Saturday, June 15, 2024

கடவுள் என்ன காட்சிப் பொருளா?

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அபிசேகத்திற்கு கட்டணம் ரூபாய் 2500.

கட்டணத்தைப் பார்த்து ஆதங்கப்பட்டு இவ்வாறு எழுதுகிறார் ஒரு பக்தர்.

"காசு கொடுத்து கடவுளைக் காண கடவுள் என்ன காட்சிப் பொருளா?"

ஆம் இதில் என்ன சந்தேகம்? கடவுளர்களுக்கு மகிமையை ஏற்றிச் சொல்லி அவற்றை காட்சிப்படுத்திக் காசாக்குவதுதானே அன்றும் இன்றும் என்றும் நடப்பது. 

தமிழ்நாட்டுக்காரர்கள் திருப்பதி நோக்கி படையெடுக்கிறார்கள். அங்கே மொட்டை போட்டு பட்டை நாமத்தோடு திருப்பி அனுப்புகிறார்கள். ஆந்திரக்காரர்கள் திருவண்ணாமலை நோக்கி படையெடுக்கிறார்கள். இங்கே நாமத்திற்குப் பதிலாக பட்டை அடித்து திருப்பி அனுப்புகிறார்கள்.

கோவில் is nothing but an exibition centre. Consumer ஐக் கவரவும், கல்லாவை நிரப்புவதற்குமே காட்சிப்படுத்துதல்கள்.

கடவுளும் ஒரு நுகர் பொருள்தான். கடைகளுக்குச் சென்றால் காசு கொடுத்து பொருளை வாங்கி நுகர்ந்து மகிழ்கிறோம். கோவில்களுக்குச் சென்றால் காசு கொடுத்து அருளை வாங்கி அகமகிழ்கிறோம். 
முன்னதில் நுகர் பொருள் எதார்த்தமானது. பின்னத்தில் அருள் அருவமானது. 

கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்கிறபோது மக்களின் வீடு நோக்கி அவர் ஏன் வருவதில்லை? மாறாக அவர் இருக்கும் இடம் நோக்கி ஏன் மக்களை அழைக்கிறார்? அழைப்பது அவர் அல்ல, அவரை நம்பி வாழும் ஒரு சிறு கூட்டம். மக்களின் துன்ப துயரங்கள்தான் அந்தச் சிறு கூட்டத்தின் இன்ப வாழ்வுக்கு மூலதனம்.

துன்பங்களும் துயரங்களும் தொடரும் வரை குன்றுகளில், ஆற்றுப்படுகைகளில் கடவுளர்கள் தோன்றிக் கொண்டேதான் இருப்பார்கள். 

மக்களின் துன்ப துயரங்கள் நீங்கி, கடவுளர்களை காட்சிப் படுத்தி வேடிக்கைப் பார்க்கும் ஒரு சமூகக் கட்டமைப்பு வராமலா போகும்? 

ஊரான்

No comments:

Post a Comment