Showing posts with label சனாதனம். Show all posts
Showing posts with label சனாதனம். Show all posts

Thursday, September 28, 2023

"இந்தியா முன்னேற வேண்டுமானால் சனாதனத்தை வேரடி மண்ணோடு அழித்து ஒழிக்க வேண்டும்!" - அம்பேத்கர்

தர்காவில் தட்சணை வாங்கும் பிராமணன்

"பம்பாய்க்கு அருகே கல்யாண் என்ற இடத்தில் ஒரு குன்றின் உச்சியில், பாவா மலங்க்ஷா என்ற பீரின் பிரபலமான தர்கா உள்ளது. அது மிகவும் புகழ்பெற்ற தர்கா. அங்கே ஆண்டுதோறும் உர்ஸ் விழா நடப்பதும், அப்போது காணிக்கைகள் செலுத்தப்படுவதும் வழக்கம். அந்த தர்காவில் புரோகிதராக இருப்பவர் ஒரு பிராமணர்.

அவர் முஸ்லிம் உடை அணிந்து தர்காவுக்கு அருகே அமர்ந்து கொண்டு, அங்கே செலுத்தப்படும் காணிக்கைகளைப் பெற்றுக் கொள்கிறார். இதை அவர் பணத்திற்காக செய்கிறார். மதமோ, மதம் இல்லையோ பிராமணருக்கு வேண்டியது தட்சணைதான். உண்மையில் பிராமணர்கள் மதத்தை ஒரு வியாபாரப் பொருளாக்கி விட்டார்கள்" என்கிறார் அம்பேத்கர்.

முன்னேற்றத்திற்கான முதல் படி

"புதிய அறிவுகளைப் பெறுவதன் மூலம்தான் சமூக முன்னேற்றப் பாதையில் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க முடியும் என்றாலும், அந்த அறிவைப் பெறுவதற்கு ஆராய்ந்து உண்மை காணும் ஆர்வம் முதலில் ஏற்பட வேண்டும். இந்த ஆர்வம் வரவேண்டுமானால் ஐயம் எழுப்பும் மனப்பான்மை ஏற்பட வேண்டும். ஏனென்றால், ஐயம் இல்லை என்றால் ஆய்வு நடக்காது. ஆய்வு இல்லை என்றால் அறிவு வளராது. ஏனென்றால், அறிவு என்பது நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்மிடம் வந்து சேருகின்ற பொருள் அல்ல. தேடித் தேடித்தான் அதை அடைய முடியும். பெரும் முயற்சியும், அதன் காரணமாகப் பெரும் தியாகமும் செய்வதன் விளைவாகத்தான் அறிவு கிட்டுகிறது.

ஐயம் குறுக்கிட்டால்தான் ஆய்வு தொடங்கும். எனவே, ஐயப்படும் செயல்தான் எல்லாம் முன்னேற்றங்களையும் தோற்றுவிக்கிறது. அல்லது முன்னேற்றத்திற்கு முதல் படியாக அமைகிறது எனக் காண்கிறோம்"

அறிஞர் பக்கிள் அவர்களின் "நாகரிகத்தின் வரலாறு" என்கிற நூலிலிருந்து மேற்கண்ட மேற்கோள் ஒன்றை எடுத்துக்காட்டி அம்பேத்கர் கீழ்கண்டவாறு எழுதுகிறார்,

உதவாக்கரை வேதங்கள்

"பிராமணர்கள் ஐயம் எழுவதற்கு இடமே வைக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் மிகவும் விஷமத்தனமான ஒரு கருத்தை மக்களிடையேப் பரப்பியிருக்கிறார்கள். வேதங்கள் பொய்யாதவை, தவறுக்கு இடமற்றவை என்பதே இந்தக் கருத்து. இந்துக்களின் அறிவு வளர்ச்சி நின்று விட்டதென்றால், இந்து நாகரீகமும் பண்பாடும் தேக்கமடைந்து முடை நாற்றக் குட்டை ஆகிவிட்டது என்றால் இதுதான் காரணம். இந்தியா முன்னேற வேண்டுமானால் இந்தக் கருத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் அழித்து ஒழிக்க வேண்டும். வேதங்கள் உதவாக்கரையான படைப்புகள். அவற்றைப் புனிதமானவை என்றோ பொய்யாதவை என்றோ கூறுவதற்கு எந்தக் காரணமும் இல்லை. பிராமணர்கள்தான் அவற்றைப் புனிதம் என்றும், பொய்யாதவை என்றும் போற்றும்படிச் செய்து வைத்திருக்கிறார்கள். ஏனென்றால் பிற்காலத்தில் இடைச் செருகளான புருஷ சூக்தத்தின் மூலம் வேதங்கள் பிராமணர்களைப் பூமியின் அதிபதிகளாக ஆக்கியுள்ளன.

