பாரேது, புலனேது? அனலு மேது?
பாங்கான காலேது? வெளியு மாகும்
நாரேது பூவேது வாச மேது?
நல்ல புட்பமந்தானேது பூசை யேது?
ஊரேது பேரேது சினமு மேது?
ஓகோகோ அதிசயந்தா னென்ன சொல்வேன்
ஆறேது குளமேது கோயி லேது
ஆதிவத்தை யறிவதனா லறிய லாமே. (10)
புகலுவார் வேதமெல்லாம் வந்ததென்று
பொய்பேசிச் சாத்திரங்கள் மிகவும் கற்றே
அகலுவார் பெண்ணாசை விட்டோமென்றே
அறிவுகெட்டே ஊர்தோறுஞ் சுற்றிச் சுற்றிச்
சகலமுமே வந்தவர்போல் வேடம் பூண்டு
சடைமுடியுங் காசாயந் தன்னைச் சாற்றி
இகலுமன மடங்காமல் நினைவு வேறாய்
எண்ணமெலாம் பெண்ணாசை பூசை தானே. (16)
பூசையது செய்வமென்று கூட்டங் கூடிப்
புத்திகெட்டுக் கைம்முறையின் போக்கை விட்டுப்
பாசையது மிகப்பேசிப் பாட்டும் பாடிப்
படிப்பார்கள் மந்திரத்தின் பயனைக் காணார்
ஆசையிலே பெண்ணாசை மயக்கத் தாலே
அங்கிருந்த வாமத்தைப் பங்கு போட்டுப்
பேசையிலே மனம் வேறாய் நினைப்பான் பாவி
புரட்டுருட்டாய் நினைவு தப்பிப் பேசுவானே. (17)
கரூவூரார்
பதினெண் சித்தர்களில் ஒருவர்
தொடரும்
ஊரான்
.jpeg)
No comments:
Post a Comment