Showing posts with label பொங்கல். Show all posts
Showing posts with label பொங்கல். Show all posts

Sunday, January 15, 2023

உழவர்களை உழைப்பின் உச்சாணியில் வை!

எல்லா நாட்களையும் போலத்தான் பண்டிகை நாட்களும்! எனது நீண்ட நெடிய உளவியல் இதுதான். உழைப்பை மதிப்பதும், போற்றுவதும் மட்டுமே மகத்தானது எனக் கருதுபவன் நான். உழைக்கும் ஒவ்வொரு நாளும் எனக்குச் சிறப்பு நாட்கள்தான். அதனால்தான் உழைக்காத சோம்பேறிகள் மீது, அவர்கள் எவ்வளவுதான் பிரபலமானவர்களாக இருந்தாலும், எனக்கு அவர்கள் மீது மரியாதை எதுவும் ஏற்படுவதில்லை. 

யாரெல்லாம் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான உழைப்பில் ஈடுபடுகிறார்களோ, அதாவது உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் கிடைக்க உழைக்கின்றார்களோ அவர்கள்தான் உழைப்பின் உச்சாணியில் வைத்துப் போற்றப்பட வேண்டியவர்கள். இதில் முதலிடம் வகிப்பவர்கள் உழவர் பெருமக்களே. 

உழவர் பெருமக்கள் உள்ளிட்ட உழைப்பாளர்களின் வாழ்வு மலர யாரெல்லாம் உழைக்கிறார்களோ அவர்களும் போற்றப்பட வேண்டியவர்களே. அதனால்தான் காரல் மார்க்ஸ் உலக உழைப்பாளர்களின் உள்ளத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார்.

சங்கிகள் எதை உளப்பூர்வமாக ஏற்காமல், பட்டும் படாமலும் சற்றே ஒதுங்கியும் இருக்கிறார்களோ அந்த நாட்களெல்லாம்தான் எனக்குச் சிறப்பு நாட்களாகத் தோன்றுகிறது. எனது தற்போதைய உளவியல் அதைத்தான் உணர்த்துகிறது. 

அந்தப் பட்டியலில் உழவர் பெருநாள், தமிழ்ப் புத்தாண்டு, திருவள்ளுவர் நாள், மாட்டுப் பொங்கல் இவையெல்லாம் ஒன்றிணைகிறது. 

உயிர் வாழ ஆதாரமாய்த் திகழும் உழவர் பெருநாளையும், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என சமத்துவம் கண்ட வள்ளுவனையும் உயர்த்திப் பிடிப்போம். பிறப்பிலேயே பேதம் காணும், உழவுத் தொழிலை இழி தொழில் என பழித்துரைக்கும் சங்கிகளை, வேங்கடத்திற்கு வடக்கே விரட்டியடிப்போம். காவிச் சாயம் பூசி வரும் எடுபிடி சங்கிகளுக்குப் பாடை கட்டுவோம்.

ஊரான்

Tuesday, January 14, 2014

பொங்கல் வாழ்த்து - வக்கிரம்!


தொலைக்காட்சிகள் மற்றும் செய்தித்தாள் ஊடகங்கள் வாரி வழங்கும் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளும் – சிறப்பு மலர்களும் நம்மை சொர்க்கத்திற்கே இட்டுச் செல்கின்றன. மடாதிபதிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் ‘இனிய பொங்கல் நல் வாழ்த்துகளை’ திகட்டத் திகட்ட வாரி வழங்குகின்றனர். இதை எல்லாம் பார்த்து ‘தை மாத மேக நடனங்களால்’ ‘ஒரு மாது மயங்குவதைப்’ போல நாம் மயங்கிக் கிடக்கிறோமோ என எண்ணத்தான் தோன்றுகிறது.
பட்டி மன்ற பேச்சாளர்களுக்கும், சொற்பொழிவாளர்களுக்கும், பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளை வாரி வழங்கும் குத்தாட்ட -  கும்மளாட்டக் கலைஞர்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் இந்தப் பொங்கல் குதூகலமான பொங்கல்தான். மகிழ்ச்சி எனும் கானல் நீரில் திசை தெரியாமல் நாம் நீந்திக் கொண்டிருக்கிறோம். நம்மை மகிழ்வித்த அவர்களோ அடுத்த நிகழ்ச்சிகளுக்கு தங்களை தயார்படுத்த ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள்.  
இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால் தமிழகம் பெரும் வறட்சியை எதிர் நோக்கியுள்ளது. நெல்லை-கன்னியாகுமரி நீங்கலாக வேலூர் முதல் தூத்துக்குடிவரை இதுதான் நிலைமை. மார்கழி-தை மாதங்களில் நெஞ்சை அள்ளும் நஞ்சையும்-புஞ்சையும் அற்றுப் போய் புல்-பூண்டைக்கூட தேடவேண்டிய அவலத்தில் தமிழக கிராமங்கள். நெல், கரும்பு, வாழை, வேர்க்கடலை, கேழ்வரகு, மிளகாய், முள்ளங்கி, வெங்காயம் என சகலவிதமான பயிர்கள் செழித்து வளர்ந்து பார்ப்போர் நெஞ்சைக் குளிர்விக்கும் பசுமையோடு திகழும் கிராமங்கள் இந்த ஆண்டு கரிசல் காடுகளையே நினைவு படுத்துகின்றன. ஓடைகளும் - ஆறுகளும் வறண்டு போனதால் ஏரிகளும் குளங்களும்  வாய்பிளந்து கிடக்கின்றன. நா வறண்டு உதடு பிளந்தால் எச்சிலாவது சிலசமயம் நம் உதட்டை ஈரப்படுத்தும். அந்த எச்சிலுக்கே வழி இன்றி விழி பிதுங்கி நிற்கின்றாள் 'பூமித்தாய்'.
சம்பா போனாலும் தைப்பட்டமாவது கைகொடுக்கும் என நம்பி விதை விதைத்தான் விவசாயி. கிணற்றுக்கடியில் மிச்சமிருந்த நீரை இறைத்து விதைக்கு உயிர் கொடுத்தான். மரணத்தேதி குறித்தாகிவிட்டது என்பது தெரியாமலேயே பூமியைப் பிளந்து எட்டிப் பார்த்தன பயிர்கள். சொட்டச் சொட்ட ஊறிய நீரை இறைத்தாலும் ஒரு பாத்தி இரண்டு பாத்திக்கு மேலே எட்டவில்லை என்பதால் வறட்சி தாங்கும் மரவல்லிக்கு உயிர் கொடுக்க முயன்றான். கிணற்றைப் நம்பி இனி பயனில்லை என பஞ்சாங்கத்தைப் பார்த்தான். வருணபகவானை நம்பி தீபத்திற்காகக் காத்திருந்தான். வானிலையை கணிப்பதில் சந்திராயன்களும்-இரமணன்களுமே திண்டாடும் போது ஆற்காடு சீதாராமய்யர்களை நம்புகிறோமே என பரிசீலிக்கிற நிலையில் அவன் இல்லை. தீபமும் வந்தது. பக்தர்களின் ஆரோகரா இவன் செவிகளை எட்டியபோது இவனுக்குத்தான் அந்த அரோகரா என்பதை உணராமல் இன்னமும் கருகிய பயிரையும் வானத்தையும் வெறித்துப் பார்த்து காத்திருக்கிறான்.