Showing posts with label பா.ஜ.க. Show all posts
Showing posts with label பா.ஜ.க. Show all posts

Sunday, April 8, 2018

ஐ.ஐ.டி தரமும் அண்ணா பல்கலைக்கழகமும்!


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து, தமிழகத்திற்கு துரோகம் இழைத்து வரும் மோடி அரசுக்கு எதிராக தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கும் சூழலில், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கர்நாடகவைச் சேர்ந்த சூரப்பாவை நியமித்ததன் மூலம் வெந்த புண்ணில் வேல் பாச்சுகிற வேலையை செய்திருக்கிறது மோடி அரசு.

ஏற்கனவே இசைப் பல்கலைக்கழகத்திற்கு கேரளாவைச் சேர்ந்த பிரமிளா தேவியும், டாக்கடர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு ஆந்திராவைச் சேர்ந்த சூரியநாராயண சாஸ்திரியும் நியமிக்கப்பட்டுள்ளனர்தமிழகத்தில், தமிழக மாணவர்களுக்காக செயல்படும் பல்கலைக்கழகங்களில் தொடர்ந்து வெளிமாநிலத்தவரை துணை வேந்தர்களாக நியமிப்பதன் நோக்கம் என்ன?

இது குறித்து தொலைக்காட்சிகளில் பல்வேறு விவாதங்களும் நடத்தப்பட்டன. காவிரிநீர் போராட்டத்தை திசைதிருப்புவதற்கான ஒரு நடவடிக்கை எனவும், பார்ப்பன சக்திகள் கல்வி நிலையங்களை ஆக்கிரமித்து கல்வியை பார்ப்பன மயமாக்கும் ஒரு நடவடிக்கை எனவும் தமிழக மக்கள் சார்பாக வாதாடியவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு 170பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்குக்கூடவா அதற்கான தகுதி இல்லை என கேள்விகளை எழுப்புகின்றனர்.

நியூஸ்18, தந்தி டி.வி, சன் நியூஸ்  ஆகிய தொலைக்காட்சிகளில் இது குறித்து நடந்த விவாதங்களில் அருள்மொழி (தி.), பாலு (பா..), ரமேஷ்பிரபா (பத்திரிக்கையாளர்), மனோதங்கராஜ் (தி.மு.), பச்சையப்பன் (தமிழறிஞர்), நெடுஞ்செழியன் (கல்வியாளர்), உள்ளிட்டோர் தமிழக மக்களின் சார்பாக வாதிட்டனர். தமிழ் தெரியாத ஒருவரால் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ்வரும் 572 உறுப்புக் கல்லூரிகளை எப்படி திறமையாக நிர்வகிக்க முடியும் எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.

சீனிவாசன் (பா..), பத்ரி சேஷாத்ரி (சமூக ஆர்வலர்), பாடம் நாராயணன் (சமூக ஆர்வலர்), அரசகுமார் (பா..) உள்ளிட்டோர் தகுதி, திறமை, நேர்மையின் அடிப்படையில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளதாக நியமனங்களை நியாயப்படுத்தி தமிழக மக்களுக்கு எதிராகவும் வாதிட்டனர்.

இத்தகைய நியமனங்களை தமிழர்-தமிழரல்லாதோர் பிரச்சனையாக பார்ப்பதா? அப்படி பார்ப்பது இனவெறியைத் தூண்டுவதாகாதா? வேறு மாநிலத்தவரை தமிழகத்தில் நியமனம் செய்வதை எதிர்த்தால் பிற மாநிலங்களில் தமிழர்களை நியமிப்பதை ஏற்றுக் கொள்ள முடியுமா? நடுவண் அரசின்கீழ் இயங்கும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் ஒருவர்கூட தமிழர் இல்லை என்பதும் ஒரு எதார்த்தமான உண்மை. இந்த நிலையில் பிறமாநில அரசுகளின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்களில் தமிழர்களை துணை வேந்தர்களாக நியமிக்கவா போகிறார்கள்?

பார்ப்பனர்கள் வாதிடுவதைப் போல இத்தகைய நியமனங்களை தகுதி, திறமை, நேர்மையின் அடிப்படையில் பார்ப்பதுதான் சரியானதா? பிறப்பால் பார்ப்பனரல்லாதவர்கள்கூட தகுதி, திறமை, நேர்மை குறித்து பேசுகிறார்களே என கேள்வி எழுப்பலாம்.  பிறப்பால் பார்ப்பனர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பார்ப்பன இந்து மதக்கோட்பாடுகளை நியாப்படுத்தும் எவரும் பார்ப்பனியத்தை நிலை நாட்டும் பார்ப்பனர்களே.

