Thursday, October 29, 2015

ஷர்மாவும் வர்மாவும் தலித் ஆன கதை!

மத்திய காலத்தில் (கி.பி.8 முதல் 18ம் நூற்றாண்டு காலகட்டத்தில்) இந்தியாவில் ஊடுருவிய இஸ்லாமியர்களால் தூய்மையற்ற தொழில்கள் தலித்துகள் மீது திணிக்கப்பட்டதாலேயே அவர்கள் தீண்டத்தகாதவர்கள் ஆக்கப்பட்டார்கள் என்கிற ஒரு அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிஜர் சோன்கர் சாஸ்திரி.

அவர் மேலும் சொல்கிறார்.

மத்திய காலத்தில் இஸ்லாமியர்கள் இந்தியாவில் ஊடுருவிய போது அவர்களுக்கு மிகப்பெரிய தடையாக இந்துயிசம் இருந்ததாம். குறிப்பாக பார்ப்பனர்களும் சத்திரியர்களும் மட்டுமே இந்துமதப் பண்பாட்டின் பாதுகாவலர்களாகவும் பூகோள எல்லையைக் காப்பவர்களாகவும் இருந்தார்களாம். இஸ்லாத்தைத் தழுவ வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டு இவர்கள் மீது வன்கொடுமைகள் ஏவப்பட்டதாம்.

செத்தாலும் பரவாயில்லை; எது நேர்ந்தாலும் இஸ்லாத்தைத் தழுவ முடியாது என சில பார்ப்பனர்களும் சத்திரியர்களும் முடிவெடுத்தார்களாம். இவர்களின் மத கௌரவத்தையும், சுயமரியாதையையும், தேசிய பெருமிதத்தையும் சிதைப்பதற்காக மலக்கழிவுகளை எடுக்கின்ற வேலைகளிலும், தோல் தொடர்பான வேலைகளிலும் பார்ப்பனர்களும் சத்திரியர்களும் ஈடுபடுத்தப்பட்டார்களாம். அதனாலேயே பார்ப்பனர்களும் சத்திரியர்களும் தீண்டத்தகாதவர்கள் அதாவது தலித்துகள் ஆக்கப்பட்டார்களாம்.

கி.பி.400க்குப் பிறகு மாட்டிறைச்சி தடை செய்யப்பட்ட காலத்தில் மாட்டிறைச்சி சாப்பிட்டவர்கள் தீண்டத்தகாதவர்களாக ஆக்கப்பட்டார்கள் என்கிற தீண்டாமையின் தோற்றம் குறித்த அம்பேத்கரின் முடிவிலிருந்து பிஜர் சோன்கர் சாஸ்திரி மாறுபடுகிறாராம்.

மாட்டிறைச்சியை வெறுத்த இந்துக்கள் (உயர்சாதியினர்) மாட்டிறைச்சி உண்ணும் சிலரை தீண்டத்தகாதவர்களாக்கினர் என தொகுதி 7ல் (ஆங்கிலம்) அம்பேத்கர் கூறிய கருத்தை மறுதளித்து,. தூய்மையற்ற தொழில்தான் தீண்டாமைக்குக் காரணம் என்கிறார் பிஜர் சோன்கர் சாஸ்திரி.

தீண்டாமை குறித்த இவரது கருத்து ஆர்.எஸ்.எஸின் இணைச்செயலாளர் கிருஷ்ண கோபால் என்பவர் அண்மையில் ஆர்கனைசர் பத்திரிக்கையில் எழுதிய கருத்துடன் ஒத்ததாக உள்ளது.

கிருஷ்ண கோபால் கருத்தின்படி தீண்டாமை குறித்த முதல் சான்று தாகிர் குடும்பத்தில் உள்ளதாம். இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களுடனான போரில் தாகிர் தோற்றுப் போனானாம். ஆக்கிரப்பாளர்கள் தாகிரின் அரண்மனைக்குள் நுழைந்த போது, ”அவர்கள் மிலேச்சர்கள், அதாவது அழுக்கானவர்கள், அவர்கள் நம்மைத் தொட்டால் நாம் அசுத்தமாகி விடுவோம். அதனால் நாம் நம்மையே கொன்று கொள்வோம்” என தாகிரின் குடும்பப் பெண்கள் சொன்னார்களாம். .இஸ்லாமியர்கள் தொட்டதால்தான் தாகிர்கள் தீண்டத்தகாதவர்களானார்கள் என்பதுதான் கிருஷ்ண கோபாலின் கருத்து..

இதுதான் தீண்டாமையின் முதல் சான்றாம்.   

பிஜர் சோன்கர் சாஸ்திரி மேலும் சொல்கிறார்…

தலித்துகளில் ஒரு சாரார் அம்பேத்கரை தவறாகப் புரிந்து கொண்டார்களாம். 1927ல் மனுதர்மத்தை எரித்த அம்பேத்கர் 1948ல் மனுவுக்கு நற்சான்றிதழ் அளித்தாராம். அம்பேத்கர் 1927ல் சொன்னதை ஏற்கும் இன்றைய தலித்துகள் 1948ல் அம்பேத்கர் சொன்னதை ஏற்க மறுக்கிறார்களாம்.

