Showing posts with label ஆத்மா. Show all posts
Showing posts with label ஆத்மா. Show all posts

Tuesday, August 13, 2024

ஆன்மாவும் ஆழ்ந்த இரங்கலும்!

ஒரு மனிதன், தன் வாழ்நாளில் பார்க்கின்ற, கேட்கின்ற, ருசிக்கின்ற, நுகர்கின்ற, உணர்கின்ற அத்தனை தகவல்களையும் தொகுத்துப் பார்த்து, தனக்கான ஒரு கருதுகோளை அல்லது உளவியலை உருவாக்கிக் கொள்கிறான். அதுவே அவனது உளவியலின் சாரம். இதற்கு ஏற்பவே, அவனது சிந்தனையும், ஆளுமையும் வெளிப்படுகிறது. 
 
துயரப்படுவோர் மீதான கழிவிரக்கம், கொடும் குற்றங்களுக்கு எதிரான கோபம், மன நிறைவு தரும் மகிழ்வான தருணங்கள் என ஒவ்வொரு மனிதனும் வெளிப்படுத்துவது அவனது உள்ளார்ந்த உளவியல் சாரத்தைத்தானே?

 
இந்த உள்ளார்ந்த உளவியல் சாரம், அனைவருக்கும் உண்டுதானே? இதுதானே அவனது ஆன்மாவாகவும் இருக்க முடியும். இங்கே பக்தியை மட்டும் ஆன்மாவோடு முடிச்சுப் போடுவது ஒருதலையானது. பக்திமானின் சாரமும் பகுத்தறிவாளனின் சாரமும் தன்மையில் வேறுபட்டாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு உளவியல் சாரம் இருக்கும்தானே?
இப்படித்தான் வாழ வேண்டும் என ஒருவன் தனக்காக வகுத்துக் கொண்ட வழிமுறைதான் ஆன்மீக நெறி என்றால் அது சரிதானே?
 
எனவே, ஆன்மா அல்லது ஆத்மா பக்தியோடு மட்டும் தொடர்புடையதாகப் பார்ப்பது பிழையானது. ஆன்மீகம் என்கிற உளவியல் சார்ந்த மனித சாரம் அனைவரிடமும் குடிகொண்டுள்ளது.
 
ஒரு மனிதனின் உயிர் பிரிந்த பிறகு, அந்த மனிதனின் உளவியல் சார்ந்த சாரமும் முடிவுக்கு வருகிறது. ஆனாலும், அவன் வெளிப்படுத்திய அவனது சாரம்  பிறரால் உள்வாங்கிக் கொள்ளப்பட்டு மீண்டும் மீண்டும் பேசப்படுகிறது.
 
ஒருவனுக்குக் கெடுதல் செய்தால், அவனது ஆவி அல்லது ஆன்மா அல்லது ஆத்மா 'உன்னை சும்மா விடாது' என கெடுதல் செய்வோரை எச்சரிக்கும் நோக்கிலும் இந்த ஆன்மா கோட்பாட்டை பலரும் நம்புகின்றனர்.

பிறருக்காய் ஓயாது உழைத்தவர்கள் இதுவரை பட்டது போதும் என்பதனாலோ,
இதுவரை பிறரை பாடாய்ப் படுத்தியது போதும், இனியும் படுத்த வேண்டாம் என்பதனால்தானோ என்னவோஒருவரின் உயிர் பிரிந்த பிறகு,
அவர் எவராயினும், ‘அன்னாரது ஆன்மா சாந்தி அடையட்டும்’ என ஆழ்ந்து இரங்குகிறதோ நம் மனம்?
 
ஒரு மனிதனின் உளவியல் சாரத்தைத்தான் நான் ஆன்மாவாக அல்லது ஆத்மாவாக புரிந்து கொள்கிறேன். ஆன்மா நம் கண்ணுக்குப் புலப்படாதது, ஒரு மனிதனின் உயிர் பிரிந்த பிறகும், அது உலவிக் கொண்டிருக்கிறது அல்லது பிரிதொரு உடலில் மீண்டும் தஞ்சமடைகிறது அல்லது அடைக்கலமாகிறது என்கிற புனைவு பொருத்தமற்றது என்றே நான் கருதுகிறேன்.
 