மேலே குறிப்பிட்டுள்ள மூன்று பல்கலைக்கழகங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள மூவரும் பிறப்பால் பார்ப்பனர்கள் என்கிற வாதமும் முன்வைக்கப்படுகிறது. தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்ட பிறகுதான் தமிழகத்தில் இத்தகைய நியமனங்கள் நடந்தேறுகின்றன. இந்தியாவின் பிற பகுதிகளில் கல்வியை பார்ப்பன மயமாக்கும் நோக்கத்திற்காக இத்தகைய நியமனங்களை ஏற்கனவே பா..க அரசு செய்து வருகிறது.

பார்ப்னர்கள் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காகத்தான் அவர்கள் தகுதி, திறமை, நேர்மை மற்றும் ஊழலற்ற நிர்வாகம் குறித்து கூப்பாடு போட்டு வருகின்றனர். பார்ப்பனர்கள் எவ்வளவுதான் புத்திசாலிகளாக இருந்தாலும் அவர்கள் கையில் நிர்வாகத்தை ஒப்படைப்பது சந்தேகத்திற்கிடமின்றி தவறு என அம்பேத்கர் எச்சரிக்கிறார்@.

ஒரு நல்ல அரசு ஒரு திறமையான அரசைவிடச் சிறந்தது. பார்ப்பனர்கள் திறமையான அரசு பற்றி பேசுகிறார்கள். பார்ப்பனரல்லாதோர் கட்சி நல்ல அரசு குறித்து பேசுகிறது. எந்த ஒரு அரசும் அனுதாபத்துடன் செயல்படாவிட்டால் நன்மைகளைச் செய்ய முடியாது. பார்ப்பனர்கள் மட்டுமே பொறுப்பில் இருந்தால் அந்த நிர்வாகம் அனைவரிடமும் அனுதாபத்துடன் செயல்படாது என்கிறார் அம்பேத்கர்@.

மற்ற பொதுமக்களைவிட, தன்னை மேன்மையானவனாகக் கருதுபவன் ஒரு பார்ப்பன். இயற்கையிலேயே தனது சாதியினருக்குச் சாதகமாக செயல்படுபவன். மக்களின் மீது அக்றையில்லாததால் ஊழலுக்கு பலியாகிறவனாக இருக்கும் இப்படிப்பட்ட பார்ப்பனன் எப்படிச் சிறந்த நிர்வாகியாக இருக்க முடியும்? என கேள்வி எழுப்புகிறார் அம்பேத்கர்.@

திறமையே எல்லாம் என்ற நிலையை பார்ப்பனர்கள் எடுப்பதற்குக் காரணம் கல்வியில் அவர்கள் முன்னணியில் இருப்பதால்தான். திறமையை மட்டுமே அளவுகோலாக வைப்பதன்மூலம் அரசுப் பணிகளை ஏகபோகமாக பார்ப்பனர்கள் கைப்பற்றிக் கொள்கின்றனர்.@

திறமைதான் எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது என்றால் ஒரு ஆங்கிலேயரையோ, பிரெஞ்சு, ஜெர்மன் நாட்டவரையோ வேலைக்கு அமர்த்துவதில் தவறு ஏதும் இருக்க முடியாதே என்கிறார் அம்பேத்கர்.@ இதன்படி அண்ணா பல்கலைக்கழத்திற்கு திறமையானவர்தான் வேண்டும் என்றால் கர்நாடகாவில் தேடுவதைவிட அமெரிக்காவிலோ, ஜெர்மனியிலோ தேடலாமே!

அண்ணா பல்கலைக்கழகத்தை ஐ.ஐ.டி தரத்திற்கு உயர்த்துவேன் என்கிறார் சூரப்பா. ஒரு அமெரிக்கரை துணைவேந்தராக நியமித்தால் அவர் நேரடியாக உலகின் முதல்தர பல்கலைக்கழகமாக உயர்த்தி விடுவாரே!

அரசு வேலைகளில் பார்ப்பனர்களிடத்தில் சூத்திரர்களை வைத்தால் பார்ப்பனர்கள் மற்ற எல்லோரைவிடவும் உயர்ந்தவர்கள் என்கிற மனு தர்மத்தை நிலை நாட்ட முடியாது என்பதால்தான் தகுதி, திறமை, ஊழலற்ற நிர்வாகம் என்கிற போர்வையில் பார்ப்பன மனுதர்மத்தை நிலை நாட்டுவோரை கொள்கை முடிவு எடுக்கும் அரசு உயர் பதவிகளில் நியமித்து வருகின்றது பா.ஜ.க அரசு.

