Sunday, March 22, 2015

கடவுள் ஒரு செங்கிஸ்கான்-வீழ்த்துங்கள் அவனை!

”நான் நாத்திகம் பேசுவதற்கு காரணம் என்னுடைய ஆணவமா? அகந்தையா?

எனது பாட்டனாரும் எனது தந்தையும் பக்திமான்களாக இருந்தும் எனது பள்ளிப் படிப்பின் போது காலையும் மாலையும் காயத்ரி மந்திரம் சொல்லி பிரார்த்தனை செய்து சிறு வயதில் பக்தனாக இருந்த நான் எப்படி நாத்திகன் ஆனேன்?

ஒரு வழக்கு தொடர்பாக நான் கைது செய்யப்பட்டு காவலில் இருந்த போது அவ்வழக்கில் எனக்கு தூக்கு தண்டனைகூட விதிக்கப்படலாம் என்ற நிலையில் இரண்டு வேலையும் கடவுளை வணங்கச் சொல்லி காவலர்கள்  என்னைத் தூண்டிய போதும் மிகவும் இக்கட்டான நிலையிலும் நான் தொடர்ந்து நாத்திகனாகவே  இருக்க முடிந்ததேன்?

மதங்கள் எல்லாம் மக்களுக்காகத்தான் எனில் அவைகளுக்குள் வேறுபாடுகள் ஏன்? இந்து மதத்திற்குள்ளாகவே ஆரிய சமாஜம், சனாதன தர்மம் என பிரிவுகள் ஏன்?

துன்பமும் துயரமும் சதா நடந்து கொண்டிருக்கும் போது கடவுள் சர்வ வல்லமை படைத்தவன் எனில் இதை எல்லாம் போக்காமல் ஒரு நீரோ மன்னனைப் போல - ஒரு செங்கிஸ்கானைப் போல அவன் நடந்து கொள்வதேன்? படைக்காதிருக்கக்கூடிய சக்தியும் கடவுளிடம் இருக்கும் போது எதற்காக கடவுள் மக்களைப் படைத்தான்?

சாதித் திமிர்கொண்ட மேல்சாதிக்காரன் கீழ்சாதிக்காரனை தீண்டத் தகாதவனாக நடத்துவதற்கும், மமதையும் பேராசையும் உச்சி முதல் உள்ளங்கால் வரையில் கொண்ட ‘குதிக்கும்’ பார்ப்பனர்களால் வேண்டுமென்றே நிர்மூடத்தனத்தில் ஆழ்த்தி அமுக்கப்பட்டிருக்கும் தாழ்த்த்தப்பட்ட மக்களின்  தண்டனைக்குப் பொறுப்பாளி யார்? உங்களுடைய பரிசுத்த ஞான நூற்களாகிய வேதங்களிலிருந்து சில வாக்கியங்களை அவர்கள் கேட்டாலும் அவர்களுடைய காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டுமென்று தண்டனை விதித்ததற்கு அபராதம் செலுத்த வேண்டியவர்கள் யார்?”

இப்படி கடவுள் மதம் குறித்து பகத்சிங் சரமாரியான கேள்விக் கணைகளைத் தொடுத்து “கற்றுணர் - எதிராளிகளின் பலமான ஆட்சேபங்களுக்கு அச்சமின்றி ஆணித்தரமான ஆப்புகளும், கண்டனங்களும் கொடுப்பதற்காகக் கற்றுணர். உன்னுடைய இலட்சியம், கொள்கை இவைகளின் போக்கைப் பரிசீலனை வாதங்களால் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு கற்றுணர்” என்கிற உணர்ச்சிகள் தன்னுடைய மனதின் வாசற்படியில் கடல் அலைகளைப் போன்று கிளம்பி தாவித்தாவி முட்டி மோதி விசயங்களை கற்றுணர ஆராய்ந்தறியத் தொடங்கியதின் விளைவாக அவரிடம் பெறும் மாற்றங்கள் நிகழ்ந்தன. அவர் ஒரு நாத்திகன் ஆனார்.

புதியவற்றைக் கற்றுணர்வதற்கு பகத்சிங் நமக்கெல்லாம் ஒரு வழிகாட்டி!

மார்ச் 23 பகத்சிங் மற்றும் அவரது சக தோழர்கள் சுகதேவ், ராஜகுரு ஆகியோரின்  நினைவு நாள்.


சுகதேவ் - பகத்சிங் - ராஜகுரு
மேலும் படிக்க:

1.நான் நாத்திகன் ஏன்?
தமிழில் பா.ஜீவானந்தம்.
வெளியீடு கீழைக்காற்று வெளியீட்டகம். 10, அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை 600 002. தொ.பே எண் 044-28412367
விலை: ரூ15/=

2.The Daring Youth of India : BAGATH SINGH. by: Col.Raghvinder Singh.
Published by: VIJAY GOEL, S-16, Naveen Shahdara, Delhi-110032 Phone: 22324833 e-mail: goelbooks@rediffmail.com
விலை: ரூ75/=

மேலும் பார்க்க:
The Legend of Bhagat Singh (2002) - Hindi Movie

https://www.youtube.com/watch?v=x-Zz6nobDik


4 comments:

  1. சிறந்த கருத்துப் பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  2. புதியவற்றைக் கற்றுணர்வதற்கு பகத்சிங் நமக்கெல்லாம் ஒரு வழிகாட்டி!

    ReplyDelete