புறத்தே இருந்து பெறப்படும்  உள்ளீடுகள் மாறும் பொழுது அல்லது வேறுபடும் பொழுது ஒரு மனிதனின் உள்ளார்ந்த உளவியல் சாரமும் வேறுபடத்தானே செய்யும். ஆன்மா நிலையானது என்பதும் இங்கே நிலையற்றதாகிறது. இங்கே, பழைய ஆன்மா முற்றிலுமாக அகற்றப்பட்டு புதிய ஆன்மா தோன்றுவதும் இயல்புதானே? எனவே, ஆன்மா அழிவற்றது என்ற கருதுகோளும் இங்கே அடிபட்டுப் போகிறது.
 
வாகனங்கள் பரபரக்கும் சாலையைக் கடந்து செல்ல பரிதவிக்கும் ஒரு மூதாட்டியைக் கரம் பிடித்து மறுபக்கம் சேர்ப்பவனுக்கோ ஆத்ம திருப்தி.
 
பசியால் வாடும் ஏழைகளின் பசியாற்றுவதில் சிலருக்கு ஆத்ம திருப்தி.
 
கோடி கோடியாய் கொள்ளை அடித்ததில்
நலிந்தோரின் துயர் துடைக்க
கொஞ்சம் கிள்ளிக் கொடுப்பதில் ‘வள்ளல்களுக்கும்’
ஆத்ம திருப்திதானே?
 
கொடுஞ் செயல் புரிவோனை, தடுக்கத் துணிவில்லை என்றாலும் நாக்கப் பிடுங்கற மாதிரி நாலு வார்த்தை கேட்டு விட்டால் சிலருக்கு ஆத்ம திருப்தி.
 
கெட்டழியும் இச் சமூகத்தை சீராக்கத் துடிக்கும் இளைஞனின் நெஞ்சக் குமுறல் அவனது ஆத்மாவின் வெளிப்பாடுதானே?
 
பார்ப்பதையெல்லாம் பதிவாய்ப் போடுவதில் எனக்குள் எழுவதும் ஒரு ஆத்ம திருப்திதானே?
 
துணிந்தவனின் ஆன்மா ஆக்கபூர்வமானது. கோழைகளின் ஆன்மா கதைக்கு உதவாதது.
 
உங்களிடம் இருப்பது எத்தகைய ஆன்மாவோ?

ஊரான்

Wednesday, July 24, 2024

சடங்குகளில் வயிறு வளர்க்கும் புரோகிதர்கள்!

ஒரு மனிதன் இறந்த பிறகு உயிர் உடலை விட்டுப் பிரிந்தாலும் அவனது ஆத்மா ஆவியாக உலவிக்கோண்டுதான் இருக்குமாம். உயிரோடு இருந்த போது அவன் செய்த பாவ புண்ணியங்களைப் பொருத்து அவனது ஆத்மாவை நரக லோகத்திற்கு அனுப்புவதா இல்லை சொர்க்க லோகத்திற்கு அனுப்புவதா என்பதை சித்திரகுப்தனை வைத்து தீர விசாரித்து எமதர்மன் தீர்ப்பு எழுதுவானாம்.‌

