வேதங்களையும் சாஸ்திரங்களையும் புராணங்களையும் சாதிகளையும் கல் செம்பு சிலைகளைக் கொண்டே அடித்து நொறுக்குகிறார் வால்மீகர் எனும் சித்தர். இவை எல்லாம், வேதாந்திகளின் வயிற்றுப் பாட்டுக்கே எனச் சாடுகிறார்.
***
ஆமப்பா வுலகத்தில் பெருநூல் பார்த்தோர்
அவரவர் கண்டதையெல்லாம் சரிதை யென்பார்
ஓமப்பா கல்செம்பைத் தெய்வ மென்றே
உருகுவார் பூசிப்பார் கிரியை யென்பார்
வாமப்பா யோகமென்று கனியாய் தின்று
வாய்பேசா வூமையைப் போல்திரிகு வார்கள்
காமப்பா ஞானமென விண்டு மேலும்
காக்கை பித்தன் மிருகம்போல் சுற்றுவாரே. (4)
சுற்றுவார் பெருநூலைப் பார்த்துப் பார்த்துத்
தூடிப்பா ருலகத்தில் சிற்சில் லோர்கள்
தெற்றுவா ரவர்கள் பிழைக்க அனேக வேடம்
தேகத்தி லணிந்துகொண்டு திரிகு வார்கள்
பற்றுவார் குருக்களென் பார்சீட ரென்பார்
பையவே திட்சைவைப்பார் தீமை யென்பார்
கத்துவார் திரிமூர்த்தி தாமே யென்று
காரணத்தை யரியாத கசடர் தானே. (5)
தானென்ற வுலகத்தில் சிற்சில்லோர்கள்
சடை புலித்தோல் காசாயம் தாவடம் பூண்டு
ஊனென்ற வுடம்பெல்லாம் சாம்பல் பூசி
உலகத்தில் யோகியென்பார் ஞானி யென்பார்
தேனென்ற சிவபூசை தீட்சை யென்பார்
திருமாலைக் கண்ணாலே கண்டோம் மென்பார்
கானென்ற காட்டுக்கு ளலைவார் கோடி
காரணத்தை யறியாமல் கதறு வாரே. (6)
நில்லென்ற பெரியோர்கள் பாடை யாலே
நீடுலகம் தன்னுள்ளே நாலு வேதம்
வல்லமையாய்ச் சாத்திரங்கள் ளிரு மூன்றாக
வயிறுபிழை புராணங்கள் பதினெட் டாகக்
கல்லுகளைக் கரைப்பதுபோல் வேதாந் தங்கள்
கட்டினா ரவரவர்கள் பாடை யாலே
தொல்லுலகில் நாற்சாதி யனேகஞ் சாதி
தொடுத்தார்க ளரவர்கள் பிழைக்கத் தானே. (8)
வால்மீகர்
பதினெண் சித்தர்களில் ஒருவர்
(வடமொழியில் இமாயணம் எழுதிய வால்மீகர் அல்ல இவர்)
தொடரும்
ஊரான்
.jpeg)
No comments:
Post a Comment