்ளிக் கிண்ணம் வேண்டும் என்று புரோகிதன் வலியுறுத்துகிறான்; ஒரு மனிதன் செத்த பிறகும் செலவு வைக்கும் இந்த இழிந்த புரோகிதத் தொழிலை துடைத்தெறிய வேண்டும்; அதற்கான வீரமிக்கப் பணியில் அறிவாளிகளும், படித்த இந்துக்களும், முகமதியர்களும், கிருத்தவர்களும் ஒருங்கிணைந்து நிற்க வேண்டும்" என்று வேண்டுகோள் வைக்கிறார் அம்பேத்கர்.
(தொகுப்பு நூல்: தொகுதி-36).

என்றோ ஒழித்துக் கட்டப்பட்டிருக்க வேண்டிய புரோகிதத் தொழில், மேலும் மேலும் பலமடைந்தே வருகிறது. துன்ப துயரங்கள் நிறைந்த இச்சமூகக் கட்டமைப்புதான் இதற்குக் காரணம் என்றாலும், நாம் அதை உணர்வதற்கே ஜோதிடமும் புரோகிதத் தொழிலும் தடையாக இருப்பதால் இவற்றை தடை செய்வதைத்தவிர‌ வேறுவழி ஏதுமில்லை.

ஊரான்

தொடர்புடைய பதிவுகள் 

 whatsapp குழுவில் நண்பர்களின் கருத்துக்கள்:

முருகன்: இவன் இதை தடை செய்வானா மக்கள் புரிந்து கொண்டு அவர்களின் இடது காலால் தட்டிவிட வேண்டும் தினமணி தினதநதி போன்ற தினசரி நாளோடு களிலியே வெளியிட வேண்டிய ஒரு நல்ல கட்டுரை வாழ்த்துக்கள் தோழர். இவன் முருகன்கு.

செல்வம்: இன்று அவாக்களின் ஆட்சி நடைபெறுகிறது, தடை செய்யமுடியாது,😭😭😭