Tuesday, December 16, 2025

சங்கிகளின் சங்கை அறுக்கும் சித்தர்கள்! - 11

"இந்த ஊரில் இல்லைஎன்று எங்கு நாடி ஓடுறீர்?
அந்தஊரில்ஈசனும் அமர்ந்து வாழ்வது எங்ஙனே?" (426)

ஊர் ஊராக, கோவில் கோவிலாக கடவுளைத் தேடி ஓடுவோரைக் கேள்வி கேட்கிறார் சிவவாக்கியர்.

"வேதம் ஓதுவானுடன் புலைச்சி சென்று மேவிடில்" (461)

வேதம் ஓதும் புரோகிதனும் சேரிவாழ் பறைச்சியும் சேர்ந்தால் என்ன கேடு என்று கேட்பதோடு,

"வகைக்குலங் கள்பேசியே வழக்குரைக்கும் மாந்தர்கள்" (462)

பல்வேறு சாதிகளைப் பேசும் மாந்தர்களே எனக் கேள்வி எழுப்பி,

"ஓதும்நாலு வேதமும் உரைத்த
சாத்திரங்களும்
பூதத்தத்து வங்களும் பொருந்தும் ஆகமங்களும்
சாதிபேத உண்மையும் தயங்குகின்ற நூல்களும்
பேதபேதம் ஆகியே பிறந்துஉழன்று இருந்ததே." (463)

என சாதி பேதங்களைப் பேசும் வேதங்கள், சாத்திரங்கள், ஆகமங்களைச் சாடுவதுடன்,


"மனு பிறந்து ஓதிவைத்த நூலிலே மயங்குறீர்" (சிவ.214)

மனுதர்ம சாஸ்திரத்தில் மயங்காதீர் என எச்சரித்து,

"மனு எரிக்க நாளும்நாளும் நாடுவீர்" (462)

என மனுதர்ம சாஸ்திரத்தை எரிக்கப் சொல்கிறார் சிவவாக்கியர்.

"குண்டலங்கள் பூண்டுநீர் குளங்கள்தோறும் மூழ்குறீர்;
மண்டுகங்கள் போலநீர் மனத்தின் மாசறுக்கிலீர்" (492)

வாத்து போல நீரில் மூழ்கி எழுந்தால் நீங்கள் செய்த பாவங்கள் போய்விடுமா எனக் கேட்பதோடு,

"நட்டகல்லைத் தெய்வம்என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணமுணேன்று சொல்லுமந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன்உள் இருக்கையில்!
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?" (494)

கற்சிலையைக் கடவுள் என நம்பி அதனிடம் முறையிடுகிறாயே, அது பேசுமாடா மடையா என்று சிலைகளை வணங்கும் பக்தர்களின் செவுட்டில் அடிக்கிறார் சிவவாக்கியர்.

சிவவாக்கியரின் அடி தொடரும்.

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

No comments:

Post a Comment