தீர்ப்பு எழுதிய பிறகு அந்த ஆத்மா சொர்க்கத்தை நோக்கியோ அல்லது நரகத்தை நோக்கியோ பயணிக்கும் போது பல்வேறு லோகங்களைக் கடந்து செல்ல வேண்டுமாம்.‌ அதற்குக் கால அவகாசம் பிடிக்குமாம். ஒரு மாதம் முடியும் போது ஆத்மாவிற்கு அகோரப்பசி எடுக்குமாம். பசியைப் போக்கிக் கொள்ள தனது வீட்டை நோக்கி திரும்பி ஓடிவருமாம். அப்பொழுது படையல் போட்டு சாப்பாடு தயாராக வைத்திருக்க வேண்டுமாம். அங்கே வரும் ஆத்மா சாப்பாட்டில் உள்ள சத்தை மட்டும் உறிஞ்சி வயிற்றை நிறப்பிக்கொண்டு மீண்டும் சொர்க்கத்தை நோக்கியோ அல்லது நரகத்தை நோக்கியோ பயணிக்குமாம்.ஒரு மாதம் கழித்து மீண்டும் வருமாம். மீண்டும் படையல், உணவை உறிஞ்சி வயிற்றை நிறப்புதல், மீண்டும் சொர்க்கத்தை நோக்கிய அல்லது நரகத்தை நோக்கியப் பயணம்….

இப்படியாக ஓர் ஆண்டு முடியும் போது பெரும் பசியோடு ஆத்மா வருமாம் அப்பொழுது பெரும் படையல் போட வேண்டுமாம்இப்படி மாதந்தோறும் ஆண்டு தோறும் ஆத்மாவின் பசியை ஆற்ற போடப்படும் படையலுக்குப் பேர்தான் நீத்தாருக்குக் கொடுக்கும் திதியாம்.

80 வயதில் ஒரு தந்தை இறக்கும் பொழுது அவருடைய மகனின் வயது ஒரு 50 என்று எடுத்துக் கொண்டாலும் அதன் பிறகு அந்த மகன் தனது இறுதிக் காலம் வரை கிட்டத்தட்ட 80 வயது வரை அதாவது 30 ஆண்டுகளுக்கு இறந்த தனது தந்தைக்குத் திதி கொடுக்க வேண்டும். தந்தை இறக்கும் வயதைப் பொருத்து இந்தக் காலம் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கும். இப்படி திதி கொடுப்பது தலைமுறை தலைமுறையாகத் தொடர்கிறதே ஒழிய அந்த ஆத்மாவானது சொர்க்கத்தையோ அல்லது நரகத்தையோ அடைந்ததாகத் தெரியவில்லை‌. 

இப்படியாக ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு ஆண்டும் ஆத்மாவின் வயிற்றை நிறப்புகிறேன் என்ற பெயரில் புரோகிதப் பார்ப்பனர்கள் தங்கள் வயிற்றை நிறப்பிக் கொள்கிறார்கள்.

திதி கொடுக்கும் அவசியத்தைப் பற்றி விளக்கும் ஒரு புரோகிதப் பார்ப்பானின் வீடியோ ஒன்றை முகநூலில் பார்த்துவிட்டு கீழ்கண்ட கருத்தைப் பதிவு செய்தேன்.


ன்னென்ன கதை விடுறான் பாருங்க பொழப்புக்காக? அடேய்! திதி கொடுக்கிறது ஆத்மாவின் வயிற்றை நிறப்ப அல்ல; உன்னைப்போன்ற பார்ப்பானின் வயிற்றை நிறப்ப நடப்படுவதுதான் திதி. நல்லா உருவாக்கி இருக்கீங்கடா கதையை”.

இதில் என்ன தவறு இருக்கிறது? இதுதானே உண்மை. அதனால்தானே எனது இந்தக் கருத்தின் மீது நூற்றுக்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.  
திதி கொடுக்கவில்லை என்றால் அதாவதுஆத்மாவிற்கு படையல் போடவில்லை என்றால் குடும்பத்திற்கு பெரும் கேடு விளையுமாம். இந்த அச்சம்தானே பார்ப்பானின் மூலதனம்.

தங்களது பிழைப்புக்காக திதி கொடுப்பது போன்ற எண்ணற்ற சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் உருவாக்கி அதன் மூலம் இன்றுவரை வயிறு வளர்ப்பவர்கள் பார்ப்பனர்கள்தானே!

இது குறித்து அம்பேத்கர் அவர்கள் என்ன சொல்லி இருக்கிறார் என்பதை அடுத்து பார்ப்போம்.
 
தொடரும்.
 
ஊரான்
 
தொடர்புடைய பதிவுகள்