Showing posts with label மக்கள் அதிகாரம். Show all posts
Showing posts with label மக்கள் அதிகாரம். Show all posts

Monday, January 13, 2020

மார்கழி மழை:கர்ப்பத்தைக் கலைக்குமா? ---இறுதிப் பகுதி


சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையை நோக்கிச் சென்ற போது பறக்கும் ரெயில் மேம்பாலத்தருகில் எங்கு திரும்பினாலும் காக்கிச் சட்டைகளாகவே காட்சி அளித்தன. போதாக்குறைக்கு ஐப்பதுக்கும் மேற்பட்ட அதிரடிப் படையினர் வேறு. வாலாசா சாலை என்றாலே M.A.சிதம்பரம் ஸ்டேடியமும் கிரிக்கெட்டும் நினைவுக்கு வராமல் போகாது. வாலாசா சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருந்தது. நடந்து செல்பவர்களைக்கூட அனுமதிக்கவில்லை. வரப்போகும் மிகப் பெரிய கலவரத்தைத் தடுப்பதற்கு காவல்துறை தயாராய் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி இருந்தார்கள்.

அப்படி ஒன்றும் அங்கு நிகழப் போவதில்லை என்பது போலீசாருக்கும் தெரியும். பிறகு எதற்கு இத்தனை கெடுபிடிகள்? பொதுமக்களை அச்சமூட்டுவதற்காக காவல்துறை கையாளும் யுக்தி இது. இன்று தொடங்கும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தக் கூடாது ஆகிய கோரிக்கைளை முன்வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பு சார்ப்பில் கோட்டையை நோக்கிப் பேரணி நடத்துவதாக அறிவித்திருந்தார்கள். அதற்குத்தான் இத்தனை கெடுபிடி.

நூற்றுக்கணக்கான மக்கள் அதிகார அமைப்பினர் தங்களது கோரிக்கைகளை வலியுத்தி முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். போராட்டக்காரர்களை கைது செய்து அழைத்துச் செல்வதற்காக பேருந்துகளும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன. நான் அங்கிருந்த வழக்கறிஞர் அணியோடு இணைந்து கொண்டேன். போராட்டக்காரர்கள் மீது காவல்துறை அத்துமீறி நடந்து கொண்டால் அதில் தலையிடுவதற்கும், போராடும் மக்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பு அளிப்பதற்கும், போராட்டக் களத்தில் வழக்கறிஞர்கள் தேவைப்படுகிறார்கள். அதற்காகத்தான் நானும் சென்னை சென்றேன்.

காலையில் பெய்த கனமழையின் சுவடுகள் எதுவும் தெரியவில்லை. கதிரவன் உக்கிரமாக மேலேறிக் கொண்டிருந்தான். உச்சிவெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. இளம் பெண் காவலர்கள் வெயில் கொடுமையால் சற்றே களைப்புற்றனர். ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வெயில் ஒரு பொருட்டாகவேத் தெரியவில்லை. விருப்பத்தோடு ஒரு வேலையில் ஈடுபட்டால் எதிர்வரும் இடர்கள் எதுவாயினும் அது ஒரு பொருட்டே அல்ல என்பதை உணர்த்தியது அவர்கள் எழுப்பிய முழக்கம்.

இடையிடையே போராட்டத்தின் அவசியம் குறித்து பல்வேறு கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள் உரையாற்றினர். “Say No CAA, Say No NRC, Say No. NPR” என்ற பாடலை ம.க.இ.க பாடகர் கோவன் பாடியபோது ஆர்ப்பாட்டம் கலை கட்டியது. பிற்பகல் 1.30 மணி அளவில் அர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டு கோட்டையை நோக்கிப் பேரணியாக புறப்பட்டவர்களை அங்கேயே தடுத்து நிறுத்தி கைது செய்தது காவல்துறை.

