“சாத்திரம் பார்த்தாலுந் தானுமென்ன? வேதம்
தானுமே பார்த்திருந் தாலுமென்ன? (16)”
என, சாஸ்திரங்களையும் வேதங்களையும் பார்ப்பதனால் என்ன பயன் எனக் கேட்பதோடு,
கொங்கண நாயனார்
“சாதி பேதங்கள் சொல்லுகி றீர்தெய்வம்
தானென் றொருவுடல் பேதமுண்டோ? (95)”
என சாதி பேதம் பேசும் சனாதனிகளைச் சாடுவதோடு,
“எல்லா மறிந்தவ ரென்றுசொல் லியிந்தப்
பூமியி லேமுழு ஞானியென்றே
உல்லாச மாக வயிறு பிழைக்கவே
ஓடித் திரிகிறார் வாலைப்பெண்ணே! (103)
என வயிறு வளர்க்கவே எல்லாம் தெரிந்தவர் போல் வேடம் போடும் சனாதன குருமார்களை முச்சந்தியில் நிறுத்துகிறார் கொங்கண நாயனார் எனும் சித்தர்.
***
“நந்த வனத்திலோ ராண்டி-அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டுவந் தானொரு தோண்டி-மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி. (4)
என்ற பிரபலப் பாடலைப் பாடிய கடுவெளிச் சித்தர் கேட்கிறார்,
கடுவெளிச் சித்தர்
“காசிக்கோ டில்வினை போமோ-அந்தக்
கங்கையா டில்கதி தானுமுண் டாமோ?
பேசுமுன் கன்மங்கள் சாமோ?-பல
பேதம் பிறப்பது போற்றினும் போமோ? (15)”
"பொய் வேதந் தன்னைப் பாராதே-அந்தப்
போதகர் சொற்புத்தி போத வாராதே!
மையவிழியாரைச் சாராதே-துன்
மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே. (24)"
என கலவரக்காரர்களான சனாதனிகளோடு சேராதே என எச்சரித்துள்ளார்.
“சிவமன்றி வேறே வேண்டாதே-யாருக்குந்
தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே
தவநிலை விட்டுத் தாண்டாதே-நல்ல
சன்மார்க்க மில்லாத நூலை வேண்டாதே. (26)
கடவுளை வணங்கு, ஆனால், பக்தியின் பெயரால் இன்று திருப்பரங்குன்றத்தில் கலவரத்தைத் தூண்டும் சங்கிகள் போன்று நடவாதே என அன்றே எச்சரித்துள்ளதோடு,
“எவ்வகை யானநன் னீதி-அவை
எல்லா மறிந்தே யெடுத்து நீ போதி
ஒவ்வா வென்றே பல சாதி-யாவும்
ஒன்றென் றறிந்தே யுணர்ந்துற வோதி. (32)”
என பல சாதி இல்லை, மனிதர்கள் எல்லாம் ஒன்றென்று உறைப்பதோடு,
‘கள்ள வேடம் புணையாதே-பல
கங்கையி லேயுன் கடம் நனையாதே
கொள்ளை கொள்ள நினையாதே-நட்பு
கொண்டு புரிந்துநீ கோள் முனையாதே. (33)
என்று எச்சரிக்கிறார் கடுவெளிச் சித்தர்.
தொடரும்
ஊரான்
.jpg)
.jpeg)
No comments:
Post a Comment