அண்ணா பல்கலைக்கழகம் ஐ.ஐ.டி தரத்திற்கு உயர்த்தப்படும் என்பதும், ஏற்கனவே ஐ.ஐ.டி அக்ரகாரத் தரத்தில் இருப்பதும் வேறு வேறு அல்லவே!.

@:பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 25 (தமிழ்), பக்கம்: 81 - 83

Sunday, November 8, 2015

பா.ஜ.க தோல்வி: மகிழ்ச்சியின் எதிர்காலம்!

பிகார் தேர்தல் முடிவுகளுக்கு முன்

பிகார் தேர்தல் முடிவுகளுக்குப் பின்














ஏய் யாருப்பா அங்க அந்த மீடியாக்காரனெல்லாம் போயிட்டானானு பாரு.....




மகிழ்ச்சியின் எதிர்காலம்

படங்கள் உதவி: முகநூல் நண்பர்கள்

தொடர்புடைய பதிவுகள்:


Tuesday, February 10, 2015

பா.ஜ.க தலைவர்களின் மூஞ்சி தொங்கிப் போச்சு! உச்ச கட்ட காட்சிகள்!

"இப்படம் இன்றே கடைசி அல்ல! இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடும் என்றாலும் பிரேமுக்கு பிரேம் நெகிழ்ச்சியூட்டும் காட்சிகள் நிறைந்து இருப்பதால் "பா.ஜ.க தலைவர்களின் மூஞ்சி தொங்கிப் போச்சு!" என்கிற திரை ஓவியத்தை அன்றாடம் தொலைக்காட்சி ஊடகங்களில் கண்டு களிக்குமாறு அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறோம்!"

இப்படி நான் ஜுன் 10 ந் தேதி ”பா.ஜ.க தலைவர்களின் மூஞ்சி தொங்கிப் போச்சு!” என்கிற பதிவில் எழுதியிருந்தேன்.

டெல்லி சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு இப்படம் சக்கை போடு போடுகிறது. 

இந்த திரை ஓவியத்தின் உச்ச கட்ட காட்சிகள் சில.....


























இந்தப் படம் இன்றே கடைசி அல்ல.

சின்னத்திரையை தொர்ந்து காண்க.

உபயம்: அரவிந்த் கேஜ்ரிவால்.


தொடர்புடைய பதிவுகள்:

கல்யாண மாப்பிள்ளையும் பத்து லட்ச ரூபாய் கோட்டும்!


Saturday, November 1, 2014

அப்ரண்டிஸ்களும் ஆயுட்கால அடிமைகளும்!



அன்று அந்நிய நேரடி முதலீட்டை எதிர்த்து ஓலமிட்டவர்கள் இன்று நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு அயல் நாடுகளை நோக்கி ஓடுகின்றனர். ஏற்கனவே இங்கு முதலீடு செய்த நோக்கியாக்கள் கை நிறைய காசு பார்த்துவுடன், நம்பியவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு விண்ணில் பறக்கின்றனர். அன்று பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு பாதை போட்டு கொடுத்தான் காங்கிரஸ்காரன். இன்று அதே பாதையில் பட்டுக் கம்பளம் விரித்து பாதையை செப்பணிட்டுத் தருகிறான் பாரதிய ஜனதா கட்சிக்காரன். எண்ணூர் பாய்லர் ஆர்டரை ‘பெல்’லுக்கு கொடுத்தது சட்ட விரோதம் என சென்னையிலேயே வழக்கு தொடுக்கிறான் சீனாக்காரன். தாராள மயத்தை தடுக்காவிட்டால் தெரு நாய்கூட நம்மை நோக்கி உச்சா அடிக்காது என்பதற்கு ஏதேனும் உத்தரவாதம் உண்டா? மோடி அரசு போகும் வேகத்தைப் பார்த்தால் இனி ஆலைகளும் நமக்கில்லை; ஆயுள் காப்பீடும் நமக்கில்லை என்பது மட்டும் நிச்சயம்.

தொழிற்சாலை ஆய்வாளர்கள், இனி ஆலைகளை ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை; ஆலை முதலாளிகள் ஆன்லைனில் சமர்ப்பிக்கும் தற்சான்றிதழே போதும் என மகுடி ஊதுகிறார் மோடி.