கைது செய்யப்பட்டவர்கள் புதுப்பேட்டையில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான ஒரு சமுதாயக் கூடத்தில் அடைக்கப்பட்டிருந்ததை அறிந்து அங்கு சென்றோம். மறு உத்தரவு வரும்வரை அவர்களை மண்பத்தில் பாதுகாக்கும் பொறுப்பு காவல்துறையினுடையது என்பதால் அங்கும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கைதிகளை முறையாக நடத்துகிறார்களா? உணவு உள்ளிட்ட தேவைகள் மற்றும் குடிநீர், கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்காணிப்பதற்கும், குறைபாடுகள் ஏதேனும் இருப்பின் அதற்காக முறையிடுவதற்கும்தான் வழக்கறிஞர்கள் தேவைப்படுகிறார்கள்.

நகராட்சி சமுதாயக் கூடம் என்பதால் பராமறிப்பு ஏதுமின்றி பூத்பங்களாவாய்க் காட்சி அளித்தது. சும்மா கொடுத்தால்கூட யாரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு அழுக்கேறி கிடந்தது. கழிப்பறைகளோ கவனிப்பாரற்றுக் கிடந்தது.

போராட்டக்காரர்களுக்கு உணவு ஏற்பாடு உறுதி செய்யப்பட்ட பிறகு  பகல் உணவைத் தேடினேன். புதுப்பேட்டை இன்னொரு பேரணாம்பட்டு போல இருந்தது. இங்கு சைவ உணவைத் தேடுவது, ஹரித்துவாரில் அசைவ உணவைத் தேடுவது போலாகிவிட்டது. புதுப்பேட்டையில் எங்கு திரும்பினாலும் பீப் பிரியாணிதான். பீப் இல்லாமல் சாப்பாடா? இதுதான் புதுப்பேட்டையின் புறநிலை. மாட்டுக்கறிக்கு எதிராகக் களமாடும் வடநாட்டு சங்கிகள் இங்கு வந்தால் அவர்களது சங்கும் பிரியாணி ஆகிவிடும் போல.

மீண்டும் மண்டபத்திற்கு வந்தேன். ஆயிரம் பேர் ஓரிடத்தில் அடைக்கப்பட்டிருந்தாலும் அங்கு கூச்சல் குழப்பம் இல்லை. உணவு வாங்கும்போது தள்ளுமுள்ளு இல்லை. சும்மா இருந்தாலே நேரத்தைக் கொல்வது என்பார்கள். ஆனால் இங்கே பேச்சு, பாட்டு என அறிவார்ந்த விசயங்களைப் பகிர்ந்து கொண்டதால் நேரம் போனதே தெரியவில்லை.

அனுமதியின்றி பேரணி சென்ற குற்றத்திற்காக போராட்டக்காரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு பின்னர் மாலை 7 மணி அளவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். காலையில் பெய்த மழையால் கர்ப்பம் கலைந்ததா என்பதை ‘நம் முன்னோர்கள்தான்’ உறுதிப்படுத்த வேண்டும். ஆனால் இன்றைய மழையால் சென்னையின் தூசு மாசிலிருந்து எனக்கும் விடுதலைதான். இல்லையேல் ஈஸ்னோபில் என்னை சிறைபடுத்தி இருக்கும்.

முற்றும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

மார்கழி மழை: கர்ப்பத்தைக் கலைக்குமா? ... தொடர் - 3

மார்கழி மழை: கர்ப்பத்தைக் கலைக்குமா? - தொடர் - 2

ஜெ.பி-யிலே ஒரு நாள்!

ஊர்ப் பயணம்! கலைஞருக்கு 'ஓட்டு' விழுமா?

ஊர்ப் பயணம்! காலை நேர அனுபவம்!

ஊர்ப் பயணம்! ஐயர் வந்தார். அள்ளிச் சென்றார்!

Saturday, August 8, 2015

மூடு டாஸ்மாக்கை!

மதுக்கடைகளை மூடவேண்டும் என்கிற கோரிக்கை பல காலமாக பல்வேறு கட்சிகளால்  - இயக்கங்களால் எழுப்பப்பட்டாலும் அது தற்போது தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை உடனடியாக அமுல் படுத்த வேண்டும் என்கிற மக்களின் கோரிக்கையாக வலுப்பெற்றுள்ளது. சமீப காலத்தில் இந்தப் போராட்டம் ஏன் வலுப்பெற்றுள்ளது? அதற்காக உழைத்தவர்கள் யார்? உமைப்பவர்கள் யார்? என்கிற சுருக்கமான வரலாறு இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

மதுவுக்கு எதிரான போராட்டம் வெற்றி பெறவேண்டும். இல்லையேல் தமிழகம் நாசமாயப் போவதை யாராலும் தடுக்க முடியாது. போராடிக் கொண்டிருக்கும் போராளிகள் அனைவருக்கும் பாராட்டுதல்களையும் வாழ்த்துகளையும் தெரிவிக்க வேண்டியது மனிதனாயப் பிறந்த ஒவ்வொருவரின் கடமையாகும்.