இனக்குழுவின் கடவுளர்களைத் துதித்து, அவர்கள் எதிரிகளை அழித்து, அவர்களின் உடைமைகளைக் கொள்ளையடித்து, தங்களை வழிபடுபவருக்குக் கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளும் வேண்டுகோளைத் தவிர வேறெதுவும் இல்லாத இந்த உதவாக்கரை நூல்களைப் புனிதமானவை என்றும் பொய்யாதவை என்றும் ஆக்கப்பட்டது ஏன் என்று கேட்பதற்கு யாருக்கும் தைரியம் இல்லாமல் போயிற்று.

இந்தியாவின் வருங்காலம்

ஆனால் பிராமணர்கள் பரப்பி உள்ள இந்த விவேகமற்ற கருத்தின் பிடியிலிருந்து, இந்து மனத்தை விடுவிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இந்த விடுதலை ஏற்படாமல், இந்தியாவுகு வருங்காலம் இல்லை. இதில் உள்ள அபாயத்தை நன்றாக அறிந்தே இந்தப் பணியை மேற்கொண்டிருக்கிறேன். விளைவுகளுக்கு நான் அஞ்சவில்லை. மக்களைத்தட்டி எழுப்பி விடுவதில் நான் வெற்றி பெற்றால் பெரிதும் மகிழ்வேன்".
என்று, "இந்து மதத்தில் புதிர்கள்"  என்ற நூலுக்கான முன்னுரையில் தெரிவிக்கிறார் அம்பேத்கர். (தொகுதி: 8)









புதை சேற்றில் இந்து மதம்

மேலும், "பிராமணர்கள் இந்துக்களை ஒரு புதை சேற்றில் கொண்டு போய் வைத்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் அறியச் செய்வதற்காகவும் பகுத்தறிவு ரீதியான சிந்தனைப் பாதையில்இந்துக்களை இட்டுச் செல்வதற்காகவும் இந்த நூலை தான் எழுதி உள்ளதாகக் குறிப்பிடுகிறார்" அம்பேத்கர். 

"இந்து மதம் சனாதனமானது, அதாவது மாற்றம் இல்லாதது" என பிராமணர்கள் பரப்பி வரும் கருத்து, "உண்மைக்குப் புறம்பானது என்பதையும், இந்து சமூகம் காலத்துக்குக் காலம் மாறி வந்துள்ளது மட்டுமின்றி, பல சமயங்களில் இந்த மாற்றம் அடிப்படைக் கூறுகளையே மாற்றுவதாக இருந்தது என்பதையும் இந்த புத்தகத்தில் எடுத்துக்காட்ட" அம்பேத்கர்  முயன்றுள்ளார்.

புதை சேற்றில் சிக்கித் தவிக்கும் இந்துக்களை, பிராமணர்களின் பிடியிலிருந்து மீட்பதற்கும், சனாதனத்தை அழிப்பதற்கும், ஒழிப்பதற்கும் அம்பேத்கரின் எழுத்துக்கள் இன்றைய காலத்தின் தேவையாக இருக்கிறது.

ஊரான்

Tuesday, September 19, 2023

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-9

கிரகப்பிரவேசமும் கும்பாபிஷேகமும்

ஒருவன் தனது வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்வதும் மற்றும் சொந்தமாக வீடு ஒன்றைக் கட்டிக் கொள்வதும் அவ்வளவு சுலபமானதல்ல. அதனால்தான் "வீட்டைக் கட்டிப்பார் கல்யாணத்தை பண்ணிப்பார்" என்பார்கள். 

பணம் இருந்தால் மட்டும் போதாது; பலரது கடினமான உழைப்பும் ஒன்று சேர்ந்தால்தான் ஒரு இல்லத்தை உருவாக்க முடியும். வீட்டின் தரத்தை அதன் கட்டுமானம்தான் உறுதி செய்யும் என்றாலும், குடும்பத்தின் நல்லவை-கெட்டவைகளை, வீட்டின் அமைப்போடு, முடிச்சுப் போட்டு, வீட்டை இப்படி அமைத்தால்தான் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நல்லது நடக்கும் என பயமுறுத்தி "வாஸ்து சாஸ்திரம்' என்கிற சனாதனத்தைப் புகுத்தி, மக்களை முட்டாளிக்கி வைத்துள்ளனர். 

மக்களை முட்டாளாக்கியதோடு நில்லாமல், வீட்டை நிர்மாணிக்க உழைத்த உழைப்பாளிகளை அசிங்கப்படுத்துகிறது சனாதனம். சண்டாளன், பறையர் போன்றவர்கள் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருப்பார்கள், மண்ணை மிதித்திருப்பார்கள் என்பதால், இல்லம் தீட்டாகி இருக்கும் என்று சொல்லி, பசுமாட்டை ஓட்டி வந்து, கோமியம் தெளித்து, மந்திரம் ஓதி, கிரகப்பிரவேசம் என்ற பெயரில் ஒரு தீட்டுக் கழிப்பு நிகழ்வை அரங்கேற்றுகின்றனர் நம் மக்கள், அது இன்னதென்று தெரியாமலேயே! தீண்டத்தகாத மக்களும் இதைச் செய்வதுதான் காலக் கொடுமை. 

