Friday, April 29, 2011

கையிலோ நவீன ஆயுதங்கள்; அஞ்சுவதோ கொசுக்களுக்கு..!


வேலூர்
கையிலோ நவீன ஆயுதங்கள்; அஞ்சுவதோ கொசுக்களுக்கு..!
First Published : 29 Apr 2011 10:39:31 AM IST


”வேலூர், ஏப். 28: நவீன ரக ஆயுதங்களுடன் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பிஎஸ்எப் வீரர்கள் இரவு நேரங்களில் கொசுக்களுக்கு பயந்து கொசு வலைக்குள் பதுங்குகின்றனர்.
வேலூர் பாகாயத்தில் உள்ள தந்தை பெரியார் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வேலூர், காட்பாடி, கே.வி.குப்பம், அணைக்கட்டு, குடியாத்தம் ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் தனித்தனி கட்டடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
இங்கு எல்லைப் பாதுகாப்பு படை (பிஎஸ்எப்), சிறப்பு அதிரடிப்படை, ஆயுதப்படை, உள்ளூர் போலீஸார் ஆகியோரைக் கொண்ட 4 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிஎஸ்எப் வீரர்களிடம் ராக்கெட் லாஞ்சர்கள், ஒரே நேரத்தில் 100 ரவுண்டுகள், 200 ரவுண்டுகள் சுடக் கூடிய நவீனரக ஆயுதங்கள் உள்ளன.
கொசு தொல்லை அதிகரிப்பு:
இந்நிலையில், தந்தை பெரியார் தொழில்நுட்பக் கல்லூரியில் இரவு நேரங்களில் கொசுத் தொல்லை அதிகமாக இருப்பதால் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், கடந்த சில நாள்களுக்கு முன்னர் இங்கு கொசுமருந்து அடிக்கபட்டுள்ளது. இருந்தபோதும், கொசுத் தொல்லை தொடர்கிறது.
தினந்தோறும் அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் கொசுமருந்து அடித்தால்தான் கொசு பிரச்சனை தீரும் என்கின்றனர் காவலர்கள். இதையடுத்து, ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்ட நவீன ரக ஆயுதங்களுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் பிஎஸ்எப் வீரர்கள் இரவு நேரங்களில் கொசுக் கடியிலிருந்து தப்பிக்க கொசுவலைக்குள் பதுங்கிய நிலையில் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர்.”
-------------------------------------------------------------------------------
தினமணியில் வந்த இந்தச் செய்தியைப் படித்து பலரும் சிரித்திருப்பார்கள். "ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்ட நவீன ரக ஆயுதங்களுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் பிஎஸ்எப் வீரர்கள் இரவு நேரங்களில் கொசுக் கடியிலிருந்து தப்பிக்க கொசுவலைக்குள் பதுங்கிய நிலையில்" என்று படித்தால் யார்தான் சிரிக்க மாட்டார்கள்.
சில நாட்களுக்கு முன்புதான் கொசு மருந்து அடித்தார்களாம். ஆனாலும் கொசுத்தொல்லை தாங்க முடியவில்லையாம். அதனால் தினந்தோறும் அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் கொசுமருந்து அடித்தால்தான் கொசு பிரச்சனை தீரும் என்கின்றனர். 
30 நாள் தொல்லைக்கே இப்படி அஞ்சி நடுங்கினால் 365 நாட்களுக்கும் இந்தத் தொல்லைகளை அனுபவிக்கும் நாங்கள் எங்கே சென்று பதுங்குவது? இந்தக் கேள்வியை இதுவரை தினமணிகூட கேட்டதில்லையே.

கொசுத் தொல்லையைப் பற்றிய விரிவான ஒரு அலசல் இதோ:
http://hooraan.blogspot.com/2011/03/blog-post_26.html

1 comment:

  1. ////30 நாள் தொல்லைக்கே இப்படி அஞ்சி நடுங்கினால் 365 நாட்களுக்கும் இந்தத் தொல்லைகளை அனுபவிக்கும் நாங்கள் எங்கே சென்று பதுங்குவது?/////

    அடடா நிஜாயமான கேள்வி தான்..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)

    ReplyDelete