இது அம்பேத்கர் பார்வையில் ஏற்பட்ட மாற்றமாம். ஆரியக் கருத்தியலை பிற்காலத்தில் அம்பேத்கர் மறுதளித்தாராம். ஆரிக் கருத்தியல் என்பது மிகப்பெரிய அரசியல் நகைச்சுவையாம். தாங்கள் மட்டுமே அந்நியர்கள் அல்ல; பார்ப்பனர்களும் சத்திரியர்களும் அந்நியர்களே என்கிற கருத்தியலை ஊக்குவிக்கவே பிரிட்டிஷார் ஆரியக் கருத்தியலை உயர்த்திப் பிடித்தார்களாம்.

கடைசியாக பிஜர் சோன்கர் சாஸ்திரி சொல்கிறார்.

இஸ்லாமியர்களால் மலைப்பகுதிகளுக்கு விரட்டியடிக்கப்பட்ட பார்ப்னர்களும் சத்தியர்களுமே பின்னர் பழங்குடியினர்(ST) ஆனார்களாம். (ஆதாரம்: THE HINDU, 29.10.2015)

தீண்டாமைக்கு வித்திட்டவர்கள் இஸ்லாமியர்கள் என்பதே ஒரு கடைந்தெடுத்த அடிமுட்டாள்தனமான கருத்து. தீண்டாமை குறித்து மனுஸ்மிருதியில் சொல்லப்பட்டுள்ள விவரங்களை ஏற்கவே நாம் பரிசீலித்திருக்கிறோம் (தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 2)

மனுவின் காலம் கி.மு 150லிருந்து கி.மு 200 என்கின்றனர். ஆனால் இஸ்லாமியர்களின் காலமோ கி.பி 1200லிருந்துதான் தொடங்குகிறது. கி.மு.150க்கு முன்பே தீண்டாமையை மனு பதிவு செய்திருக்கிற போது கி.பி.1200க்குப் பிறகு வந்த இஸ்லாமியர்களே தீண்டாமைக்குக் காரணம் என்று சொல்வது எவ்வளவு கடைந்தெடுத்த பொய்!. இந்தப் பொய்யை பிஜர் சோன்கர் சாஸ்திரி என்கிற ஒரு தலித் மூலமாக இந்துத்துவாவாதிகளால் சொல்ல முடிகிறது என்றால் அதுதான் இந்துத்துவாவாதிகளின் வெற்றி! நமது தோல்வி!

இங்கே அர்ஜீன் சம்பத்துகள் இருக்கும் போது அங்கே பிஜர் சோன்கர் சாஸ்திரிகள் இருப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லையே! 

அம்பேத்கர்-பெரியார் இரட்டைக் குழல் துப்பாக்கியை எடுக்காத வரை நாம் தோற்றுக் கொண்டேதான் இருப்போம்.

குறிப்பு: ஷர்மா பார்ப்பனர்களைக் குறிக்கும் வர்மா சத்திரியர்களைக் குறிக்கும்.

செய்தி ஆதாரம்: THE HINDU, 29.10.2015

தொடர்புடைய பதிவுகள்:

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! இறுதிப் பகுதி

ஆதிக்கச் சாதியினரின் அக்குளுக்குள் அடைக்கலமாகும் தலித்துகளுக்கானசட்ட உரிமைகள்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 15

*எது மிகவும் கொடுமையானது? அடிமைத்தனமா, தீண்டாமையா? - 2

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 14

*எது மிகவும் கொடுமையானது? அடிமைத்தனமா, தீண்டாமையா? -1

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 13

*ஏமாளி என்றால் எரித்துவிடு! பலசாலி என்றால் பதுங்கி ஓடு!தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 12

*நிழல் பட்டதால் உணவு தீட்டாகிவிட்டதாம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 11

*வணங்கவில்லை என்பதற்காக முதியவர் அடித்துக் கொலை!தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 10

*தீண்டப்படாதவர்களை இந்துக்கள் தங்கள் சமுதாயத்தில் இணைத்துக்கொள்வார்களா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 9

*பார்ப்பனர்களுக்கு பெரியார் மீது ஏன் கடுங்கோபம்? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 8
*நமஸ்காரம் சொல்லத் தடை! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 7
*வாழ்ந்து வரும் கடந்த காலம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 6

*ஜாதி கேட்காமல் வீடு வாடகைக்குத் தருவியா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! - 5

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! .....தொடர்: 4

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! .....தொடர்: 3

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! .....தொடர்: 2

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!

அன்புமணியைத் துரத்தும் இளவரசனின் ஆவி!

மனு இன்னும் மடியவில்லை!
எச்சிலால் கங்கையை நிரப்புவோம்!

No comments:

Post a Comment