சென்னை போன்ற பெருநகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் அடித்தளமாக இருந்தாலும், ஐந்தாவது தளமாக இருந்தாலும், பசுவைக் கொண்டு வர சில ஆயிரங்கள் செலவழித்து, மாடி ஏற பசு அடம் பிடித்தாலும், மல்லுக்கட்டியாவது வீட்டிற்குள் இழுத்துச் செல்கின்றனர். தீண்டாமை எவ்வளவு வலுவானது என்பதை இந்த மல்லுக்கட்டிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.

சிறிய கோவிலோ, பெரிய கோவிலோ அங்கும் தீண்டத்தகாதவர்கள் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருப்பார்கள், மண்ணை மிதித்திருப்பார்கள், அதனால் கோவில் தீட்டுப்பட்டிருக்கும் என்பதனால் "மகா சம்ரோட்சணம்" என்கிற "மகா கும்பாபிஷேகம்" என்கிற "குடமுழுக்கு" எனும் தீட்டுக் கழிப்பு நிகழ்ச்சியை செய்கின்றனர். 

"வீடு முதலானவற்றிற்கு சண்டாள சாதிகளால் அசுத்தம் நேரிட்டபோது, விளக்குதல், மெழுகுதல், கோமூத்திரம் தெளித்தல், கொஞ்சம் மேல்மண்ணை எடுத்து அப்பால் போடுதல், பசுமாட்டை ஒரு நாள் வசிக்கும் படி செய்தல் இவை ஐந்தாலும் அந்த பூமி பரிசுத்தப்படுகிறது. (மனு 5: 124)".

தன் கனவு இல்லத்தைக் கட்டியவனை, ஆண்டவன் உறையும் ஆலயத்தை  எழுப்பியவனை, தீண்டத்தகாதவன் என்று இழிவுபடுத்தி, அவனால் இல்லமும் ஆலயமும் தீட்டாகி விட்டது என்று சொல்லி, கிரகப்பிரவேசம், கும்பாபிஷேகம் என்ற பெயரில் தீட்டுக் கழிப்பு செய்யும் நபர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஏன் கைது செய்யக் கூடாது?

வீடு தேடி வரும் தீண்டத்தகாதவர்களை, வீட்டு வாசலில் நிற்க வைத்துப் பேசுவதும், ஆண்டவனை வழிபட வந்தால் ஆலயத்தின் வாசலிலேயே தடுத்து நிறுத்துவதும் எதனால்? தீண்டத்தகாதவர்கள் பாதம் பட்டால் மண்ணும் தீட்டாகிவிடும் என்கிற சனாதனம்தானே? 

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களும் அவரது மனைவியும் 2019 ஆம் ஆண்டு பூரி ஜெகநாதர் ஆலயத்திற்குள் நுழைந்து வழிபட அனுமதி மறுக்கப்பட்டது எதனால்?  அவர் தீண்டத்தகாத சாதி, என்பதனால்தானே? 

ராம்நாத் கோவிந்த்

இந்த ஆண்டு ஜூன் 23 அன்று டெல்லியில் உள்ள ஜெகநாத் கோயிலின் கருவறைக்குள் மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான் ஆகிய இருவரும் அனுமதிக்கப்பட்டபோது, இன்னாள் குடியரசுத் தலைவர் துரௌபதி முர்மு மட்டும் வெளியிலேயே நிறுத்தப்பட்டாரே? எதனால்? 

புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவிற்கு முர்மு அழைக்கப்படவில்லையே? எதனால்? அவர் பழங்கடி இனத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவர் ஒரு விதவை என்பதும்தானே காரணம்?

முர்மு

தீண்டத்தகாதவர்கள் நுழைந்து கோவில் மண்ணை மிதித்து விட்டால், அம்மண் தீட்டாகிவிடும்; பிறகு தீட்டுக் கழிப்பு செய்ய வேண்டும். அதற்கு, கால விரயமும் பணமும் செலவாகும் என்பதனால் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் திண்டாமையை இன்றளவும் கடைபிடிக்கின்றனர். குடியரசுத் தலைவர்களுக்கே இந்த நிலை என்றால், சாமானியர்களின் நிலையை சற்றே எண்ணிப் பார்த்தால் குலை நடுங்குகிறது. 

விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமம் திரௌபதி அம்மன் கோயில் நுழைவு (2023) உள்ளிட்ட எண்ணற்ற கோயில்களில் தீண்டத்தகாதவர்கள், அவர்கள் இந்துக்களாக இருந்த போதிலும், உள்ளே நுழைந்து வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்படுவதற்கு அடிப்படைக் காரணம் இந்தத் தீண்டாமைதானே?

