Showing posts with label அண்ணாமலை. Show all posts
Showing posts with label அண்ணாமலை. Show all posts

Thursday, August 22, 2024

பிரபலம் எனும் பாழுங்கிணறு: ஜாக்கிரதை!

பொதுவுடமைக் கோட்பாட்டிற்குக் குறைவான எது ஒன்றும், ஒன்று அது சீர்திருத்தத்திற்கு  வித்திடும் அல்லது பிழைப்புவாதத்திற்கு இட்டுச் செல்லும். திரைத்துறை மூலம் கிடைக்கும் பிரபலத்தைப் பயன்படுத்திக் கொண்டோ அல்லது சாதி - மதப் பின்புலத்தைப் பயன்படுத்திக் கொண்டோ கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம் என்று பேசிக்கொண்டு சிலர் அரசியலுக்குள் நுழைவார்கள்.

பிழைப்பதற்கு இதுவரை எந்தக் கட்சியிலும் பொறுப்பு கிடைக்காமல் வெளியில் காத்திருந்த புதிய முகங்களும், மற்றபிற கட்சிகளில் நீண்ட காலமாக இருந்தும், பொறுப்பும் பிழைக்க வாய்ப்பும் கிடைக்காதவர்களுமே முதலில் இத்தகையப் புதிய கட்சிகளை நோக்கிப் படையெடுப்பார்கள்


பெரும்பாலும் இவர்களே புதிய கட்சியின் கிளை, வட்ட, ஒன்றிய, மாவட்டப் பொறுப்புகளில் நியமிக்கப்படுவார்கள். பாமர மக்களும் பிரபலம் எனும் கவர்ச்சியில் மயங்கி பாழுங்கிணற்றை நோக்கி நகருவார்கள்.

அரசு ஒப்பந்தங்களை எடுத்து காசு பார்ப்பது, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட உரிமங்களைப் பெறுவது, தொழில் தொடங்குகிறேன் என்ற பெயரில் வங்கிகளில் இருந்து சுலபமாகக் கடன் பெற்று பிறகு பட்டை நாமம் போடுவது, அரசு புறம்போக்கு நிலம் மற்றும் கேட்பாரற்றுக் கிடக்கும் தனியார் நிலங்களை ஆக்கிரமிப்பது அல்லது அபகரிப்பது, லட்சங்களிலும் கோடிகளிலும் புரளும் கொடுக்கல் வாங்கல்களில் நீதி அரசர்களாக அவதாரம் எடுப்பது உள்ளிட்டத் தொழில்களைச் செய்வதற்கு மேற்கண்ட கிளை-வட்ட-ஒன்றிய-மாவட்டப் பொறுப்புகளே இவர்களுக்கு ஆயுதங்களாகப் பயன்படுகின்றன.  

எங்கேயாவது எக்குத் தப்பாக சிக்கிக்கொண்டால் அதே பொறுப்புகள்தான் இவர்களுக்குக் கேடயங்களாகவும் பயன்படுகின்றன

கஞ்சா-போதைப் பொருள் கடத்தல், பாலியல் அத்துமீறல்கள், தில்லுமுல்லு, மோசடி, ஏமாற்று, அடிதடி, மோதல், கொலை இவைதான் இவர்களின் வழமையானச் செயல்கள். நில மோசடி உள்ளிட்ட கட்டப் பஞ்சாயத்துகளில் நடைபெறும் கொலைகளில் சம்பந்தப்பட்டவர்கள் - பொதுவுடமைக் கட்சிகளைத் தவிர்த்து - பிற சர்வ கட்சியைத் சேர்ந்தவர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி.

ஒரு சில ஆண்டுகள் கழித்து இத்தகையப் புதிய கட்சிகள், பாழும் கிணறுதான் என்பதை பட்டுணர்ந்து, மக்கள் இவர்களை நிராகரிக்கும் பொழுது, ஏதோ ஒரு பின்புலத்தைக் கொண்டு மீண்டும் ஒருவர் வருவார்.  வரலாறுகளை விட எதிர்காலமே மக்களுக்கு முக்கியம் என்பதால், மீண்டும் முதலில் இருந்து தொடங்குவார்கள்.