24.12.2012: சென்னை, குரோம்பேட்டையில் பெண்கள் விடுதலை முன்னணியினர் டாஸ்மாக் சாராயக்கடைகளுக்கு எதிரான போராட்டம்.


15.02.2013: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் அழிவிடைதாங்கி கிராமத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் தலைமையில் அக்கிராம மக்கள் டாஸ்மாக் சாராயக்கடையை அடித்து நொறுக்கினர். 9 பேர் கைது செய்யப்பட்டு 19 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு பிணையில் வெளியே வந்தனர். இன்று நடைபெறும் போராட்டங்களுக்கு வித்திட்டது அழிவிடைதாங்கி போராட்டமே!



25.09.2014: திருச்சியில் பெண்கள் விடுதலை முன்னணியினர் டாஸ்மாக் சாராயக்கடைகளுக்கு எதிரான போராட்டம்.


ஜீன் 2015 முதல் மூடு டாஸ்மாக்கை! என்கிற முழக்கத்துடன் மக்கள் அதிகாரம் தொடங்கி வைத்த பிரச்சாரம்.


26.06.2015: பதுச்சேரியில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர்  சாராயக்கடையை அடித்து நொறுக்கினர்.




15.07.2015: திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர் டாஸ்மாக் சாராயக்கடையை அடித்து நொறுக்கினர்.



01.08.2015: மார்த்தாண்டம்,உண்ணாமலைக்கடை டாஸ்மாக் சாராயக்கடையை மூடக்கோரி செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய காந்திய வாதி சசிபெருமாளின் மரணம்.



டாஸ்மாக் சாராயக்கடைகளுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என் கோரிக்கை மேலும் வலுவடைய சசிபெருமாளின் மரணம் மிக முக்கிய காரணமாக அமைந்தது.

02.08.2015: கலிங்கப்பட்டியில் ம.தி.மு.க தலைமையில் டாஸ்மாக் சாராயக்கடை அடித்து நொறுக்கப்பட்டது. மதுவுக்கு எதிரான போராட்டம் அறவழியில் சாத்தியமில்லை என்பதை கலிங்கப்பட் உணர்த்தியது.



03.08.2015: சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் தலைமையில்  டாஸ்மாக் சாராயக்கடை அடித்து நொறுக்கப்பட்டது டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை தமிழகம் முழுவதும் பெருங்காட்டுத்தீயாய் பரவ வித்திட்டது.



முழுமையான மதுவிலக்க கோரிக்கை இன்று தமிழக மக்களின் கொரிக்கையாக வலுப் பெற்றுவிட்டது. எத்தனை அடக்குமறைகளை ஏவிட்டாலும் போராட்டங்கள் தொடரும் என்பதைத்தான் இன்றை போராட்டங்கள் உணர்த்துகின்றன.

தற்போது நடைபெற்று வரும் போரட்டங்களிலிருந்து சில காட்சிகள்.













போராட்டம் தீவிரமடைவதைக் கண்ட தி.மு.க, வி.சி.க, தே.மு.தி.க, CPI, CPM, SDPI, காங்கிரஸ், பா.ஜ.க என பல்வேறு அரசியல் கட்சிகள் இன்று போராட்டக் களத்தில் இறங்கியுள்ளன - இதில் பெரும்பாலான கட்சியினர் அரசியல் ஆதாயம் தேட முனைந்தாலும் -  இவர்களின் போராட்டங்களும் மதுவிலக்கு கோரிக்கைக்கு வலு சேர்க்கவே செய்யும்.


இதோ! புறப்பட்டுவிட்டது அடுத்தத் தலைமுறை. மதுவற்ற தமிழகம் காண தோள் கொடுப்போம். போராளிகளுக்கு!

