Tuesday, March 17, 2015

காந்திக்கு அரோகரா! அரை டிரவுசர்களால் ‘லோல்படும்’ இந்தியா! - 3

26.05.2014 ல் அரை டிரவுசர்கள் செங்கோட்டைக்குள் நுழைந்த பிறகு இந்தியாவே லோல்படுகிறது. இவர்களின் பேச்சும், பேட்டிகளும், அறிக்கைகளும், விவாதங்களும், கொள்கைகளும், நடைமுறையும் இந்தியாவை படுத்தும் பாட்டை எப்படி எடுத்துச் சொல்வது என கடந்த மூன்று மாதங்களாக தொகுக்க முயற்சித்தேன். தொகுக்க தொகுக்க பட்டியல் மட்டும் நீள்கிறது. ஒவ்வொன்றை பற்றியும் விரிவாக எழுதலாம். அப்படி சிலவற்றை சற்று விரிவாக எழுதவும் செய்தேன். இவர்களைப் பற்றி எழுதத் தொடங்கினால் வேறு எதைப்பற்றியும் எழுத முடியாது என்பதே உண்மை. ஆகையினாலே இவர்களின் செயல்களை பட்டியலிட்டாலோ போதும் எனக் கருதுகிறேன். விளைவுகளை முடிந்தவரை சொல்ல முயற்சித்துள்ளேன். மற்றவைகளை வாசகர்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

முந்தைய தொடர்ச்சி... 

54. துரியோதனின் தம்பிகள் பிறந்தது ஸ்டெம் தெராபி தொழில் நுட்பத்தால் – நோபல் அப்போது பிறந்திருக்கவில்லை. பிறந்திருந்திருந்தால் ஸ்டெம் தெராபி விஞ்ஞானியையாவது படித்திருக்கலாம். மிஸ் பண்ணிட்டோமே!

55. விநாயகர் - ஆண் உடலையும் யானைத் தலையையும் இணைத்து பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் பிறந்தவராம்: இங்கேயும் ஒரு விஞ்ஞானியை மிஸ் பண்ணிட்டோமே!

56. இராமாயணத்தில் புட்பக விமானம் ஓடியதாம் – ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தியவன் எவனோ! அவனை அடையாளம் காட்டினால் புண்ணியமாகப் போகும். என் ‘அப்பாச்சி’க்கு ஒரு நட்டு தேவைப்படுது!

57. இந்துப் பெண்கள் குறைந்தது நான்கு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்: அப்பதானே சீமந்தமும், தொட்டிலாட்டுதலும், பெயர் குறித்து சூட்டுதலும், கல்யாணம் பண்ணவும், கருமாதி பண்ணவும், இன்ன பிற இத்தியாதி இத்தியாதி சடங்குகள் பெருகும். தட்டில் தட்சணைகள் கூடுமல்லவா!

58. நிர்பயா பற்றிய ஆவணப் படத்திற்குத் தடை – துரௌபதையை துகிலுரித்துக் கொண்டே அவளுக்கு கோவில் கட்டிய கதையாகவல்லவா இருக்கு! கௌரவமான துரியாதனர்களை அறியாதவர் உண்டோ!

59. எழுத்தாளர்கள் பெருமாள் முருகன் மற்றும் புலியூர் முருகேசன் மீது தாக்குதல் - சாதிப்பெருமை காத்தால்தானே இந்துப் பெருமையை காக்க முடியும்.

60. தாலி வேண்டுமா? வேண்டாமா? விவாதம்: புதிய தலைமுறை தொலைக்காட்சி ஊழியர்கள் மீது இந்து முன்னணியினர் தாக்குதல்,  தாலி பற்றிய விவாதத்தை நடத்தக்கூடாது என இந்து மக்கள் கட்சியினர் மிரட்டல்  மற்றும் அலுவலகத்தின் மீது இந்து இளைஞர் சேனாவினர் குண்டு வீசித் தாக்குதல். தாலி போனால் அவன் சோலியோ காலி. சும்மா இருப்பானா?