பொதுவுடைமை பேசுவோர் மத்தியில் ஒரு சில குறைகள் இருந்தாலும் அவர்கள் மட்டும்தான் மக்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உத்தரவாதம்

களைகளுக்கு உரம் போட்டு வளர்த்தால், பொதுவுடமை எனும் பயிர்கள் எப்படி வளரும்? களைகளை அப்புறப்படுத்தி பயிர்களை 
அரவணைத்தால் விளைச்சல் அமோகமாக இருக்குமல்லவோ?

பிரபலம் எனும் பாழுங்கிணறு: ஜாக்கிரதை!
 
 ஊரான்

Thursday, September 21, 2023

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-13, இறுதிப் பகுதி

இதுவரை சனாதான தருமம் குறித்து மிக சுருக்கமாகவே பதிவு செய்ய முயற்சித்துள்ளேன். சனாதன தருமத்தின் மூல நூல் மனுதருமம் என்பதால் பெரும்பாலும் அதிலிருந்தே மேற்கோள்கள் காட்டி உள்ளேன். 

சனாதன தருமத்தில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இல்லை. இதன் விளைவாகத்தான் சாதிய ஏற்றத் தாழ்வுகளும், தீண்டாமையும் இன்றளவும் கோலோச்சுகிறது. 'இந்து சாதி முறை, தேச வளர்ச்சிக்கு மகப் பெரிய இடையூறாக இருக்கிறது. இந்தியாவில் 75% மக்கள் உரிமை இழந்தவர்களாக ஆக்கப்பட்டுள்ளதால், இந்தியா இறந்துபட்ட நாடு என்ற நிலையை அடையாவிட்டாலும், சிதைந்து வரும் நாடாக ஆயிற்று' என்பார் அம்பேத்கர் (தொகுதி 7). 

சனாதனம் எப்படி உயிர் வாழ்கிறது?

பிறப்பு முதல் இறப்பு வரை, ஏன் இறந்த பிறகும், ஒரு இந்து தனது வாழ்க்கையில் கடைபிடிக்கும் ஜாதகம் கணித்தல், வலைகாப்பு, திருமணச் சடங்குகள், கிரகப்பிரவேசம், பிறப்பு இறப்புச் சடங்குகள், யாகம் வளர்த்தல், திதி கொடுத்தல், புனித யாத்திரை, பரிகாரம் தேடுதல், கோவில்களுக்குச் சென்று வழிபடுதல் உள்ளிட்ட எண்ணற்ற சடங்குகள் சம்பிரதாயங்களுக்குப் பின்னே புரோகிதர் இருக்கிறான். இதன் மூலம் ஒரு பக்கம் நமது வருவாயின் ஒரு பகுதியை புரோகிதன் பறித்துக் கொள்வதோடு சனாதன தருமத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறான். 

சனாதனத்தைப் பலவீனப் படுத்த...

வாழ்வின் சுக-துக்க நிகழ்வுகளுக்கு புரோகிதனை அழைக்காதீர்கள். குடும்பப் பெரியோர்களைக் கொண்டு முடித்துக் கொள்ளுங்கள். அதிலும், சனாதான தருமத்தின் வழிகாட்டுதலைப் புறந்தள்ளி மாற்று முறைகளைக் கைக்கொள்ளுங்கள். பயிரிடுதலை இழி தொழில் (மனு 10: 84) என்று வசைபாடி, உழைக்காமல் உண்டு கொடுக்கும்  புரோகிதத் தொழிலை விட்டு பார்ப்பனர்கள் வெளியேறட்டும்.

பக்தி உள்ளவர்கள் வீட்டிலேயே வழிபாடு செய்யுங்கள். சனாதனத்தின் கோட்டைகளாக இருக்கும் கோவில்கள் அர்ச்சகனோடு புதைந்து போகட்டும். 

வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் துன்ப-துயரங்களுக்கான காரணங்களை அறிவியல் பூர்வமாகக் கண்டறிந்து அதைப் போக்குவதற்கு பகுத்தறிவுப் பாதையில் பயணிக்க முயற்சிப்போம். 

அகமண முறைதான் சாதி தோன்றுவதற்கும், சாதியக் கட்டமைப்பு நீடிப்பதற்கும் அடிப்படை என்று அம்பேத்கர் அவதானித்தாலும், புறச்சாதியில் கலப்பு மணம் புரிவோர், திருமணத்திற்குப் பிறகு சாதியையும் சேர்த்தே சுமப்பதால், சாதி அவர்களை விட்டு அகலவில்லை. ஆனாலும், காதல் திருமணங்கள், சாதியக் கட்டமைப்பில், விரிசலை ஏற்படுத்துவதால், சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

சுயமரியாதையோடு வாழ...

நூறு வயது சத்திரியனைவிட பத்து வயது பிராமணனே மரியாதைக்குரியவன் (மனு 2: 135) என்று சொல்லும் சனாதனத்தை ஏற்று, பார்ப்பனப் பொடியன்களின் காலில் நெடுஞ்சான்கிடையாக விழுந்து ஆசிபெறும், ஆடு அண்ணாமலையைப் போல சுயமரியாதையிழந்து மானங்கெட்டு வாழாமல், நெஞ்சை நிமிர்த்தி சுயமரியாதை உள்ள மனிதனாய் வாழப் பழகிக் கொள்வோம்.


கல்வியில் முன்னுரிமை

பார்ப்பனரல்லாத பிற சாதியினர், பெண்கள் உள்ளிட்ட தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுத்து அனைத்துத் துறைகளிலும், குறிப்பாக அரசுத் துறைகளில், வேலை வாய்ப்புகளைப் பெறும்போதுதான் அங்கே நீடிக்கும் பார்ப்பன மேலாதிக்கத்தில் உடைசலை ஏற்படுத்த முடியும். 

2024 நாடாளுமன்றத் தேர்தலில்...

சனாதனத்தை மீட்டெடுக்க முயலும் பாரதிய ஜனதா கட்சியை, ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றுவது உடனடி அவசரக் கடமையாக என்பதால், வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சிக் கூட்டணியை படுதோல்வி அடையச் செய்வது சனாதானத்திற்குக் கொடுக்கும் ஒரு பெரிய அடியாக இருக்கும்.

மனமாற்றமா? போராட்டமா?

மக்களின் அன்றாட வாழ்வில் சனாதனக் கருத்துக்களைப் புகுத்தி, அவர்களை இந்து என்ற சட்டகத்திற்குள் அடைத்து, இப்படித்தான் ஒரு இந்து வாழ வேண்டும் என்று பெரும்பான்மை உழைக்கும் மக்களை இந்து மதத்திற்குள் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது சனாதனம்.

இந்து சமூகத்தில் நிலவும், சாதியக் கட்டமைப்பே, மன்னராட்சி-நிலவுடமை காலத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒரு சுரண்டல் வடிவமாகும். ஒவ்வொரு பிரிவினருக்குமென ஒரு தொழிலைத் தீர்மானித்து, அவர்கள் அந்தத் தொழிலைத்தான் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று வரையறுத்தது, குலத்தொழில் முறையிலான ஒருவகை வர்க்கப் பிரிவினையாகும். அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தை தொடர்ந்து சுரண்டுவதற்கான ஒரு ஏற்பாடாகத்தான் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை மோடி அரசு இன்று கொண்டு வந்துள்ளது.

தீண்டாமை உள்ளிட்ட இந்து மத நம்பிக்கைகள், கருத்தளவில் நீடிக்கும் வெறும் உளவியல் பிரச்சனையா, மனதளவில் மாற்றிக் கொள்வதற்கு? அது அவனது மத நம்பிக்கையோடு தொடர்புடையது. விதிவிலக்காக, இந்து மத நம்பிக்கைகளை கைவிட்ட சொற்பமான ஒரு சிலர் வேண்டுமானால் மாறக்கூடும். ஒட்டுமொத்த மக்களையும் அப்படி மாற்றிவிட முடியாது.

கருத்துத் தளத்தில், சனாதன தருமம் சமூக கட்டமைப்பின் மேல் தளத்திலும், வர்க்கப் பிரிவினை என்ற அடிப்படையில் சமூகத்தின் அடிக்கட்டுமானத்திலும் நீடிப்பதால், மதத்திற்கு எதிரான சீர்திருத்தப் போராட்டங்கள் மூலமாகவும், சுரண்டலிலிருந்து மக்களை விடுவிக்கின்ற வர்க்கப் போராட்டங்கள் மூலமாகவும்தான் சனாதனத்தை முற்றிலுமாக வீழ்த்த முடியும். 

சீர்திருத்தமும் வர்க்கப்போராட்டமும்

பெண் அர்ச்சகர்கள் உள்ளிட்ட அனைத்து சாதி அர்ச்சகர் நியமனம், சமத்துவபுரங்கள், பார்ப்பனரல்லாதோருக்கான இட ஒதுக்கீடு-குறிப்பாகப் பெண்களுக்கான தனி ஒதுக்கீடு போன்ற சில சீர்திருத்த நடவடிக்கைகள் சனாதனத்தில் பெரும் உடைப்பை ஏற்படுத்துவதால், அவற்றை ஆதரித்து ஊக்கப்படுத்தும் அதே வேளையில், உழைப்புச் சுரண்டலிலிருந்து ஒட்டு மொத்த மக்களையும் விடுவித்து சுதந்திரம்-சமத்துவம்-சகோதரத்துவத்தை உத்தரவாதம் செய்யும் பொதுவுடமைச் சமூகத்தை அமைப்பதற்கான பாதையில் முன்னேற வேண்டும். 

சனாதான தருமம், அதாவது, இந்து மதம் இருக்கும் வரை சாதி இருக்கும், சாதி இருக்கும் வரை தீண்டாமை நீடிக்கும். சனாதன தருமம் இல்லாதொழியும் போதுதான் தீண்டாமையும் ஒழியும்.

மனிதனின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் போது, மதத்தின் தேவையும் முடிவுக்கு வரும். இது, இந்து மதம் உள்ளிட்ட எல்லா மதங்களுக்கும் பொருந்தும். ஆனால் இருக்கின்ற மதங்களிலேயே ஆகக் கொடியது இந்து மதம் என்பதால், அதை எவ்வளவு விரைவில் வீழ்த்த முடியுமோ அவ்வளவு விரைவில் வீழ்த்த வேண்டும்.

சனாதனத்திற்கு எதிரானப் போராட்டம் கடந்த காலங்களிலும், நிகழ்காலத்திலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அவர்கள் தங்களுடைய நூல்களையேத் திருத்தத் தொடங்கி விட்டார்கள். நான்காவது வருணத்தவர்கள் சூத்திரர்கள் என்று நேற்று வரை புத்தகம் போட்டவர்கள் இன்று அதை வேளாளர்கள் என்று திருத்திப் போடுகிறார்கள். 

வருணப் பிரிவுகள், ஒருவரின் பிறப்பினால் தீர்மானிக்கப்படுவதல்ல; மாறாக, அது அவர்களின் செயலால், குணத்தால் தீர்மானிக்கப்படுவது என்று கதை அளந்து கொண்டிருக்கிறார்கள் சனாதனிகள். "வருணங்களை ஒருவரின் குணத்தைக் கொண்டு தீர்மானித்தால், கடைசியில் வருண அமைப்பு தலைகீழாக மாறிவிடும். வருண ஏற்பாடு என்பது குலைந்து போய்விடும். ஆகவே, செயலினால் மட்டும் வருண அமைப்பைத் தீர்மானிப்பது சரியல்ல" (ஸ்ரீமத் பகவத் கீதா, பக்கம்: 274, நாக்பூர் வெளியீடு) என்று வெளிப்படையாகவே தெளிவுபட்டுவிட்டது நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் தலைமையகம். 

கீதையையே திருத்தி எழுதுபவர்கள், சனாதனத்தின் இழிவுகளை மூடி மறைக்க நாளை எதையும் செய்யத் துணிவார்கள்! 

2022 இல் கீதை, நாக்பூர் வெளியீடு

1919 இல் மனுதருமம்

அவர்கள் சொல்வது போல, சனாதனம் அழிவில்லாதது; என்றும் நிலைத்திருப்தல்ல. மாறாக, உடன் கட்டை ஏறுதலுக்குத் தடை, குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், விதவைகள் மறுமணம், தேவதாசி முறை ஒழிப்பு உள்ளிட்ட எண்ணற்ற சனாதனப் பழக்க வழக்கங்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு சனாதனத்தின் ஒரு பகுதி வீழ்த்தப்பட்டுள்ளது. 

Hence, sanatan is not eternal. It should be eradicated as soon as possible.

சனாதனம் குறித்த விரிவான விவாதத்திற்கு வித்திட்ட, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி!

வணக்கம்!

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

Saturday, August 5, 2023

'அக்கா'வின் ஆட்டுக் குட்டி தலையாட்டுமா?

ஆடு வளர்த்தாவது பெரியாளாகிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டான் அந்தத் தாடிக்காரன். சீமைக்(காய்)குட்டியே சிறந்த குட்டி என்று கணக்குப் போட்டு தேடிப் பிடித்து ஓட்டி வந்தான். இலை கிடைக்கும் இடமாய்ப் பார்த்து வளர்க்கத் தொடங்கினான். 

ஆடு குட்டியாய் இருக்கும்போது பார்ப்பதற்கு அழகாய்த்தானே இருக்கும். அதனால் போவோர் வருவோரெல்லாம் குட்டியை கொஞ்சத் தொடங்கினர். 

பலமுறை, பிடறியால் தன்மொகரையைப் பேர்த்தபோதும்,  பாவம் குட்டிதானே' என்று பொறுத்துக் கொண்டான் இலை கொடுத்தவன்.

கொங்கக்காவின் பராமரிப்பில் பக்குவமாய் வளர்ந்து வந்தது ஆட்டுக் குட்டி. குட்டிக்குப் பசி எடுக்கும் போதெல்லாம், அது வேலி தாண்டக்கூடத் தயங்கியதில்லை. அக்கம் பக்கம் சண்டைக்கு வந்த போதும், அவள் பொருமை காத்தாள். எப்படியாவது எதையாவது தின்று குட்டி பெருத்தால் சரி என்பது அவள் கணக்கு.

குட்டி இப்பொழுது கொழுகொழுவென வளர்ந்து கிடாவாகி விட்டது. கோவிலுக்கு நேர்ந்து விட்டாற்போல அது ஊரெங்கும் திரியத் தொடங்கியது. 

தூர விரட்ட நினைத்தோரை அது முன்னங்கால்களால் எட்டி உதைத்தும், குட்டைக் கொம்புகளால் முட்டப்பார்த்தும் துரத்த முனைந்தது. அது பாவ்லாதான் எனப் புரிந்து கொண்டோர் துரத்தி விரட்டினர்; பயந்து நடுங்கியோர் ஒதுங்கிச் சென்றனர்.

மாதங்கள் உருண்டோடின. ஆடியும் வந்தது. சீமையிலே மழை சரியாய்ப் பொழியாததால் ஆற்றிலும் நீர் பெருக்கெடுக்கவில்லை. இருந்தாலும் என்ன? கசியும் நீரிலாவது கடமையை முடிக்க வேண்டுமல்லவா?

இதோ பதினெட்டும் வந்து விட்டது. கிடாவைக் குளிப்பாட்டி, பொட்டு வைத்து, பூ மாலையிட்டு, வீதி வழியாக ஆற்றை நோக்கி ஓட்டலானாள் கொங்கக்கா. போகும் வழி நெடுக, மாலைநேர கறிவிருந்தை நினைத்து நாக்கில் எச்சில் ஊற, ஆட்டுக்குக் கட்டுக் கட்டாய் புல்' கொடுத்து குதூகலித்தது உடன் சென்ற கூட்டம்.

ஆறும் நெருங்கியது. அங்கேயும் ஒரு பெருங்கூட்டம் ஆட்டுக்காகக் காத்திருந்தது. பூஜைகள் கனஜோராய் நடக்கத் தொடங்கின. பூஜை முடிந்து மேடைநோக்கி ஆட்டை ஓட்டிச் சென்றனர். பூசாரி தீர்த்தச் செம்போடு மேடையை நெருங்கினான். 

உள்ளூர் கிடாவென்றால் தீர்த்தம் தலையில் பட்டவுடன் தலையாட்டிவிடும். ஆனால், இது சீமைக்காய் கிடாவாச்சே! தலையை ஆட்டுமா ஆட்டாதா என்ற பதட்டத்தில்  கொங்கக்கா!

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்