தொடர்புடைய பதிவுகள்
Sunday, September 3, 2023
சிதைந்து வரும் அரசு கட்டமைப்பும் சீற்றம் கொள்ளும் மக்களும்!
Wednesday, January 6, 2021
கோமாதாக்களின் கழிசலில் பூவிருந்தவல்லி!
பூவிருந்தவல்லிக்கு திடீரென இன்று ஒரு குறும் பயணம். பேருந்து நிலையத்தில் கால் பதித்த போது சென்ற ஆண்டு ஜனவரியை நினைவு படுத்தியது. ஆங்காங்கே தேங்கி நின்ற மழை நீரும், கோமாதாக்களின் கழிவுகளும் எச்சரிக்கை மணி எழுப்ப, சேர்ந்திருந்த சிறுநீரை இறக்கிவிட்டு, நான் சந்திக்க வேண்டியவர் வர தாமதமாகும் என்றதனால் சற்றே இளைப்பாற அவர் சொன்ன இடம் சென்றேன். அவ்விடம் பேருந்துகள் நிற்குமிடம் மட்டுமல்ல வாழ வழியற்றோரின் வாசஸ்தலம் என்பதையும் புரிந்து கோண்டேன்.
பூவிருந்தவல்லியிலே கோரைப் புல்லும் தாராக்கட்டைகளுமா முளைத்திருக்கு, கோமாதாக்கள் நற்சாணம் தள்ள? நாம் வீசியெறியும் மிச்சங்களும் கூழ் படிந்த காகிதங்களும் அவைகளின் அன்றாட உணவாய் இருக்கும் போது மனிதக் கழிவை விட மட்டமாய்த்தானே வெளியே தள்ளும், கழிசலாய். துப்புரவுப் பணியாளர்களுக்கு இது பெரும் சுமையன்றோ? கோமாதாக்களை போற்றுவோர் ஒரு நாள் 'டூட்டி' பார்த்தால் தெரியும் வேதனை என்னவென்று?
மணி பத்தைத் தொட்டது. பசி வயிற்றைக் கிள்ள, பேருந்துகள் வெளியே வரும் 'கார்னர்' கடையில் இட்டிலி நான்கு, வடை ஒன்றை வடகறியோடு உள்ளே இறக்கினேன். எவ்வளவு என்றேன்? கம்மிதான், இருபத்தைந்து என்றனர். ஏழைகள் நுழையும் இடமல்லவா? அதற்கு மேல் என்றால் அங்கெல்லாம் யார்தான் நுழைவர்?
பக்கத்துக் கடையின் தேநீர்
தொண்டைக்குள் இதமாய் இறங்க, ‘டைம்ஸ் ஆஃப் இன்டியாவை’ லேசாய்ப் புரட்டினேன். "What caused downpour?" என வினா எழுப்பி அது லா நினோவின் நர்த்தனம் என்றது.
லா நினோவும், எல் நினோவும் வழக்கமானவைதான், 'டவுன் போர்' ஒன்றும் அதிசயமல்லவே? "What caused stagnation?" எனத் தலைப்பிட்டிருந்தால், வடிகால் இன்றி சிறு மழைக்கே சென்னை மிதக்கும் அவலம் ஒருவேளை உரைப்பவர்களுக்கு உரைத்திருக்குமோ என எண்ணியவாறு தாள்களைப் புரட்டினேன்.
இரண்டாம் உலகப் போரின் இரண்டாயிரம்
தியாகிகளுக்கு இரண்டு ஆண்டுகளாய் மோடியின் மெத்தனத்தால் ஓய்வூதியம்
கிடைக்கப் பெறாமல் கடந்த ஆண்டில் மட்டும் 176 பேர் மரணித்த செய்தி கண்டு, மாடுகளுக்கான அரசில் இது
ஒன்றும் அதிசயமல்லவே என மேலும்
புரட்டினேன்.
பசுவை வதைத்தால் ஏழு ஆண்டு வரை சிறை எனும்
காவிகளின் கட்டளைக்கு கர்நாடகக் கவர்னர் கண்ணசைத்தச் சேதியைக் கண்டு இங்கே
கோமாதாக் கழிசலில் கால் வைத்தால் பரலோகம் நிச்சயமாச்சே? இதைத் தடுக்க இங்கு சட்டம் ஏதும் உணடோ? என எண்ணியவாறு வந்த வேலை முடிந்து ஊர் திரும்பினேன்.