இலை சாப்பாட்டில் ஒளிந்திருக்கும் தீண்டாமை

பலரது வீடுகளில் இலையில் சாப்பாடு போடுவதை, தனக்குக் கிடைக்கும் மரியாதை எனக் கருதி பெருமைப்படுகிற விருந்தினர்களும் இருக்கத்தானே செய்கின்றனர். தனது கணவனோ அல்லது மகனோ அழைத்து வருகின்ற நண்பன் என்ன சாதி என்பது தெரியாது. அதனால் மகனுக்குத் தட்டிலும், நண்பனுக்கு இலையிலும் சாப்பாடு போடுவார்கள். நண்பனுக்கும் தட்டில் சாப்பாடு போட்டு விட்டால் தீண்டாமை ஏற்பட்டு விடும் என்கிற ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் இந்த இலை சாப்பாடு. எவ்வளவுதான் சுத்தம் செய்தாலும் பறையன் தீண்டின பாத்திரம் சுத்தமாகாது என்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். 

எதற்கு வம்பு என்று இரண்டு பேருக்கும் இலையிலேயே சாப்பாடு போடுவதும் உண்டு. மேலும், தரையில் உட்கார்ந்து இலையில் சாப்பாடு போடும்போது, சாப்பிட்ட பிறகு அந்த இடத்தை சாணம் கொண்டோ அல்லது தண்ணீர் கொண்டோ மெழுகுவார்கள். இது ஒரு தீட்டு கழிப்பு நிகழ்ச்சி என்பது சாப்பிட்டவருக்குத் தெரியாது. தெரிந்தால், வித விதமாய் நீங்கள் சாப்பிட்ட அனைத்தும் ஒரு நொடியில் வெளியே வாந்தியாய் வந்துவிடும், ரோசம் இருந்தால்!

நமது அன்றாட வாழ்வில், இப்படி எண்ணற்ற தீண்டாமைச் சடங்குகளை சனாதனம் புகுத்தி இருக்கிறது. இன்று வரையிலும் அது தொடர்கிறது. 

ஆம்! சனாதன தருமம், அழிவில்லாதது, it is eternal என்று அவர்கள் சொல்வதில் உண்மை இருக்கத்தானே செய்கிறது. தீண்டாமை எனும் சனாதன தருமம் அழிவில்லாமல் இன்றும் நீடிக்கத்தானே செய்கிறது.

அடுத்து பெண்கள் மீதான சனாதன தருமம் குறித்துப் பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

****"

தொடர்புடைய பதிவுகள்

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-1

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-2

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-3

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-4

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-5

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-6

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-7

Sunday, September 10, 2023

சனாதன தருமத்தின் மூலம் எது?

கொசு, டெங்கு, மலேரியா, கொரோனாவை ஒழிப்பதைப் போல, சனாதன தருமத்தை எதிர்ப்பதல்ல; மாறாக அதை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி பேசியது, இன்று, சனாதன தருமம் குறித்து பெரும் விவாதத்தைத் தூண்டி உள்ளது. சனாதன தருமம் என்றால் என்ன என்பது பற்றி ஆளாளுக்கு ஒரு விளக்கத்தைக் கொடுக்கின்றனர். 

உண்மையில் சனாதனம் என்றால் என்ன என்பது குறித்து மகஇக, வேலூர் கிளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அரங்கக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக தரவுகளைத் தேடிய போது அதற்கான விடை கிடைத்தது. 

இன்று, இந்து மதம் என்று சொல்லப்படுகிற வைதீக-ஆரிய-பிராமண மதத்தின் மற்றொரு பெயர்தான் சனாதனம். அதனால்தான் இந்து மதம், சனாதன மதம் என்றும் அழைக்கப்படுகிறது. தருமம் என்றால் ஈகை அல்ல; மாறாக என்றென்றைக்கும் ஒரு இந்து தன் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்/கடமைகள் என்று பொருள். 

இந்து மதத்தைப் பின்பற்றுகிற ஒரு தனிமனிதன், அவனது குடும்பம், அவன் சார்ந்த சமூகம், வாழுகின்ற நாடு உள்ளிட்டவை அன்றாடம் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களையும், விதிமுறைகளையும் பற்றியதுதான் சனாதன தருமம். இந்தச் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை கீழ்கண்ட இந்து மத நூல்களில் விரிவாக சொல்லப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர மற்ற இந்து மத நூல்களில் சொல்லப்பட்டுள்ளவை சனாதன தருமத்தில் சேராது.

1.ரிக்-யசூர்-சாம-அதர்வன‌ எனும் நான்கு வேதங்கள். (சுருதிகள்).

