Showing posts with label ஜனநாயகம். Show all posts
Showing posts with label ஜனநாயகம். Show all posts

Tuesday, April 15, 2014

தேர்தல் களம்-3: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!


நமது வேட்பாளர் சொல்வது போல இந்தியாவிலும் தேர்தலில் வெற்றி பெற்றுச் செல்பவர்கள் முற்றிலும் சுயேச்சையானவர்களாக, கட்டு திட்டம் ஏதுமற்றவர்களாகத்தானே இருக்கிறார்கள்.

வேட்பாளர்கள் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து நமது காலைத் தொட்டு இன்று வாக்கு சேகரிக்கிறார்கள். ஆனால் வெற்றி பெற்றுச் சென்ற பிறகு இவர்களை சந்திக்க நம்மால் முடிகிறதா? அல்லக்கை(அடியாட்கள்)கள் மனது வைத்தால் மட்டுமே சந்திக்க முடியும். வெற்றி பெற்றவர்களை சந்திப்பதற்கே நாம் சில ஆயிரங்களை செலவிட நேரிடுகிறது.

போட்டியிடுவதற்கு தனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்கிற ஒரே காரணத்திற்காகவே பல ஆண்டுகள் கட்சியில் கொட்டை போட்டவர்கள் அடுத்த நொடியில் வேறு கட்சிக்குத் தாவி அங்கே வேட்பாளராக அறிமுகமாகிறார்கள். இல்லையேல் ஜஸ்வந்த்சிங் போல பார்மரில் சுயேச்சையாகிறார்கள். அதுவும் இயலாத போது தி.மு..வின் ரித்தீஷ் போல .தி.மு. விற்குத் தாவுகிறார்கள்.

போட்டியிட வாய்ப்பு கொடுத்தாலும் வெற்றி பெறமுடியாது எனத் தெரிந்தால்தோற்போம் எனத் தெரிந்த பிறகும், எதற்காக இருக்கிற கை காசை இழக்க வேண்டும்? அரசியலில்செட்டில்ஆகமுடியாது என்றாலும் வாழ்க்கையில்செட்டில்ஆகிவிடலாம்!” எனக் கணக்குப் போட்டு எதிர்க்கட்சி வேட்பாளர்களிடம் கோடிகளை கைமாற்றிக் கொண்டு வேட்பு மனுவையே செல்லாக் காசாக்கும் பா.. வின் நீலகிரி குருமூர்த்திகளும் இருக்கத்தானே செய்கிறார்கள்!

பல ஆண்டு காலம் அரசியலுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டதாக சவடால் அடிக்கும் பேர்வழிகள் தங்களின் அரசியல் வாழ்க்கையை நிலை நிறுத்திக் கொள்ளவதற்காக ஒட்டியிருந்த கோவணத்தையும் அவிழ்த்துப் போட்டுவிட்டு அம்மணமாய் அலையும் நாஞ்சில் சம்பத்துகள், பண்ருட்டி ராமச்சந்திரன்கள், பரிதி இளம்வழுதிகளும் நம்மிடையேதானே உலாவுகிறார்கள்.

ஆளும் கட்சியில் வெற்றி பெற்றவர்கள் தங்களுக்கு மந்திரி பதவியோ அல்லது எதிர்பார்த்த வேறு பதவிகளோ கிடைக்கவில்லை என்றால் எதிர்கட்சிக்குத் தாவி ஆட்சியையே கலைக்க முயல்கிறார்கள். ஆளும் கட்சியில் நீண்ட காலம் பதவியில் இருந்தும் சம்பாதிக்க வழி இல்லை என்றால் ஆட்சிக்கு எதிராக சதிவேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

எதிர்க்கட்சியில் வெற்றி பெற்றவர்களைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. “வெற்றி பெற்று என்ன பயனைக் கண்டோம்?” என பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு கேப்டனுக்கே கல்தா கொடுத்து விட்டுதாயே உன்னடி சரணம்!” என அருண்பாண்டியன்களைப் போல சரணாகதியடைகிறார்கள்.

சேதுக்கால்வாயை அடையாளம் காட்டியதே தான்தான் என நேற்றுவரை மார் தட்டிவிட்டு இன்று அது சுற்றுச் சூழலுக்குக் கேடானது என அறிவியல் பெருமக்கள் கூறுவதாக நா கூசாமல் வைகோவால் பேசமுடிகிறது. ஒரு நடிகனை அரசில்வாதியாக பார்ப்பது மானக்கேடு என நேற்றுவரை பம்மிவிட்டு இன்று தனது மகனுக்காக அதே நடிகனோடு ராமதாசால் கூட்டணி அமைக்க முடிகிறது. இப்படி அரசியலில் அந்தர் பல்டி அடிக்காத வாக்கு சீட்டு அரசியல்வாதிகள் – இடதுசாரிகள் உள்ளிட்டு – யாரேனும் உண்டா?