மின் ஆற்றலை பயன்படுத்தாத நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களின் எண்ணிக்கையை 10 லிருந்து 20 ஆகவும், மின் ஆற்றலை பயன்படுத்தும் நிறுவனங்கள் 20 லிருந்து 40 ஆகவும் உயர்த்திக் கொள்ளவும் மோடி வழிவகை செய்துவிட்டார். இனி இவர்கள் முறையே 19 மற்றும் 39 ஊழியர்களை மட்டுமே நிரந்தரப் பணிகளில் அமர்த்திக் கொண்டு ஏட்டளவில் உள்ள தொழிற்சாலை சட்டங்களிலிருந்தும் தங்களை விடுவித்துக் கொள்ளவும் கேள்வி கேட்பாரின்றி ஊழியர்களின் உழைப்பைச் சுரண்டவும் பச்சைக் கொடி காட்டியாகிவிட்டது.

இரவு நேரப் பணிகளில் பெண்களை அமர்த்திக் கொள்ளவும், கடினமான எந்திரங்களில் பெண்களை வேலையில் ஈடுபடுத்தவும் இனி தடை இல்லை என அறிவித்ததன் மூலம் இனி பெண் ஊழியர்களை வரைமுறையின்றி சுரண்டவும் பாதை வகுத்தாகிவிட்டது.

குறைந்த ஊதியத்தில் ஊழியர்களை அமர்த்திக்கொண்டு, அதன்பிறகு மிகை நேரப்பணி செய்தால் கூடுதல் ஊதியம்; அதன் மூலம் அதிக ஊதியம் என்கிற ஆசையை காட்டி ஏற்கனவே ஊழியர்களின் உழைப்பு சுரண்டப்படும் நிலையில் மூன்று மாத காலத்திற்கான மிகை நேரப் பணியை 50 மணியிலிருந்து 100 மணி நேரமாகவும் மற்றும் சில பணிகளில் 75 மணியிலிருந்து 125 மணி நேரமாகவும் மிகைநேரப் பணி நேரத்தை உயர்த்தியதன் மூலம் உழைப்புச் சுரண்டலை  தீவிரப்படுத்தி உள்ளது மோடி அரசு. இனி ஆலைகள் அருகில் இருந்தாலும் ஆறுமாதம் கழித்துதான் வீட்டிற்குப் போகமுடியும். அன்று இந்தியர்கள் பிழைப்பு தேடி கொத்தடிமைகளாக பர்மாவுக்கும் ஆப்ரிக்காவுக்கும் சென்றதைத்தான் இந்த சட்டதிருத்தங்கள் நினைவு படுத்துகின்றன.

ஏற்கனவே நிரந்தரத் தொழிலில் ஒப்பந்த முறையைப் புகுத்தி, உழைப்பைச் சுரண்ட வழி வகுத்தான் கதர் சட்டைக்காரன். ஆனால் உயிர் வாழ்வதற்காக குறைந்த பட்ச கூலிக்கு உத்தரவாதமாவது செய்து வைத்தான் அவன். இன்று ஆன மட்டும் பயிற்றுனர்களை (Apprentice) பயன்படுத்திக் கொள்ள வழி வகுத்துவிட்டான் காவித்துண்டுக்காரன். இனி உழைப்பாளிகள் அனைவரும் செக்கில் பூட்டப்பட்ட அப்ரண்டிஸ் அடிமைகள்கள்தான். அடிமைகள் துவண்டு போகும் போது அவர்கள் உடலில் உயிர் ஒட்டி இருக்க அவ்வப் பொழுது நாவை நனைத்துக் கொள்ள அவர்களுக்கு ஸ்டைபண்டு கொடுப்பார்கள். அதைக்கூட அரசாங்கத்திடமிருந்து முதலாளிகள் ரீபண்டு செய்து கொள்ளலாம். இனி அப்ரண்டிஸ்களுக்கு கால வரையறை ஏதும் கிடையாது. அவர்களின் ஆயுளே இனி பயிற்சிக்கான கால வரையறையாக அமையும். பிறகென்ன? ஈசி சேரில் முதுகை சாய்த்து முட்டைகோஸ் பக்கொடாவை கொரித்துக் கொண்டே “ஐ ஆம் எ பாரத் பாய்! மம்மி, நான் வளர்கிறேனே!” என எலும்பு துருத்தி நரம்பு புடைக்கும் அப்ரண்டிஸ்களை இனி சின்னத் திரையில் காணலாம்.