Monday, March 16, 2015

அரை டிரவுசர்களால் ‘லோல்படும்’ இந்தியா! - 2

26.05.2014 ல் அரை டிரவுசர்கள் செங்கோட்டைக்குள் நுழைந்த பிறகு இந்தியாவே லோல்படுகிறது. இவர்களின் பேச்சும், பேட்டிகளும், அறிக்கைகளும், விவாதங்களும், கொள்கைகளும், நடைமுறையும் இந்தியாவை படுத்தும் பாட்டை எப்படி எடுத்துச் சொல்வது என கடந்த மூன்று மாதங்களாக தொகுக்க முயற்சித்தேன். தொகுக்க தொகுக்க பட்டியல் மட்டும் நீள்கிறது. ஒவ்வொன்றை பற்றியும் விரிவாக எழுதலாம். அப்படி சிலவற்றை சற்று விரிவாக எழுதவும் செய்தேன். இவர்களைப் பற்றி எழுதத் தொடங்கினால் வேறு எதைப்பற்றியும் எழுத முடியாது என்பதே உண்மை. ஆகையினாலே இவர்களின் செயல்களை பட்டியலிட்டாலோ போதும் எனக் கருதுகிறேன். விளைவுகளை முடிந்தவரை சொல்ல முயற்சித்துள்ளேன். மற்றவைகளை வாசகர்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

முந்தைய தொடர்ச்சி... 

28. வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் நூறு நாட்களில் இந்தியாவுக்கு மீட்பதில் அவசரப்பட முடியாது என பல்ட்டி – ஙொப்பன் குதிருக்குள் இல்லையாம்!

29. ஆதார் அட்டை அவசரம் – ஆள்காட்டி வேலையை சுலபமாக்க.

30. ரேசன் மான்யம் இரத்து – “அம்மா தாயே! கஞ்சிக்கு வந்திருக்கேம்மா!” என உடைந்த ஓட்டை எடுத்துக் கொண்டு போ. பழையதும் புளித்ததும் தாராளமாய் கிடைக்கும்.

31. சமையல் எரிவாயு மான்யம் – மான்யமும் தானமும் உனக்கில்லையப்பா. மனுவைக் கேள். யாருக்கு என்பதை அவன் சொல்லுவான்.

32. மளிகைக் கடைகளில் ஐந்து கிலோ எரி வாயு – அப்பதானே அதானிகள் கொழிக்க முடியும்.

33. பெட்ரோல் - டீசல் மான்யம் வெட்டு: காசு இருந்தால் வண்டி ஓட்டு. இல்லை என்றால் காயலாங்கடையைப் பாரு.

34. மண் எண்ணெய் வெட்டு – மண் எண்ணெய் இருந்தால் என்ன; இல்லாவிட்டால் என்ன? பஜனை செய்ய பூஜை விளக்கு எண்ணெய் இருந்தால் போதுமே! அவாள் வீட்டில் எப்பொழுதும் வெளிச்சம்தானே!

35. நூறு நாள் வேலைத் திட்டம் முடக்கம் – அம்மா இலவசமாகவே படி அளக்கும் போது இத்தாலிகாரிக்கு இங்கே என்ன வேலை!

36. ‘கிளீன் இந்தியா' – மடிப்பு கலையாத 10 லட்ச ரூபாய் கோட்டு மட்டும்தான கிளீனாகத் தெரியுது. மத்தபடி கூவம் நாத்தம் கோயம்புத்தூர் போனாலும் நம்ம கூடவே வருது.

37. ‘மேக் இன் இந்தியா' – மாமா வேலையின் மறுபெயரோ!

38. தொழில் நடத்துவது, சேவை செய்வது அரசின் வேலை அல்ல; நிர்வாகம் செய்வது மட்டுமே (குட் கவர்னன்ஸ் - good governance) அரசின் வேலையாக இருக்க வேண்டும் - உச்சிக் குடுமிகளின் உரத்த கூப்பாடு.

39. ரயில்வே துறை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வெளிநாட்டு தனியார் முதலீடு – அவாளுக்கு ஆர்டினரி கிளாஸ் அலுத்துப் போச்சாம். எ.சி கிளாஸ் இல்லாட்டி வேர்த்துக் கொட்டுதாம்!

40. காப்பீட்டுத்துறையில் அந்நிய நேரடி முதலீடு 26% லிருந்து 49% மாக அனுமதி – அமெரிக்கா போன அம்பிகள் கையில் டாலர்கள் குவிந்திருக்காம்!

41. கெயில் (GAIL), பெல் (BHEL) உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை – எதுக்கடா ஒங்களுக்கெல்லாம் இடஒதுக்கீடு? ஆப்பு வெச்சுட்டோமில்ல!

42. எச்.எம்.டி. (HMT) நிறுவனத்துக்குச் சொந்தமான மூன்று பொதுத்துறை ஆலைகள் உட்பட ஐந்து பொதுத்துறை நிறுவனங்களை மூடப்படும். இதுதவிர ஏர் இந்தியா, எம்.டி.என்.எல். (MTNL) உட்பட 65 பொதுத்துறை நிறுவனங்கள் மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ளதால் அவைகளுக்கும் விரைவில் மூடுவிழா நடத்தப்படும் – எதுக்கடா ஒங்களுக்கெல்லாம் இடஒதுக்கீடு? ஆப்பு வெச்சுட்டோமில்ல!

43. தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தங்கள் – பக்தியினால் வேலை செய்பவனுக்கும், தேவடியாள் மகனுக்கும், குலவழியாக தொழில் செய்பவனுக்கும் எதற்கு சட்ட பாதுகாப்பு? (மனு: 8-415).
44. தொழிற்சாலைகளில் ஆய்வு தேவையில்லை – ஆன்லைனே போதும்: ஆலை விபத்துகளில் செத்துப் போனவர்களை கணக்கெடுக்க மட்டும் நேரில் வந்தால் போதும்!

45. ஒப்பந்த மற்றும் பயிற்சிப் பணியாளர்களை வரைமுறையின்றி அமர்த்திக் கொள்ளலாம் – கடந்த முப்பது ஆண்டுகளாக டி.வி.எசும், சிம்சனும் செய்வதைத்தான் தற்போது எல்லோருக்குமானதாக விரிவு படுத்துகிறோம்!

46. இ.எஸ்.ஐ (ESI) மருத்துவக் கல்லூரிகள் மூடல் – சூத்திரன் மேலோருக்கு சேவை செய்ய வேண்டும் என விதி இருக்கும் போது சூத்திரனுக்கு எதற்கு மருத்துவச் சேவை?

47. திட்டக் குழு கலைப்பு – நிதி ஆயுக் உருவாக்கம்: குரங்குக் கையில் ஆப்பம்!

48. சுகாதாரத்திற்கு 6000 கோடி ரூபாய் குறைப்பு – இங்கே குறைத்தால்தானே அவர்கள் (தனியார் மருத்துவமனைகள்) கொழுக்க முடியும்.

49. அதானிக்கு கடன் கொடுக்க நான்கு வங்கிகளுக்கு அரசு உத்தரவு – ஆட்சிக்கட்டிலை பெற்றதற்கு நன்றிக் கடன் செலுத்த வேண்டாமா!

50. கார்பரேட் நிறுவனங்களுக்கு 2.70 லட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகை. இதுவும் நன்றிக் கடனுக்காகத்தான்!

51. விவசாயக் கடனுக்கு வட்டி அதிகரிப்பு – விவசாயத்தை ஒழிக்க வேண்டும் என்றால் இதுதானே வழி.

52. நிலம் கையகப்படுத்தும் சட்டம்: நிலத்துக்காரன் அனுமதி தேவையில்லை. ”உழுதுண்டு வாழவாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” என்றான் ஐயன் வள்ளுவன். 

“பயிரிடுதல் இம்சையான தொழில், கீழான தொழில், சிலர் வேண்டுமானால் பயிரிடுதல் சிறந்ததென்று சொல்லலாம், இரும்பை முகத்திலேயுடைய கலப்பையும் மண்வெட்டியும் பூமியையும் பூழியிலுண்டான பல பல ஜெந்துக்களையும் வெட்டுவதால் பயிர்த் தொழிலை பெரியோர்கள் (பார்ப்னர்கள்தானே அன்றைய பெரியோர்கள்) நிந்திப்பதால் பிராமணர்கள் இத்தொழிலை ஒருபோதும் செய்யக்கூடாது; போஜனத்துக்கு வேறு வழி இல்லை என்றால்தான் பிராமணர்கள் பயிர்த்தொழிலில் ஈடுபடலாம். அதுவும் அந்நியனைக் கொண்டுதான் செய்ய வேண்டும். நேரடியாக பார்ப்பனர்கள் பயிர்த் தொழிலில் ஈடுபடக்கூடாது” என்றான் மற்றொரு அய்யன். (மனு: 10-83, 84). 

அதனால்தானோ என்னவோ “கண்டதுண்டா! கண்டதுண்டா! ஏர் ஓட்டும் பார்ப்பானைக் கண்டதுண்டா? களை பறிக்கும் பாப்பாத்தியைக் கண்டதுண்டா!” என அன்று பெரியார் தொண்டர்கள் முழங்கினார்களோ! உன் தொழிலையே மதிக்காதவன் உன்னையா மதிக்கப் போறான்!

53. கிராமப்புற வங்கிகளை தனியார் மயமாக்குவது – பாமரனின் பானைகளை உடைக்காமல் விடமாட்டான் போலிருக்கே!

தொடரும்......

தொடர்புடைய பதிவுகள்:

பா.ஜ.க தலைவர்களின் மூஞ்சி தொங்கிப் போச்சு! உச்ச கட்ட காட்சிகள்!

கல்யாண மாப்பிள்ளையும் பத்து லட்ச ரூபாய் கோட்டும்!

4 comments:

  1. Overall good. But some overdose on Brahmin community. Modi himself is not brahmin

    ReplyDelete
  2. பிற்படுத்தப்பட்டவரா - தாழ்த்தப்பட்டவரா - பிராமணரா என்பதை மட்டும் வைத்த இவர்களை எடை போடக்கூடாது. இவர்கள் எதற்காக - யாருக்காக சேவை செய்கிறார்கள் என்பதிலிருந்து புரிந்து கொண்டால் overdose என்று கருதும் சிலவும்கூட சரிதான் என்பதே எனது கருத்து.

    ReplyDelete
  3. அனானியின் இயலாமையைப் பார்த்தீர்களா!

    ReplyDelete