2.மனுதரும சாஸ்திரம் உள்ளிட்ட 18 தரும சாஸ்திரங்கள் (ஸ்மிருதிகள்), மொத்தம் 128 ஸ்மிருதிகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

3.பாகவத புராணம் உள்ளிட்ட 18 புராணங்கள். இவை தவிர, உப புராணங்கள் சில இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

4.மகாபாரதம், இராமாயணம் ஆகிய இரு இதிகாசங்கள்.

5.பகவத் கீதை.

மேலுள்ளவற்றில் சொல்லப்பட்டுள்ள கடமைகள் அனைத்தையும், ஒரு சட்ட நூல் போல தொகுத்துத் தருவதுதான் மனுதரும சாஸ்திரம். எனவே, மனுதரும சாஸ்திரத்தைப் புரிந்து கொண்டால், அதில் சொல்லப்பட்டுள்ள தருமங்களின் இன்றைய நடைமுறையையும் தெரிந்து கொண்டாலே சனாதனம் என்றால் என்ன என்ற கேள்விக்கு முழுமையான விடை கிடைத்து விடும். விடையைத் தெரிந்து கொண்டால், சனாதன தருமத்தை ஒழிப்பதா அல்லது காப்பதா என்பதை ஒருவரால் முடிவு செய்ய முடியும்.

12 தலைப்புகளைக் கொண்ட மனுதரும சாஸ்திரத்தை முழுமையாகப் படிக்க வேண்டும். அவசியம் கருதி உடனடியாகப் படிக்க வேண்டிய சில முக்கியப் பிரிவுகளை கீழே கொடுத்துள்ளேன்.

தலைப்பு I: உலகத் தோற்றம், உயிர்கள், தாவரங்கள், விலங்குகள், மனிதர்களின் தோற்றுவாய்

31: நான்கு வருணங்களின் தோற்றம்
87,88, 89,90: நான்கு வருணங்களின் தொழில்
92, 93, 95, 96, 97, 100: வருணங்களில் உயர்வு தாழ்வு.

தலைப்பு II: வருண தருமம்

11- நாஸ்திகன்
21, 22: ஆரியர்களின் நாடு
27: சீமந்தம் எனும் தீட்டுக் கழிப்பு
30, 31, 32, 33:  பெயர் சூட்டல்
36, 39, 44, 66: பூணூல்
135, 137, 155, 156: மரியாதை

தலைப்பு III: திருமணம், திதி

4, 6, 8, 10, 11, 12, 13, 15, 16, 16, 21: திருமணம்
46: மாதவிடாய், தீட்டு
110: தாழ்ந்த சாதி

தலைப்பு IV: குடும்ப வாழ்க்கை

30: வேதத்தை நம்பாதவர்கள்
57: மாதவிடாய், தீட்டு
61: சூத்திரன் ஆளும் நாடு
79: மர நிழல் தீட்டு
162, 165: பிராமணச் சலுகை
215-219: உணவுத் தீண்டாமை

தலைப்பு V: உணவு

5, 6, 10, 14, 19, 27, 36, 48, 51: உணவுப் பழக்கம்
62, 85, 86,93: பிறப்பு இறப்பு தீட்டு
124: கிரகப்பிரவேசம், கும்பாபிசேகம் தீட்டு
147-169: மகளிர் தருமம்

தலைப்பு VI: சந்நியாசம்

தலைப்பு VII: அரசின் செயல்பாடு

32, 37-43, 54, 59, 63, 64: அரசாங்கத்தில் பிராமணர்களின் பங்கு

தலைப்பு VIII: நீதி பரிபாலனை

1, 3, 8, 11, 20-22, 24, 88 112, 123, 124: நீதித் துறையில் பிராமணர்களின் பங்கு
267-283, 352, 353: சொற்கொடுமை- தண்டனையில் பிராமணர்களுக்குச் சலுகை, பாரபட்சம்
379-381, 410:  தகாத உறவு, பிராமணர்களுக்குச் சலுகை, பாரபட்சம்.
413, 415: தொழிலாளர்கள்

தலைப்பு IX: ஆண்-பெண் தருமம்

2-3, 13, 14, 17, 19, 27-30, 46, 58, 59,69, 78, 81, 88, 94: பெண்ணடிமை
225: வேத நிந்தனை
229, 319, 320: அபராதம், பிராமணர்களுக்குச் சலுகை

தலைப்பு X: சாதிகள் உற்பத்தி, தொழில்

1-73: வருணக் கலப்பால் உருவான கீழ் சாதிகள், தொழில், வசிப்பிடம், உணவு, உடை
83, 84: பிராமணர்கள் ஏன் வேளாண்மை செய்வதில்லை.

தலைப்பு XI: பரிகாரம்
தலைப்பு XII: பாவ புண்ணியம்.

