Saturday, August 8, 2015

மூடு டாஸ்மாக்கை!

மதுக்கடைகளை மூடவேண்டும் என்கிற கோரிக்கை பல காலமாக பல்வேறு கட்சிகளால்  - இயக்கங்களால் எழுப்பப்பட்டாலும் அது தற்போது தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை உடனடியாக அமுல் படுத்த வேண்டும் என்கிற மக்களின் கோரிக்கையாக வலுப்பெற்றுள்ளது. சமீப காலத்தில் இந்தப் போராட்டம் ஏன் வலுப்பெற்றுள்ளது? அதற்காக உழைத்தவர்கள் யார்? உமைப்பவர்கள் யார்? என்கிற சுருக்கமான வரலாறு இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

மதுவுக்கு எதிரான போராட்டம் வெற்றி பெறவேண்டும். இல்லையேல் தமிழகம் நாசமாயப் போவதை யாராலும் தடுக்க முடியாது. போராடிக் கொண்டிருக்கும் போராளிகள் அனைவருக்கும் பாராட்டுதல்களையும் வாழ்த்துகளையும் தெரிவிக்க வேண்டியது மனிதனாயப் பிறந்த ஒவ்வொருவரின் கடமையாகும்.

24.12.2012: சென்னை, குரோம்பேட்டையில் பெண்கள் விடுதலை முன்னணியினர் டாஸ்மாக் சாராயக்கடைகளுக்கு எதிரான போராட்டம்.


15.02.2013: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் அழிவிடைதாங்கி கிராமத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் தலைமையில் அக்கிராம மக்கள் டாஸ்மாக் சாராயக்கடையை அடித்து நொறுக்கினர். 9 பேர் கைது செய்யப்பட்டு 19 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு பிணையில் வெளியே வந்தனர். இன்று நடைபெறும் போராட்டங்களுக்கு வித்திட்டது அழிவிடைதாங்கி போராட்டமே!



25.09.2014: திருச்சியில் பெண்கள் விடுதலை முன்னணியினர் டாஸ்மாக் சாராயக்கடைகளுக்கு எதிரான போராட்டம்.


ஜீன் 2015 முதல் மூடு டாஸ்மாக்கை! என்கிற முழக்கத்துடன் மக்கள் அதிகாரம் தொடங்கி வைத்த பிரச்சாரம்.


26.06.2015: பதுச்சேரியில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர்  சாராயக்கடையை அடித்து நொறுக்கினர்.




15.07.2015: திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர் டாஸ்மாக் சாராயக்கடையை அடித்து நொறுக்கினர்.



01.08.2015: மார்த்தாண்டம்,உண்ணாமலைக்கடை டாஸ்மாக் சாராயக்கடையை மூடக்கோரி செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய காந்திய வாதி சசிபெருமாளின் மரணம்.



டாஸ்மாக் சாராயக்கடைகளுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என் கோரிக்கை மேலும் வலுவடைய சசிபெருமாளின் மரணம் மிக முக்கிய காரணமாக அமைந்தது.

02.08.2015: கலிங்கப்பட்டியில் ம.தி.மு.க தலைமையில் டாஸ்மாக் சாராயக்கடை அடித்து நொறுக்கப்பட்டது. மதுவுக்கு எதிரான போராட்டம் அறவழியில் சாத்தியமில்லை என்பதை கலிங்கப்பட் உணர்த்தியது.



03.08.2015: சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் தலைமையில்  டாஸ்மாக் சாராயக்கடை அடித்து நொறுக்கப்பட்டது டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை தமிழகம் முழுவதும் பெருங்காட்டுத்தீயாய் பரவ வித்திட்டது.



முழுமையான மதுவிலக்க கோரிக்கை இன்று தமிழக மக்களின் கொரிக்கையாக வலுப் பெற்றுவிட்டது. எத்தனை அடக்குமறைகளை ஏவிட்டாலும் போராட்டங்கள் தொடரும் என்பதைத்தான் இன்றை போராட்டங்கள் உணர்த்துகின்றன.

தற்போது நடைபெற்று வரும் போரட்டங்களிலிருந்து சில காட்சிகள்.













போராட்டம் தீவிரமடைவதைக் கண்ட தி.மு.க, வி.சி.க, தே.மு.தி.க, CPI, CPM, SDPI, காங்கிரஸ், பா.ஜ.க என பல்வேறு அரசியல் கட்சிகள் இன்று போராட்டக் களத்தில் இறங்கியுள்ளன - இதில் பெரும்பாலான கட்சியினர் அரசியல் ஆதாயம் தேட முனைந்தாலும் -  இவர்களின் போராட்டங்களும் மதுவிலக்கு கோரிக்கைக்கு வலு சேர்க்கவே செய்யும்.


இதோ! புறப்பட்டுவிட்டது அடுத்தத் தலைமுறை. மதுவற்ற தமிழகம் காண தோள் கொடுப்போம். போராளிகளுக்கு!

No comments:

Post a Comment