Friday, June 28, 2019

அரசியல் எனக்குப் பிடிக்கும்!


பெல்,  இராணிப்பேட்டை “அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தின்” 20- வது சந்திப்பு 22.06.2019 அன்று நடைபெற்றது. இந்த சந்திப்பில் ச.தமிழச்செல்வன் எழுதிய “அரசியல் எனக்குப் பிடிக்கும்” நூல் குறித்து தோழர் ஆ.கலைவாணன் மற்றும் அழகிய பெரியவன் எழுதிய “தேனீர் மேசை” நூல் குறித்து தோழர் கோ.இளங்கீரன் ஆகியோர் உரையாற்றினர். இருவருமே அந்நூல்களை ஆழமாகப் படித்து வந்து விளக்கினர்.

தோழர் அ.கிருபா வரவேற்புரை நிகழ்த்தினார். தோழர் பொன்.சேகர் கூட்டத்திற்கு தலைமை ஏற்று நெறிப்படுத்தினார். இறுதியில் தோழர் ரெ.மேகநாதன் நன்றி கூறினார்.

மின்வெட்டு மற்றும் மழையின் குறுக்கீடுகளைப் புறந்தள்ளி திறளான வாசகர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்பித்தனர்.

அழகிய பெரியவனின் தேநீர் மேசையில் 17 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அதில் ஒரு கட்டுரைதான் தேனீர் மேசை. தனது ஊரான பேரணாம்பட்டு மற்றும் தனது மாவட்டத்தில் உள்ள சில ஊர்கள் ஆறுகள் குறித்தும் அங்குள்ள மக்கள் குறித்தும் தனது அனுபவங்களை வாசகர்களோடு பகிர்கிறார் நூலாசிரியர்.  நேரடிக் காட்சிப் பதிவுகளை ஏற்படுத்தும் வல்லமை இக்கட்டுரைகளில் மிளிர்கிறது. கட்டுரைகள் எழுதப்பட்ட காலம் குறிப்பிட்டிருந்தால் காலத்தோடு பொருத்திப் பார்க்க உதவியாக இருந்திருக்கும்.

கடினமான அரசியலை மிக எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் ச.தமிழ்ச் செல்வனின் அரசியல் எனக்குப் பிடிக்கும் நூல் எழுதப்பட்டுள்ளது. அரசு என்றால் என்ன? அது யாருக்கானது? போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. மனித சமுதாய வளர்ச்சிப் போக்கில் அரசு எப்பொழுது தோன்றியது அது யாருக்குச் சேவை செய்தது  / செய்கிறது என்பதை ஆதிப் பொதுவுடைமை சமூகத்தில் தொடங்கி சோசலிச சமூகம் வரை சுறுக்கமாக அதே வேளையில் புரியும்படி விளக்கி உள்ளார். சமூக மாற்றத்தை விழைவோர் ஒரு தொடக்க நூலாகப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டிய அரசியல் நூல் என்றால் அது மிகை அல்ல.






 
தொடர்புடைய பதிவுகள் 



 
 
 


No comments:

Post a Comment