ஜொசோதாபென் என்ற பெண்ணுடன் நடந்த திருமணத்தை மோடி இது வரை ஏன் மறைத்தார்? இப்போது தனக்கு திருமணம் ஆனதை ஏன் ஒப்புக்கொண்டார்? தன்னை நம்பி வந்தவரையே மறந்த போடியிடம் இந்தியாவை ஒப்படைத்தால் என்னவாகும்?” என எதிர்தரப்பினர் சரமாரி கேள்விகள் எழுப்புகின்றனர். மோடியை கேள்வி கேட்கும் யோக்கியவான்களே! கருணாநிதியைப் பாருங்கள்!” என அவரது மூன்று மனைவிகள் மற்றும் வாரிசுகளை எடுத்துக் காட்டுகிறார்கள்.

இவர்கள் பிரபலமான தலைவர்கள் என்பதால் இவர்களின் அந்தரங்கம்வெளிச்சத்துக்கு வந்து விடுகிறது. ஆனால், வாக்குச் சீட்டு அரசியல் கட்சிகளின் வட்ட - ஒன்றியமாவட்ட - மாநில நிர்வாகிகளின் அந்தரங்க வாழ்க்கை பெரிய தலைவர்களின் அந்தரங்க வாழ்க்கையைவிட மிகக் கேவலமாக இருப்பினும் அவை அவ்வளவாக பேசப்படுவிதில்லை.

இப்படிப்பட்டவர்கள்தான் வாக்குச் சீட்டு அரசியல் கட்சிகளில் - அது மாநிலக் கட்சியாக இருப்பினும், தேசியக் கட்சியாக இருப்பினும், சாதிமதக் கட்சிகளாக இருப்பினும் - நிறைந்திருக்கிறார்கள். பரிசுத்தவான்களாக அவதாரம் எடுக்கும் புதிய கட்சிகளின் மக்கள் பிரதிநிகளும் வெகுவிரையில் இன்ன பிற அரசியல்வாதிகளைப் போலவே அம்பலப்பட்டு நிற்கின்றனர். தேர்தலில் போட்டியிட 'சீட்' வாங்கித் தருவற்கு பணம் கேட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அருணா சிங், அசோக்குமார் ஆகிய இரு தலைவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவருமே ஜனநாயகம் பற்றி வாய் கிழியப் பேசுகிறார்கள். ஆனால் இவர்கள் அங்கம் வகிக்கும் கட்சியில் குறைந்த பட்ச ஜனநாயகத்தையாவது கடை பிடிக்கிறார்களா? கட்சிக்குள் பெரும்பான்மையினரின் முடிவை அனைவரும் ஏற்க வேண்டும் என்பதும் மாற்று கருத்து இருப்பினும் பெரும்பான்மையினரின் முடிவையே செயல்படுத்த வேண்டும் என்பதும் ஜனநாயகத்தின் மிக அடிப்படையான அம்சம். ஆனால் வாக்குச் சீட்டு அரசியல் கட்சிகளில் இத்தகைய ஜனநாயகம் கடைபிடிக்கப்படுகிறதா? உரிய தகுதி இல்லை என்றாலும் எதிர்கால நலனைக் (தன்நலன்) கருதி தங்களது வாரிசுகளை அரசியலில் நுழைப்பதும், அரசியிலில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள பண பலம், சாதி - மத பின்புலம், அடியாள் பலம்  என சகல விதமான ஜனநாயக விரோத வழிமுறைகள் அனைத்தையும் கையாள்கின்றனர்.

கட்டு திட்டம் ஏதுமற்ற இத்தகைய நபர்களை, வாக்காளர்களாகிய நாம்  எப்படி கட்டுப்படுத்துவது? இது குறித்து நமது வேட்பாளர் என்ன சொல்கிறார் என்பதை இனி பார்க்கலாம்.

தொடரும்……..

தொடர்புடைய பதிவுகள்:

தேர்தல் களம்-2: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!
தேர்தல் களம்-1: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!
தமிழகமே திருமங்கலமாக மாறுமா?
சாபமா? வரமா? கேப்டனுக்கு எது பலிக்கும்?
கேப்டன் கேடட் ஆன கதை!
"முள்ளுக்காட்டில் மல்லுக்கட்டு!" த்ரில்லர் பட கருத...
மலத்தைக் கவ்வப் பன்றிகள் படையெடுப்பு!
எட்டப்பர்களை வீழ்த்தாமல் எதிரிகளை ஒழிக்க முடியாது!...
யாருக்கும் வெட்கமில்லை!
கொள்ளையடிப்பதில் கெட்டிக்காரன் யார்? வடக்கத்தியானா..