Wednesday, June 12, 2019

வாசிப்பில் முனைப்பு காட்டும் இளைஞர்கள்!


இராணிப்பேட்டை, பெல் வாளகத்தில் செயல்படும் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தின் 19-வது சந்திப்பு கடந்த 30.05.2019 அன்று நடை பெற்றது. 

தோழர் துரை.பாலகிருட்டிணன் நெறியாளுகை செய்தார். 

தோழர் செ.விநோதினி வரவேற்புரை நிகழ்த்தினார். இதுதான் அவருக்கு முதல் மேடை என்றாலும் வரும் காலம் இளைஞர்கள் கையில்தான் என்பதை குறிப்பால் உணர்த்தினார்.

தே.இலட்சுமணன் எழுதிய “பகுத்தறிவாளர் புத்தர்” என்கிற நூல் குறித்து தோழர் மு.தங்கவேல் உரையாற்றினார். சமத்துவத்தை போதித்த பௌத்தத்தை பார்ப்பனர்கள் எவ்வாறு வீழ்த்தினர் என்பன உள்ளிட்ட பல்வேறு விவரங்களை மிக அழுத்தமாக தனது உரையில் வெளிப்படுத்தினார்.

கே.பாலகோபால் எழுதிய “கலவரப் பள்ளத்தாக்கு காஷ்மீர்” என்கிற நூல் குறித்து தோழர் நா.பாலாஜி மிகச் சிறப்பாக உரையாற்றினார். காஷ்மீரின் வரலாறு, காஷ்மீர் குறித்த இந்திய பாகிஸ்தான் இரு அரசுகளின் நிலைப்பாடு, இதில் காஷ்மீர் மக்களின் விருப்பம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை முதன் முறையாக இருந்தாலும் மிகத் தெளிவாக இவர் முன்வைத்ததைப் பார்க்கும் போது இவர் இந்நூலை மிக ஆழமாக ஊன்றிப் படித்துள்ளார் என்பதைக் காண முடிந்தது.

வாசகர் வட்டத்தின் தலைவர் தோழர் வே.இந்திரன் நன்றி கூறினார்.

இத்தகைய வாசிப்புகள் சமூகத்தைப் புரிந்து கொள்ளவும், சமூகத்தில் மாற்றங்களை மேற்கொள்ளவும் உதவும் என்பதை அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் உணர்த்தி வருகிறது.

வாசகர் வட்ட நிர்வாகிகளுக்கு எனது பாராட்டுகள்.

ஊரான்


 

துரை.பாலகிருட்டிணன்
 

 செ.விநோதினி

 
மு.தங்கவேல்

நா.பாலாஜி
 

 பார்வையாளர்கள்

 வே.இந்திரன்

தொடர்புடைய பதிவுகள்

அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தை முடக்க முனைத்து மூக்குடைபட்ட ஆதிக்கக் கும்பல்!




 

No comments:

Post a Comment