****

மனுதரும சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள குழந்தைத் திருமணம் உள்ளிட்ட சில வாழ்வியல் நடைமுறைகள், புதிய சட்டத் திருத்தங்களால் கைவிடப்பட்டுள்ளன. ஆனால் சாதி, தீண்டாமை, பார்ப்பன மேலாண்மை உள்ளிட்ட பெரும்பாலானவை வழி வழியாக இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய சம்பவங்கள் நாள்தோறும் நடைபெறுவதால் அவற்றை மனுதரும சாஸ்திரத்தோடு ஒப்பிட்டுப் பொருத்திப் பார்த்தால்தான், அது சனாதனமா இல்லையா என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்: 

திராவிட என்ற சொல் மீது பார்ப்பனர்களுக்கு ஏன் கடுங் கோபம்?

சனாதனிகளின் நாக்கு தடித்து விட்டதா?..... தொடர்-3

சனாதனிகளின் நாக்கு தடித்து விட்டதா? தொடர்-2

சனாதனிகளின் நாக்கு தடித்து விட்டதா?.....தொடர்-1

Wednesday, January 11, 2023

பதிப்புலகம் பாட்டாளிகளை நோக்கிப் பயணிக்குமா?

‌‌08.01.2023 ஞாயிறு அன்று முற்பகலில் நந்தனம் ஒய் எம் சி ஏ வில் நடைபெற்று வரும் சென்னை புத்தகக் கண்காட்சி மற்றும் மாலையில் தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற்ற மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியின் மாத இதழான சிந்தனையாளன் பொங்கல் மலர் வெளியீட்டு விழா என இரு வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன்.‍‌ ‌‌

காலை 11 மணிக்கு உள்ளே நுழைந்து வெறும் கழுகுப் பார்வையோடு பிற்பகல் 2 மணிக்கு வெளியே வந்த எனக்கு இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சி ஒருபுறம் நேர்மறை எண்ணங்களையும் மற்றொருபுறம் எதிர்மறை எண்ணங்களையும் என்னுள் ஏற்படுத்தியது.

கட்டுக் கட்டாய் பொன்னியின் செல்வன்கள் ஆங்காங்கே குவிக்கப்பட்டிருந்தாலும், "இவர் தமிழர் இல்லையென்றால் வேறு யார்தான் தமிழர்?" என்ற வினாவோடு கைத்தடியில் வீரு நடை போடும் பெரியாரே இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியின் நாயகன்.
யாரெல்லாம் கருத்துக்களை விதைத்துச் சென்றார்களோ அவர்களே வரலாறு நெடுக தொடர்ந்து கடத்தப்படுவார்கள் என்பதை அரங்குகளில் முறுவலித்த அண்ணாவையும், ஆனந்தச் சிரிப்போடு கலைஞரையும் பார்த்தபோது எனக்குத் தோன்றியது. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும், அடிமைகளும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்தாலும் அவர்கள் வரலாற்றில் அசை போடுவதற்கு அருகதையற்றவர்கள் என்பதை சொல்லாமலேயே உணர்த்தியது புத்தகக் கண்காட்சி.

மார்க்சியக் கோட்பாடும், அம்பேத்கர் மற்றும் பெரியாரின் சிந்தனைகளுமே இனி தேவை என்பதை ஆங்காங்கே விரவிக் கிடக்கும் முற்போக்கு நூல்கள் நமக்கு உணர்த்துகிறது. 

வண்ணத் திரை நட்சத்திரங்களையும் மிஞ்சும் வகையில் பெரியார் மற்றும் அம்பேத்கரின் சிலைகள் பலரை வசீகரித்துக் கொண்டிருந்தன.

அல்லவற்றைப் புரிந்து கொண்டால்தான் நல்லவற்றை நாட முடியும் என்பது போல பிற்போக்கு நூல்களையும் படித்தால்தான் முற்போக்கு நூல்களின் தேவையை உணர முடியும்.  ஏதோ ஒரு வகையில் எல்லாமும் நமக்கு தேவைப்படுபவைதான்.

பொன்னியின் செல்வனைப் புரட்டிப் பார்க்க, வேள்பாரியை விரித்துப் படிக்க, சங்க இலக்கியங்களை ஊடுருவிப் பார்க்க, வேதங்களின் வேர்களைத் தேட, மூலதனத்தை முத்தமிட ஆர்வம் மட்டும் இருந்தால் போதாது, ஆயிரம் ஆயிரமாய் நோட்டுக் கட்டுகள் இருந்தால்தான் முடியும் போல. 

வர்க்க உணர்வு உள்ளவனோ வறியவனாய் இருக்க, வாங்கிப் படிக்க வசதி உள்ளவனை மட்டும் நம்பினால் மாற்ற‌‌ம் வந்து விடுமா என்ற வினாதான் எஞ்சி நிற்கிறது.

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என சமத்துவத்தை ஓரடியில் அடித்துச் சொன்னான் ஐயன் அன்று. பெரியாரின் "பெண் ஏன் அடிமையானாள்"?, ஒரு சில பக்கங்களில் மாமிகளைக்கூட மடைமாற்றுகிறது.  

ஆனால் இன்று, பலர் பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளுகிறார்கள்,  அவர்களுக்குள்ளேயே அது முடங்கிப் போகிறது.   வாழ்க்கைப் பாடுகளை, ஓரிரு பக்கங்களில், மக்கள் மொழியில் எளியோரிடம் எடுத்துச் செல்ல வேண்டும். அதுதான் இன்றைய தேவையும் கூட.

ஆயிரம் பக்கங்களைக் கொண்ட பகவத் கீதையை வெறும் 260 ரூபாய்க்கு  நாக்பூரில் இருந்து கடத்தி வருகிறான் தமிழ்நாட்டுக்கு. 50 பதிப்புகளில் 5 லட்சம் பிரதிகளைக் கடந்து எதிரி ஊடுருவிக் கொண்டிருக்கிறான். ஆனால் நாமோ, நான்கு பதிப்புகளில் நாற்பதாயிரம் பிரதியைக் கடந்ததற்கே ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறோம்.  படைப்புலகம் இதை பரிசீலிக்கவில்லை என்றால் வரலாறு உங்களை மன்னிக்காது.

காரிருள் சூழ்ந்தால் வயல்கள் துளிர்க்கும், காவி இருள் சூழ்ந்தால் களைகள் முளைக்கும். காவி இருள் ஏற்கனவே தமிழகத்தை சூழ்ந்து விட்டது‌. ஆங்காங்கே களைகள் முளைத்து விட்டன. களைகளைப் பிடுங்கி எறியவில்லை என்றால், வயல்களில் ஒரு குண்டு மணிகூட மிஞ்சாது என்பதை உணர்த்தும் வகையில் அமைந்தது மார்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியின் "சிந்தனையாளன்" பொங்கல் மலர் வெளியீட்டு விழாவும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற சனாதன எதிர்ப்புக் கருத்தரங்கமும்.

பேராசிரியர் சுப வீரபாண்டியன், பேராசிரியர் கருணானந்தம், தோழர் தியாகு, தோழர் வாலாசா வல்லவன் உள்ளிட்ட ஆளுமைகள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி ஒரு சில பாடங்களை உணர்த்தியது.

சனாதனம் என்ற பெயரில் பார்ப்பனியத்தை உயர்த்திப் பிடிக்கும் பாரதிய ஜனதாக் கட்சி உள்ளிட்ட சங்பரிவாரக் கும்பலை வீழ்த்த வேண்டுமானால், முற்போக்கு பேசுபவர்கள் வெகுமக்கள் இருக்கிற மேடைகளைப் பயன்படுத்த வேண்டும். திமுக மீது ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அங்குதான் பெருவாரியான வெகுமக்கள் இருக்கிறார்கள். இன்றைய அரசியல் சூழலில் திமுகவை ஒதுக்கி வைத்துவிட்டு சனாதனத்தை வீழ்த்துவது என்பது சாத்தியமா என்பதையும் யோசிக்க வேண்டும். 

குடிநீரில் மலம் கலக்கும் சிந்தனை கொண்ட மக்களை வைத்துக் கொண்டா காவிகளை வீழ்த்த முடியும்? சனாதன சிந்தனையிருந்தும், சனாதன வாழ்க்கை முறைகளிலிருந்தும் வெகுமக்களை மீட்டெடுக்காமல் சங்பரிவாரக் கூட்டத்தை ஒருபோதும் வீழ்த்த முடியாது.‌‌ முற்போக்கு பேசுபவர்கள் வெகு மக்களை நோக்கிச் செல்வதைத் தவிர இதற்கு வேறு வழி ஏதுமில்லை.

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

புத்தகக் கண்காட்சி: எதற்காக?‌‌

சென்னை புத்தகக்‌ காட்சி: அப்படி என்னதான் இருக்கிறது அங்கே?

Friday, April 16, 2021

சனாதனிகளின் நாக்கு தடித்து விட்டதா?..... தொடர்-3

மனிதக் காதலை திசை மாற்றிய பக்தி இயக்கம்

சனாதனம் என்றால் பழைமையானது; சனாதன தர்மம் என்றால் பழைமையான நீதி நெறி என்று பொருள். ‘நமது முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை; சமூகத்திற்குப் பொருத்தமான நீதி நெறிகளை அன்றே வகுத்து வழிகாட்டி உள்ளார்கள். பழைய நீதி நெறிகளை கடைபிடிக்கத் தவறியததால்தான் நாட்டில் கேடுகள் பெருகிவிட்டன. எனவே சனாதன தர்மத்தை நிலைநாட்டுவதன் மூலம்தான் நற்சமூகத்தை மீட்டெடுக்க முடியும்” என்பதுதான் சனாதன தர்மத்தை உயர்ந்ததாகக் கருதுவோரின் கருத்து. பார்ப்பனர்கள் மட்டுமல்ல பார்ப்பனியத்துக்கு பலியாகிப் போன பலரின் கருத்தும் இதுதான்.

