Thursday, December 11, 2025

சங்கிகளின் சங்கை அறுக்கும் சித்தர்கள்! - 7

“கூறரிய நால் வேதம் கூப்பிட்டும் காணாத
பார ரகசியத்தைப் பார்த்திருப்பது எக்காலம்? (48)”

நான்கு வேதங்களை ஓதினாலும் கடவுளைக் காண இயலாது எனவும்,


“ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே
சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்? (125)”

சாதி, மத, வர்க்க வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட சமத்துவ சமுதாயம் அமைய வேண்டும் என்ற சித்தர்களின் ஆழ்ந்த ஏக்கத்தையும், கபிலர் போன்ற பெரியோர்களின் ஞான உபதேசத்தைப் பின்பற்றி அப்படிப்பட்ட உலகத்தில் வாழ்வது எப்போது நிகழும்,  என அவாவெழுப்பி,

"வாசித்தும் காணாமல் வாய்விட்டும் பேசாமல்
பூசித்தும் தோன்றலாப் பொருள் காண்பது எக்காலம்? (140)"

வேதங்கள், ஆகமங்கள் போன்ற நூல்களைப் படித்துப் புரிந்துகொண்டாலும், ஞானிகள் உபதேசித்த போதனைகளைக் கேட்டும், வாயால் பேசி விளக்கமளித்தும், பூசை, தியானம் போன்ற வழிபாடுகளைச் செய்தாலும், உண்மையை உணர முடியாது என்பதோடு,

“வேதாந்த வேதம் எல்லாம் வீட்டேறியே கடந்து 
நாதாந்த மூல நடு இருப்பது எக்காலம? (147)”

வெறும் வேதப் புத்தக அறிவைக் கொண்டு அறிவை (ஞானத்தை)  அடைய முடியாது எனவும்,

“சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கி
சூத்திரத்தைக் கண்டு துயர் அறுப்பது எக்காலம்? (155)”

சாத்திரங்களையும், நான்கு வேதங்களையும் தூக்கி எறிந்துவிட்டு, சூத்திரங்களின் உண்மையான பொருளை உணர்ந்து, துன்பங்களை நீக்கி, அறிவு (மெய்ஞ்ஞான) நிலையை அடைவது எப்போது?

எனக் கேட்கிறார் பத்திரிகிரியார்.

தொடரும்

ஊரான்

No comments:

Post a Comment