Friday, June 26, 2015

“ஓடறான் புடி! ஓடறான் புடி!”

இப்பொழுது தமிழ் நாட்டில் பனங்கள்ளும் இல்லை; தென்னங்கள்ளும் இல்லை;; ஈச்சங்கள்ளும் இல்லை. முன்பெல்லாம் அரசுக்குத் தெரியாமல் கள்ளு இறக்கினால் கலால் பிரிவு நல்லாவே கல்லா கட்டும். இப்பொழுது சாராயத்தில் அரசாங்கமே கல்லா கட்டுவதால் கலால் பிரிவுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது.

அடர்ந்த காடு-மலைகளுக்கு நடுவே கஞ்சாச் செடி வளர்த்தாலும் மோப்பம் பிடித்து கஞ்சாவை பொசுக்கி விடுகிறது அரசு. கஸ்டம்சைத் தாண்டி அவ்வளவு லேசில் ஹெராயின் உள்ளே நுழைந்து விட முடியாது. கஞ்சாவும், ஹெராயினும் அப்படியே கிடைத்தாலும் விற்பவன் திருட்டுத் தனமாக மிகவும் சாதுர்யமாகத்தான் விற்க வேண்டும். அதனால் கஞ்சாவும், ஹெராயினும் கிடைப்பது அரிது. அப்படியே கிடைத்தாலும் அதற்கு பலியாகுபவர்கள் சிலரே.

ஆனால் அனைவருக்கும் மிக எளிதாக கிடைக்கும் ஒரே போதைப் பொருள் சாராயம்தான். சாராயம் நமக்குத்தான் போதைப் பொருள். நமது காசைப் பிடுங்கி நமது உடலை உருக்கி சுடுகாட்டுக்கு வழி காட்டும் டாஸ்மாக் நிறுவனம் அரசுக்கு ஒரு அட்சய பாத்திரம். டாஸ்மாக் அரசுக்குத்தான் அட்சய பாத்திரம். நமக்கோ பிச்சைப் பாத்திரம்.

இந்த லட்சணத்தில் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி நாமக்கல்லில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் போதைப் பொருள் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நடைபெற்றுள்ளது. இதை விட கேளிக்கூத்து வேறு என்ன இருக்க முடியும்?
 
“ஓடறான் புடி! ஓடறான் புடி!” என கூப்பாடு போடும் திருட்டுப் பயலுக்கும் சாராய போதையில் மக்களை மூழ்கடிக்கும் இந்த மானங்கெட்ட அரசுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது.

 வள்ளுவனும், அல்லாவும், ஏசுநாதருமே சொல்லிக் கேட்காத குடிமக்கள் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாள் கொண்டாடி விட்டால் மட்டும் போதையை விட்டு விடுவார்களா என்ன?

நாம் பிச்சைப் பாத்திரத்தை ஏந்தாமல் இருக்க வேண்டும் என்றால் அரசாங்கத்தின் அட்சயப் பாத்திரம் சுக்கு நூறாக நொறுக்கப்பட வேண்டும்.

அதற்கு….

டாஸ்மாக் கடை முன்னால் பெரிய பள்ளம் வெட்டப்பட வேண்டும். பெண்கள் தினமும் அங்கே குப்பைகளை கொட்ட வேண்டும். மாணவர்களும் இளைஞர்களும் கடையிலேயே ஒண்ணுக்கு அடிக்க வேண்டும். எதுவும் அசையவில்லை என்றால் டாஸ்மாக் கடை கக்கூசாக மாற வேண்டும். ஆற்று மணலை கொள்ளையடிக்கும் மணல் லாரிகளை மடக்குவது போல சாராயம் ஏற்றி வரும் லாரிகளை மடக்கி விரட்ட வேண்டும். புதுவைப் பெண்களைப் போல சாராயக் கடைகளை சூறையாடாமல்  போதையிலிருந்து மக்களை ஒரு போதும் மீட்க முடியாது.
 
வெல்லட்டும் மக்கள் அதிகாரம்!
 
புதுவை பெண்கள் சாராயக் கடையை சூறையாடிய படங்கள்.
 


 
 
 
 

 
தொடர்புடைய பதிவுகள்: