Showing posts with label எடப்பாடி. Show all posts
Showing posts with label எடப்பாடி. Show all posts

Monday, December 28, 2020

தஞ்சை விவசாயிகள் பேரணி: அடக்குமுறை! எஜமானர்களை மிஞ்சும் எடப்பாடிகள்!

வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கடுங் குளிரையும் பொருட்படுத்தாமல் டெல்லியில் விவசாயிகள் போராடுகின்றனர். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி 29.12.2020 தஞ்சை பேரணி-பொதுக் கூட்டத்தைத் தடுப்பதற்கான ஈனத் தனமான வேலைகளில் ஈடுபடுகிறது எடப்பாடி கும்பல். 'நானும் விவசாயிதான்' என்று கூப்பாடு போட்டுக் கொண்டே போராடுவோர் குரல்வளையை நெரிப்பதில் ரவுடிக் கும்பலையும் விஞ்சி விட்டது இந்தக் கும்பல். 

மோடி கொண்டு வரும் மக்கள் விரோத சட்டங்களையும் திட்டங்களையும், ஏன் ஜெயலலிதா எதிர்த்தவைகளைக்கூட எடப்பாடிக் கும்பல் ஆதரிப்பது ஏன்? பெரிய ரகசியம் ஒன்றுமில்லை. எல்லாம் பெட்டியைக் காக்கத்தான்.

நீட் தேர்வு: (National Eligibilty cum Entrance Test-NEET): 2016


மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வு தொடர்பான வழக்கில் 2016 ஆம் ஆண்டில் தடை நீக்கப்பட்ட பிறகு, நீட் தேர்வு முறை நடைமுறைக்கு வந்துவிட்டது. மறைந்த ஜெயலலிதா நீட் தேர்வு முறையை மிகக் கடுமையாக எதிர்த்து வந்தார்.  ஆனால் இன்றைய எடப்பாடி கும்பல். நீட் தேர்வு முறையை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனால் அனிதா, பிரதீபா உள்ளிட்ட பலரை நாம் இழந்தது மட்டுமல்ல ஏழை எளிய மக்களின் மருத்துவக் கனவுகளும் நாசமாகி வருகிறது.


ஜூலை 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தேசிய கல்விக் கொள்கை, 3, 5, 8 வகுப்புகளில் புதிதாக பொதுத் தேர்வு முறையை அறிமுகப்படுத்தி குலக்கல்விக்கு வித்திட்டுள்ளது மோடி அரசு. இந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்பு மட்டுமன்றி மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி உரிமையை மத்திய அரசு பறித்து விடுகிறது. இதையும் ஆதரிக்கிறது எடப்பாடி கும்பல்.


தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்: 2013


மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொது வினியோகத் திட்டத்தில் மத்திய அரசு தலையிட்டு மாநில அரசுகளின் உரிமையை பறிக்கிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் ஒருங்கிணைந்த பொதுவிநியோகத் திட்டம் (integrated management of public distribution system) என்ற பெயரில் "ஒரே நாடு, ஒரே ரேஷன்" என்கிற திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறது. ஜெயலலிதா எதிர்த்து வந்த இந்தத் திட்டத்தைத்தான் இன்றைய எடப்பாடி கும்பல் 01.10.2020 முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது.


உதய் மின் திட்டம்: 2015


நிதி மற்றும் செயல் திறனை மேம்படுத்துவது என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம் காலாண்டுக்கு ஒருமுறை மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள வழிவகுக்கிறது. மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்கப்படும் நிலக்கரியின் விலையை ஐந்து மடங்காக உயர்த்தி மின்கட்டணம் உயர்வதை தவிர்க்கவியலாத ஒன்றாக மாற்றியுள்ளது. மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் மாநில அரசின் நடவடிக்கைகள் மீது நேரடியாக மத்திய அரசு தலையிடுகிறது. இந்தத் திட்டத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா மிகக்கடுமையாக எதிர்த்து வந்தார்.


இதன் தொடர்ச்சியாகத்தான் புதிய மின்சார சட்டத் திருத்தம் 2020 என்கிற மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது மோடி அரசு. ஏற்கனவே 2003 இல் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் ஒரே துறையாக இருந்த மின் வாரியத்தை உற்பத்தி (generation), அனுப்புதல் (trasmission), பகிர்மானம் (distribution) என்று தனித்தனியாக பிரித்து தனியாருக்குத் தாரை வார்க்கும் அடிக்கல்லை நாட்டியது‌. அரசு மின்சாரத்தைத் தயாரித்து கம்பிகள் வழியாக அனுப்பினால், அதை எடுத்து வீடுகளுக்கு விநியோகம் செய்து கட்டணத்தைத் தீர்மானித்து தனியார் கொள்ளையடிக்க அனுமதி அளிக்கிறது புதிய மின்சார சட்டத் திருத்தம் 2020. மின் கம்பி அரசுக்கு, அதில் பாயும் மின்சாரம் அதானிக்கு என்பதுதான் இந்த சட்டத்தின் சாரம். இதற்கும் பச்சைக்கொடி காட்டுகிறது எடப்பாடி கும்பல்.


பணமதிப்பிழப்பு: 2016


500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்த 2016, நவம்பர் 8 நள்ளிரவை யாரும் மறக்க முடியாது. கருப்புப் பணம் ஒழியும், ஊழல் மறையும் எனக் கூவினார்கள். ‌ நடந்ததா? மாறாக நிச்சயக்கப்பட்டத் திருமணங்கள் நின்றன. சிகிச்சைக்குப் பணம் இன்றி நோயாளிகள் தவித்தனர். அன்றாட செலவுகளுக்காக வங்கி வாசலில் வரிசையில் நின்று மாண்டு போனவர்கள் ஏராளம். சிறுதொழில்கள் முடங்கியதால் தொழிலாளர்கள் கிராமங்களுக்கு விரட்டி அடிக்கப்பட்டனர். கட்டுமானத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டது. ஏற்றுமதிகள் குறைந்தன. சுமார் 90 லட்சம் பேர் வேலை இழந்தனர். இதை மட்டும் எடப்பாடி கும்பல் எதிர்த்து விட்டதா என்ன?

ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி : 2017

மீண்டும் சிறு குறு தொழில்கள் நலிவடைந்தன. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் லட்சக்கணக்கானோர் வேலை இழந்தனர். ஏற்றுமதிகள் பாதிப்படைந்தன. மாநில அரசுகளுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டது. இழப்பீட்டை ஈடுசெய்து கொள்ள 21 மாநில அரசுகள் ரூ.78,542 கோடி வெளியிலிருந்து கடன் வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்தது மோடி அரசு. இதனால் மாநில அரசுகள் கடன் சுமைக்குத் தள்ளப்பட்டன. மாநில அரசுகள் ஓட்டாண்டி ஆனாலும் பரவாயில்லை, தங்களது பெட்டி பாத்திரமாக இருந்தால் போதும் என்று மௌனம் காக்கிறது எடப்பாடி கும்பல்.


கால்நடை விற்பனைக்குத் தடை: 2017


கால்நடை வளர்ப்பு மற்றும் விற்பனையை ஒரு பண்ணைத் தொழிலாக மாற்றி கிராமப் பொருளாதாரத்தை கார்ப்பரேடடுகளிடம் ஒப்படைக்கும் கெட்ட நோக்கம் கொண்டது. கால்நடை விற்பனைக்கு வரி விதித்து கால்நடை வளர்ப்பின் மூலம் பயனடைந்த கிராமப்புற விவசாயிகளைக் கடுமையாக பாதிக்கும் திட்டம் இது. இப்படி ஒன்று இருப்பதே எடப்பாடி கும்பலுக்கு எங்கே தெரியப் போகிறது?


உணவு தானியத்திலிருந்து எரிபொருள் தயாரிப்புத் திட்டம்: 2018


உணவு தானியத்தில் இருந்து 30 சதவீத எரிபொருளை தயாரிப்பதற்கான அனுமதியை வழங்கும் திட்டம் இது. இதனால் கடும் உணவுப் பஞ்சம் ஏற்படும். இது மட்டும் தெரிந்து விடுமா என்ன எடப்பாடி கும்பலுக்கு?


சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: 2018


இந்தியாவில் சில்லரை வணிகத்தில் அன்னிய நிறுவனங்கள் 100 சதவீதம் முதலீடு செய்ய அனுமதி அளிக்கிறது இந்தத் திட்டம். இதன் மூலம் சிறு வணிகத்தை ஒழித்துக்கட்டி, பன்னாட்டுக் கம்பெனிகளின் கைகளில் இந்திய வணிகத்தை ஒப்படைக்கிறது. எவன் வந்தால் நமக்கென்ன? பெட்டி பத்திரமாக இருந்தால் போதும் என்பதைத்தவிர வேறென்ன செய்துவிடப் போகிறது எடப்பாடி கம்பெனி?


வேளாண் சட்டத்திருத்தங்கள் 2020


கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட வேளாண் சட்டங்கள் மூலம் வேளாண்மையை கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரவும், கள்ளச்சந்தையை ஊக்கப்படுத்தி பதுக்கலுக்கு வழிவகுத்து உணவுப்பொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தவும் வழிவகை செய்துள்ளது மோடி அரசு. இதற்கு எதிராகத்தான் இன்றைக்கு விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டுள்ளனர்.


மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு கொண்டுவரப்பட்ட மருத்துவ படிப்பில் நீட் பொதுத்தேர்வு மற்றும் புதிய கல்விக் கொள்கை, ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி, உதை மின் திட்டம் மற்றும் புதிய மின்சார சட்டத் திருத்தம், 'ஒரே நாடு ஒரே ரேஷன்' என்கிற பொது விநியோகத் திட்டம், புதிய வேளாண் சட்டங்கள் என எதை எடுத்துக்கொண்டாலும் இவை இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கின்ற வகையிலேயே அமைந்துள்ளன. 


ஜெயலலிதா மிகக் கடுமையாக எதிர்த்து வந்த நீட் தேர்வு, பொது விநியோகத் திட்டம், உதய் மின் திட்டம், உணவுப் பாதுகாப்புத் திட்டம், ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி உள்ளிட்ட அனைத்தையும் அம்மா பெயரில் ஆட்சி நடத்தும் எடப்பாடி அரசு ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தி வருகிறது. ஜெயலலிதா எதிர்த்தவைகளை இவர்கள் ஆதரிப்பது ஏன்? பஞ்சாப் ஹரியானா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து வரும் வேளையில் எடப்பாடி கும்பல் மட்டும் ஏன் ஆதரிக்கிறது? 'ரெய்டு' எனும் கத்தி அவர்கள் தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருப்பதை தவிர வேறென்னவாக இருக்க முடியும்?


'ரெய்டு' எனும் கத்தி!


21.12.2016 அன்று தமிழக அரசின் தலைமைச் செயலர் ராம் மோகன் ராவ் வீடு, அலுவலகம் மற்றும் உறவினர்கள் வீடு என 14 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு ரூ.48 லட்சம் பணம் ரொக்கமாகவும், 7 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. தலைமைச் செயலருக்கும் சேகர் ரெட்டி தொடர்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டது. சேகர் ரெட்டி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமானவர் என்றும் சொல்லப்பட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் சேகர் ரெட்டியின் வீட்டில் கட்டுகட்டாக கைப்பற்றப்பட்டதை நாடே அறியும். ஆனால் பின்னாளில் அவர் குற்றமற்றவர் என்று விடுக்கப்பட்டார் என்பது தனிக்கதை.


07.04.2017 அன்று சென்னை மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் ஆகிய இடங்களில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் உறவினர்கள் வீடு என சுமார் 30 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதில் ரூ. 5 கோடி அளவிற்கு ரொக்கமாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.


அம்மாவின் பெயரைச் சொல்லி ஆட்சி நடத்தும் இன்றைய ஆட்சியாளர்கள் ஜெயாவின் வழியிலே மக்கள் பணத்தை கோடி கோடியாக கொள்ளை அடித்து குவித்து வைத்துள்ளனர். இதையெல்லாம் தெரிந்து வைத்துள்ள மத்திய அரசு 'ரெய்டு' என்ற கத்தியைக் காட்டி இவர்களை மிரட்டி வருகிறது. 


மோடியின் அடிமைகளாய் மாறிப்போய் அம்பலப்பட்டு, செல்வாக்கிழந்து இனியும் தமிழக அரசியலில் முகவரி இல்லாமல் முடங்கிப் போவோம் என்பதைத் தெரிந்து கொண்டுதான் தாங்கள் சுருட்டியப் பணத்தைப் பாதுகாத்துக்கொள்ள மோடி அரசு கொண்டு வரும் அனைத்து மக்கள் விரோதத் திட்டங்களையும், சட்டங்களையும் ஆதரித்து தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது எடப்பாடி கும்பல். அரசியல் அரங்கில் முகவரி இல்லாமல் உடனடியாக துடைத்தெறியப்படவேண்டிய கூட்டமிது.


ஊரான்


தொடர்புடைய பதிவுகள்


எடப்பாடி ஆட்சி எப்படி நீடிக்கிறது?




Thursday, September 14, 2017

எடப்பாடி ஆட்சி எப்படி நீடிக்கிறது?

பார்ப்பனர்கள் சிறந்த நிர்வாகிகளா? – அம்பேத்கரின் அதிரடி கேள்வி! தொடர்-2

ஆளும் தமிழ் மன்னர்கள் அன்று சூத்திரர்களாக்கப்பட்டதற்கும்; சூத்திரர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதற்குமான ஆதாரங்கள் ஏதேனும் உண்டா?

மனிதன் கடவுளின் அடிமைதானே! அப்படிதானே மக்கள் கருதுகிறார்கள். எனவேதான் மக்கள் கடவுளை சாமி என்று அழைப்பதோடு கடவுளை தெண்டனிட்டு வணங்கவும் செய்கிறார்கள்.  ஆனால் ஒரு மனிதன் மற்றொரு மனிதனை சாமி என்று அழைத்தால் அதற்கு என்ன பொருள்? அவனை வணங்குவதாகத்தான் பொருள்.

சில பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை பார்ப்பனர்களை சாமி என்றுதான் மக்கள் விளித்தனர்; விளித்ததோடு வணங்கவும் செய்தனர். இன்றும்கூட பார்ப்பனர்களை சாமி என்று விளிப்பதும் வணங்குவதும் தொடரத்தான் செய்கிறது.

இந்து மதத்தைப் பொருத்தவரை இந்து மதக் கடவுளர்களை ஒருவன் வணங்குகிறான் என்றால் அவன் இந்து மத வேதங்களை வணங்குகிறான் என்று பொருள்.

மனிதர்களில் வேதம் ஓதும் பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள் (மனு: 1:97) என மனு விதி வகுத்ததால் பார்ப்பனர்களை வணங்குவதும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. பார்ப்பனர்களை வணங்காமை என்பது வேதத்தை மதிக்காததற்கு ஒப்பாகும். வேதங்களை மதிக்கவில்லை என்றால் கடவுளையே மறுப்பதாகும். அதனால்தான் கடவுளுக்கு கொடுக்கிற மரியாதையை வேதங்களும், வேதங்களுக்கு கொடுக்கும் மரியாதையை வேதம் ஓதும் பார்ப்பனர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்ப்பட்டது.

எடப்பாடி ஆட்சி எப்படி நீடிக்கிறது?

பார்ப்பனர்களுக்கு மரியாதை கொடுப்பது என்றால் என்ன? அவர்களை சாமி என்று அழைப்பதோடு நிற்கவில்லை. நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் தங்களது ஆட்சி நீடிக்க வேண்டும் எனில் பார்ப்பனர்களின் ஆலோசனைப்படிதான் ஆட்சி நடத்த வேண்டும்; நீதி செலுத்த வேண்டும். (மனு: 7-38).

நியாயம் எது என்று ஆட்சியாளர்கள் அறிந்திருந்தாலும் அந்த நியாயத்தை பார்ப்பனர்களிடத்தில்தான் அவர்கள் வணங்கிக் கேட்க வேண்டும். அப்படிக் கேட்டால் அவர்கள் ஆட்சியை இழக்கமாட்டார்கள். (மனு:7-39). அப்படிக் கேட்பதால்தான் இன்னமும் எடப்பாடி அரசு நீடிக்கிறதோ!.

பார்ப்பனர்களின் ஆலோசனைப்படி ஆட்சி செய்யவில்லை என்றால் அவர்கள் அரசை இழப்பார்கள். (மனு: 7-40). பார்ப்பனர்களை வணங்காததால்தான் வேனன், நகுஷன், சுதாசன், யவனன், சுமுகன், நிமி போன்ற அரசர்கள் அழிந்து போனார்கள். (மனு:7-41).

பார்ப்பனர்களை எதிர்ப்பதால்தான் சூத்திரர்கள் ஆட்சிக்கு வந்தால் அதை அழிப்பதற்கும்; ஆட்சிக்கு வர முயன்றால் வரவிடாமல் தடுப்பதற்கும் பார்ப்பனர்கள் தொடர்ந்து முயற்சி மேற்கொள்கிறார்கள். இன்றை தமிழக அரசியல் இதற்குப் பொருந்துகிறதோ!

குடி-கும்மாளம், பாட்டு-கூத்து, துரோகம்-பொறாமை, பொதுச் சொத்துக்களை கொள்ளையடித்தல், குடி-கூத்தி என ஆட்சியாளர்கள் இருப்பார்களேயானால் அவர்கள், நீதி சாஸ்திரம், வேதாந்தம், தநுர் வேதம் இவைகளையறிந்தவர்களை (பார்ப்பனர்களை) ஆலோசனை சொல்வதற்கு வைத்துக் கொள்ள வேண்டியது. (மனு: 7-47 முதல் 54 வரை).

இவர்களிடத்தில் (பார்ப்பனர்களிடத்தில்) சண்டை-சச்சரவுகள்-சமாதானம் குறித்து ஆலோசிக்க வேண்டியது. (மனு: 7-56)

இவர்களிடத்தில் (பார்ப்பனர்களிடத்தில்) தினந்தோறும் நம்பிக்கையுடன் சகலத்தையுஞ்சொல்லி அவருடன் யோசித்து ஒரு காரியத்தை ஆரம்பிக்க வேண்டியது. (மனு: 7-59)

ஈ.பி.எசும்-ஓ.பி.எசும் முட்டி மோதிக் கொண்டதும், இன்று சமாதானம் ஆனதும், இந்த எடுபிடிகளின் ஆட்சி நீடிப்பதும், தமிழகத்திற்கு பொறுப்பு ஆளுநர் நீடிப்பதும், கிரிஜா உள்துறைச் செயலாளர் ஆனதும் தற்செயலானதோ!

மேட்டூர் அணை இந்த ஆண்டாவது நிரம்பாதா, சம்பா சாகுபடிக்காவது தண்ணீர் திறந்து விடுவார்களா என ஏக்கத்தோடு காத்திருக்கும் வேளையில்தான் மகா புஷ்கரத்தையொட்டி பார்ப்பனர்கள் தங்களின் அழுக்கைக் கழுவ மேட்டூரிலிருந்து விநாடிக்கு 10000 கன அடி தண்ணீரை ஒரு வாரத்திற்கு தமிழக அரசு திறந்து விடுகிறது என்றால் இந்த அரசு யாருடைய ஆலோசனைப்படி, யாருக்காக செயல்படுகிறது என்பதை என்னவென்பது?


யாருக்காக இந்த மகா புஷ்கர விழா?

பார்ப்பனர்களின் ஆலோசனை இல்லாமலா  நீட் தேர்வு, ஹைரோ கார்பன் திட்டம், உணவுப் பாதுகாப்பு மசோதா, உதய் மின் திட்டம் உள்ளிட்ட பா.ஜ.க அரசின் திட்டங்களுக்கு தமிழக எடுபிடி அரசு ஒப்புதல் கொடுத்தது? 

பார்ப்பனர்களை வணங்கவில்லை எனில்….

பார்ப்பனர்களை வணங்காத காரணத்தினால் பௌண்டரம், ஔண்டரம், திரவிடம், காம்போசம், யவனம், சகம், பாரதம், பால்ஹீகம், சீநம், கிராதம், தரதம், கசம்  ஆசிய நாடுகளை ஆண்ட சத்திரியர்கள் எல்லாம் சூத்திர நிலைக்கு தள்ளப்பட்டார்கள். (மனு: 10-43 & 44).

அரசனே சூத்திர நிலைக்கு தள்ளப்பட்ட பிறகு சாமான்ய சூத்திர மக்களுக்கு கல்வி கிடைத்திருக்குமா? அடுத்த தொடரில் பார்க்கலாம்.


தொடர்புடைய பதிவுகள்:

பார்ப்பனர்கள் சிறந்த நிர்வாகிகளா? – அம்பேத்கரின் அதிரடி கேள்வி!

ஆதிக்கச் சாதியினரின் அக்குளுக்குள் அடைக்கலமாகும் தலித்துகளுக்கானசட்ட உரிமைகள்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 15

*எது மிகவும் கொடுமையானது? அடிமைத்தனமா, தீண்டாமையா? - 2

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 14

*எது மிகவும் கொடுமையானது? அடிமைத்தனமா, தீண்டாமையா? -1

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 13

*ஏமாளி என்றால் எரித்துவிடு! பலசாலி என்றால் பதுங்கி ஓடு!தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 12

*நிழல் பட்டதால் உணவு தீட்டாகிவிட்டதாம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 11

*வணங்கவில்லை என்பதற்காக முதியவர் அடித்துக் கொலை!தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 10

*தீண்டப்படாதவர்களை இந்துக்கள் தங்கள் சமுதாயத்தில் இணைத்துக்கொள்வார்களா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 9

*பார்ப்பனர்களுக்கு பெரியார் மீது ஏன் கடுங்கோபம்? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 8
*நமஸ்காரம் சொல்லத் தடை! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 7
*வாழ்ந்து வரும் கடந்த காலம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 6

*ஜாதி கேட்காமல் வீடு வாடகைக்குத் தருவியா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! - 5

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! .....தொடர்: 4

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! .....தொடர்: 3

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! .....தொடர்: 2

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!

Monday, September 11, 2017

பார்ப்பனர்கள் சிறந்த நிர்வாகிகளா? – அம்பேத்கரின் அதிரடி கேள்வி!

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகப் பொதுமறையை ஒரு தமிழனால் படைக்க முடிந்தது. தமிழனின் பண்பாட்டை பறை சாற்றும் சங்க இலக்கியங்களை வடிக்க முடிந்தது. அதன் பிறகு கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக சொல்லிக் கொள்ளும்படியான இலக்கியங்கள் தமிழனால் ஏன் படைக்க முடியவில்லை?

இடைப்பட்ட காலத்தில் குறிப்பாக ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர்கள் ஆட்சி காலத்தில், தமிழனை, கடவுளின் பித்தனாக்கிய பக்தி இலக்கியங்களும், இதிகாச புராணக் குப்பைகளுமே புகுத்தப்பட்டன. மக்களைப் பற்றி பாட்டெழுதியவர்கள் எல்லாம் மகான்களைப் பற்றி மட்டுமே எழுத பணிக்கப்பட்டனர்.

இத்தகைய பார்ப்பன பண்பாட்டுக்கு எதிராக குரல் எழுப்பிய; பார்ப்பனர்களின் ஆலோசனைகளையும் – வேதங்களையும் ஏற்க மறுத்த ஒரே காரணத்திற்காக அன்றைய ஆளும் தமிழ் மன்னர்கள் எல்லாம் சூத்திரர்களாக்கப்பட்டனர். மன்னர்களே சூத்திர நிலைக்கு தள்ளப்பட்ட பிறகு மக்களின் நிலை பற்றி சொல்லவா வேண்டும்?

இன்றைய எடப்பாடி அரசு போல அன்றும் பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்து தங்களது எடுபிடிகளின் ஆட்சியை நிறுவிக் கொண்டு, இன்று நீட் தேர்வை புகுத்தி சாமான்ய மக்களின் கல்வியை பறிப்பது போல அன்று சூத்திரர்கள் கல்வியே பயிலக்கூடாது என பார்ப்னர்கள் சட்டம் வகுத்தனர்.

சூத்திரன் கல்வி கற்றால் அவன் நாக்கை அறுத்தெறி; காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என சட்டம் இயற்றி அன்று நமது மூதாதையரின் கல்வி உரிமையைப் பறித்தனர். இன்று நீட் எனும் பார்ப்பன பயங்கரவாத ஆயுதத்தைக் கொண்டு அனிதாவின் கல்வி உரிமையை பறித்ததோடு அவரை கொன்றொழித்தனர். நீட்டுக்கு பாட்டை போடும் எடப்பாடிகள் நீடிக்கும் வரை இந்தப் படுகொலை அனிதாவோடு நிற்கப் போவதில்லை.

இன்று நீட்டுக்கு எதிராக போராடுவோரை தேசத்துரோகிகள் என் முத்திரை குத்துகின்றனர். அன்று பார்ப்பன மனு நீதிக்கு எதிராக போராடியோரை அசுரர்கள் என முத்திரை குத்தினர்.

காலங்கள்தான் உருண்டோடியிருக்கின்றன. ஆனால் தர்மம் என்னவோ மனு காலத்தில்தான் நிற்கின்றன.

ஆளும் தமிழ் மன்னர்கள் அன்று சூத்திரர்களாக்கப்பட்டதற்கும்; சூத்திரர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதற்குமான ஆதாரங்கள் ஏதேனும் உண்டா என்பது குறித்து அடுத்த தொடரில் பார்ப்போம்.

தொடரும் …..

தொடர்புடைய பதிவகள்:

இந்து மதக் கொடுங்கோண்மை: கவுரி லங்கேஷ் படுகொலை!

ஆதிக்கச் சாதியினரின் அக்குளுக்குள் அடைக்கலமாகும் தலித்துகளுக்கானசட்ட உரிமைகள்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 15

*எது மிகவும் கொடுமையானது? அடிமைத்தனமா, தீண்டாமையா? - 2

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 14

*எது மிகவும் கொடுமையானது? அடிமைத்தனமா, தீண்டாமையா? -1

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 13

*ஏமாளி என்றால் எரித்துவிடு! பலசாலி என்றால் பதுங்கி ஓடு!தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 12

*நிழல் பட்டதால் உணவு தீட்டாகிவிட்டதாம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 11

*வணங்கவில்லை என்பதற்காக முதியவர் அடித்துக் கொலை!தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 10

*தீண்டப்படாதவர்களை இந்துக்கள் தங்கள் சமுதாயத்தில் இணைத்துக்கொள்வார்களா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 9

*பார்ப்பனர்களுக்கு பெரியார் மீது ஏன் கடுங்கோபம்? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 8
*நமஸ்காரம் சொல்லத் தடை! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 7
*வாழ்ந்து வரும் கடந்த காலம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 6

*ஜாதி கேட்காமல் வீடு வாடகைக்குத் தருவியா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! - 5

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! .....தொடர்: 4

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! .....தொடர்: 3

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! .....தொடர்: 2


*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!