61. மகாராஷ்டிரா அரசு மாட்டிறைச்சிக்குத் தடை. அரியானாவிலும் இதே தடை. அவன் ஐந்து ஆண்டு சிறை என்றான். இவனோ மாட்டைக் கொல்வது கொலைக்குற்றம் என்கிறான். சிறையோ பத்தாண்டுகள் என்கிறான். மவனே! மாடு வளர்த்தே, உன் கதி அதோ கதிதான். தானா செத்தாலும் காக்கத் தவறிய குற்றத்திற்காக உன் மீது 302. (அதனால்தான் அம்மா ஆடு கொடுக்குறாங்களோ! என்னே கரிசனம் உன்னைக் காக்க! என்ன இருந்தாலும் அம்மா அம்மா தாண்டா!) ஆனால் தப்பிக்க ஒரே வழிதான் உண்டு மகனே! அதுதான் பிராயச்சித்தம் என்கிற பரிகாரம். பழைமையான சாஸ்திர விதிப்படி மந்திரஞ்சொல்லி பசு கொல்லப்பட்டிருந்தால் அதை புசிக்கலாம்; யாகத்திற்காக கொல்லப்பட்ட பசுக்கள் உயர்ந்த நிலையை அடைவதால் யாகம்  செய்து பசுவைக் கொன்றால் அது கொலை ஆகாது; (மனு: 5-36, 39, 40). என்ன! யாகம் செய்ய அய்யரைத் தேடனும். நாள் குறிக்கோனும். மந்திரம் சொல்லி யாகம் வளர்க்க கொஞ்சம் வராகன் செலவாகும். அவ்வளவுதான்.

62. மாட்டிறைச்சிக்கான தடையை இந்தியா முழுதும் அமுல்படுத்த மாநில அரசுகளுக்கு மிரட்டல். இனி மான்கறி கிடைத்தாலும் கிடைக்கலாம்; ஆனால் மாட்டுக்கறிக்கு வாய்ப்பே கிடையாது. எச்சரிக்கை: மாட்டுக்கு வயதாகி மண்டையைப் போட்டாலோ அல்லது நோயினால் மண்டையைப் போட்டாலோ மறவாமல் ‘டெத் சர்டிபிகேட்டை’ வாங்க மறவாதீர்கள். என்ன செய்ய? ‘டெத் சர்டிபிகேட்டுக்கு’ கொஞ்சம் செலவாகும்தான். இல்லை என்றால் கம்பி எண்ண வேண்டி வரும்!

63. மசூதிகள் ஆன்மீகத் தலங்கள் இல்லை. வெறும் கட்டடம். எப்பொழுது வேண்டுமானாலும் இடிக்கலாம் - சு.சாமி, பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர்.

64. பிப்ரவரி 2015 டெல்லி சட்டமன்றத் தேர்தலின் போது நான்கு கிருஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்.

65. அரியாணா மாநிலம் கைம்ரி கிராமத்தில் மார்ச் 14, 2015 ல் கிருஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல். 

66.இப்போதைக்கு கடைசிச் செய்தி: கோவா அரசின் விடுமுறை பொதுப்பட்டியலில் காந்தி ஜெயந்தி இடம் பெறவில்லை. தட்டச்சேற்றும் போது தவறிவிட்டதாக இப்பொழுது தாஜா பண்ணினாலும் இது ஒரு முன்னோட்டமே! காந்திக்கு அரோகரா!

பத்து மாத கால முன்னோட்டமே இப்படி எனில் இனி வரும் 50 மாத காலமும் இதே நிலை தொடருமேயானால் மேலை நாட்டுக்காரன் செவ்வாயில் குடியிருப்பான். நாமோ நாமக்கட்டிகளிடம் நாண்டுக்கிட்டு கிடப்போம்!

பா.ஜ.க தலைவர்களின் மூஞ்சி தொங்கிப் போச்சு! உச்ச கட்ட காட்சிகள்!

கல்யாண மாப்பிள்ளையும் பத்து லட்ச ரூபாய் கோட்டும்!

4 comments:

  1. Still some point missing in list. whiting for 4

    maharaja

    ReplyDelete
  2. முடிந்த வரை தொகுத்துள்ளேன். இதற்கே மூச்சு வாங்குகிறது. கூடுதல் விவரங்களைக் கொடுத்தால் பயனளிக்குமே!
    நன்றி!

    ReplyDelete
  3. பத்து மாத கால முன்னோட்டமே இப்படி எனில் இனி வரும் 50 மாத காலமும் இதே நிலை தொடருமேயானால் மேலை நாட்டுக்காரன் செவ்வாயில் குடியிருப்பான். நாமோ நாமக்கட்டிகளிடம் நாண்டுக்கிட்டு கிடப்போம்!---

    ReplyDelete