சங்க இலக்கியங்களில் கூறப்பட்ட நெறிமுறைகளையே தமிழர்கள் தங்களது மரபாகப் பார்க்கின்றனர். சங்க இலக்கியங்கள் சனாதனக் கருத்துக்களை வலியுறுத்தவில்லை என்பது யாவரும் அறிந்த ஒன்று. அப்படியானால் சனாதன தர்மத்தை எங்கிருந்து, எப்படிப் புரிந்து கொள்வது? பார்ப்பன இந்து மத நூல்களான, சுருதிகள் என்று சொல்லக்கூடிய ரிக்-யஜூர்-சாம-அதர்வன உள்ளிட்ட 4 வேதங்களிலும், ஸ்மிருதிகள் என்ற சொல்லக்கூடிய மனு-யாக்ஞவல்கியர்-அங்கிரஸ்-ஆபஸ்தம்பர் உள்ளிட்ட 18 தர்ம சாஸ்திரங்களிலும், நாரத-பாகவத-கருட-லிங்க-நாரத-சிவ-ஸ்கந்த-விஷ்ணு உள்ளிட்ட 18 புராணங்களிலும். இதிகாசங்கள் என்று அறியப்படுகிற இராமாயணம், மகாபாரதம் மற்றும் பகவத் கீதையிலும் சனாதன தர்மம் குறித்த விவரங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இதில் பகவத் கீதை ஸ்மிருதி வகையைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்து மதத்தைச் சார்ந்த ஒருவன் எதைச் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது, எப்படிச் செய்யக் கூடாது என்பதை ஸ்மிருதிகள் வலியுறுத்துகின்றன. இதில் முதன்மையானது மனுஸ்மிருதி. அதனால்தான் இது சட்டமாகவும் நடைமுறையில் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. மேற்கண்ட நூல்கள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் இருந்ததால் பார்ப்பனர்கள் மட்டுமே அவற்றை விரித்துக் கூறும் ஆற்றல் பெற்றவர்களாக இருந்ததால் அவர்கள் சமூகத்தில் உயர்ந்தவர்களாகக் கருதப்பட்டார்கள்.

மனுவின் காலம் கி.பி 185 க்குப் பிறகு என அறியப்பட்டாலும் சமணம் செழித்தோங்கிய களப்பிரர் ஆட்சி (கி.பி 250-575) வீழ்ச்சி அடைந்த காலகட்டத்தில்தான் தமிழர் வாழ்வில் மனு ஸ்மிருதி கோலோச்சத் தொடங்கி உள்ளது. சண்டாளர்கள் தீயவர்களாகக் கருதப்பட்டார்கள் என்கிற பாஹியான் (கி.பி 400) கூற்றிலிருந்தும், தோட்டிகள் நகருக்கு வெளியே வாழ்ந்தார்கள் என்கிற யுவான் சுவாங் (கி.பி 620) கூற்றிலிருந்தும், அறிய முடிகிறது. இந்தக் காலகட்டத்தில்தான் (கி.பி 400-600) தீண்டாமையும் புகுத்தப்பட்டிருக்கிறது.

களப்பிரர் காலம்வரை படைக்கப்பட்ட தமிழ் இலக்கியங்கள் மனிதனுக்கும் மனிதனுக்குமான காதலை அடிப்படையாகக் கொண்டவை. பக்தியினால் முக்தி எளிதாகும்; இம்மை மறுமைப் பயன்களை எளிதில் பெறலாம் எனக் கூறி சமணத்தையும் பௌத்தத்தையும் அழிப்பதற்காக சைவமும் வைணவமும் தோற்றுவித்த பக்தி இயக்கம், மனிதனுக்கும் மனிதனுக்குமான காதலை, தெய்வத்துக்கும் மனிதனுக்குமானக் காதலாக திசை மாற்றியது. கி.பி ஆறாம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் இல்லாதிருந்த விநாயகர் வணக்கம் பிற்கால நூல்களிலேயே காணப்படுகிறது. சனாதன தர்மம் தமிழகத்தில் ஆழமாகக் கால் பதிக்க பக்தி இயக்கமும் ஒரு காரணமாக இருந்தது என்றால் அது மிகையல்ல. பின்னாளில் சைவத்துக்கும் வைணவத்துக்குமான மோதல் என்பது தனிக்கதை.

சனாதன தர்மத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆர்.எஸ்எஸ்-பா.ஜ.க கும்பல் தமிழகத்தில் கால்பதிக்க முயலும் இத்தருணத்தில் சனாதன தர்மம் குறித்தப் புரிதல் காலத்தின் கட்டாயம் என்பதால் அது குறித்து இனி விரிவாகப் பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்