ஊரான்
தொடர்புடைய பதிவுகள்
Tuesday, January 21, 2020
சென்னை புத்தகக் காட்சி: அப்படி என்னதான் இருக்கிறது அங்கே?
புத்தகக் கண்காட்சி: எதற்காக?
Saturday, September 17, 2011
பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்கலாமா?
எனவே, நெற்றித் திலகம், நம்மை இறை அனுக்ரகத்துடன் வாழவைக்கும். தீய சக்திகள் நம்மை அணுகாமல், தீய எண்ணங்கள் நம்மில் எழாமல் காக்கும். திலகத்தை நெற்றியில் வைத்துக்கொள்ளும்போது "இதன் மூலம் நான் கடவுளை எப்போதும் மனத்தில் இருத்துகிறேன். இறைத் தன்மையுள்ள இந்த உணர்வு, எனது எல்லாச் செயல்களிலும் ஊடுருவிப் பரவட்டும். என் செயல்பாடுகளில் எப்போதும் நேர்மையும் உண்மையும் நிறையட்டும்' என்று பிரார்த்திக்க வேண்டும். நெற்றித் திலகம் லட்சுமிகரமானது என்பர். எனவே குங்குமம் வைக்கும்போது, "ஸ்ரீயை நமஹ' என்றோ, "மகாலட்சுமியே போற்றி' என்றோ சொல்லியபடி வைத்துக்கொள்வது நலம் பயக்கும்."
17.09.2011 தினமணி வெள்ளிமணியில் குமரன் என்பவர் "பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பது ஏன்? என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரை இது.
"திலகம்,பொட்டு,குங்குமம் போன்றவை மங்கலச் சின்னங்களாகப் போற்றப்படுபவை. பொட்டு வைத்துக் கொள்வது, இறை வழிபாட்டின் ஓர் அங்கம்"
மங்கலச் சின்னங்களாகப் போற்றப்படுபவை என்பது மட்டுமே இங்கே முழு உண்மையாக இருக்க முடியும். இறை வழிபாட்டின் ஓர் அங்கம் என்பதுகூட முழு உண்மை அல்ல. பொட்டு இல்லாமல் இருந்தால் அமங்கலி என இழிவாகப் பார்ப்பதால்தான் சமூகத்திற்குப் பயந்து பல பெண்கள் ஏதாவது ஒரு பொட்டை வைத்துக் கொள்கிறார்கள். அப்படி வைத்துக் கொள்ளும் போதுகூட தன்னுடைய முகத்திற்கும், நிறத்திற்கும், அன்று உடுத்தியிருக்கின்ற உடைக்கும், காலில் அணிந்திருக்கும் செருப்புக்கும் பொருத்தமான ஒரு பொட்டைத்தான் பலரும் தேர்வு செய்து வைத்துக் கொள்கிறார்கள். அதுவும் 'ஸ்டிக்கர்' பொட்டுகளே இன்று ஆதிக்கம் செலுத்துகின்றன. இது பொட்டில் பொதிந்திருக்கும் இன்றைய அழகியலின் உளவியல்.
அதனால்தான் முகங்களிற்கு ஏற்ற பொட்டு, எந்த வடிவமான முகத்திற்கு எந்த வடிவ பொட்டு அதாவது சதுர முகம், வட்ட வடிவ முகம், முக்கோண வடிவ முகம், இதய வடிவ முகம் என முக வடிவத்திற்கு ஏற்ப பொட்டை தேர்வு செய்யச் சொல்கிறார்கள்.
நெற்றியில் எட்டனாவை ஒட்டியதைப் போல வைக்கப்படும் குங்குமப் பொட்டுகள் பட்டிக்காட்டின் அடையாளங்கள். உற்றுப்பார்த்தாலும் தெரியாத 'ஸ்டிக்கர்' பொட்டுகள் நவீன காலப் பெண்களின் அடையாளங்கள். இன்றையப் பெண்கள் எதை விரும்புகிறார்கள் என்பதையும் விளக்க வேண்டுமா என்ன?
பொட்டு வைத்துக் கொள்ளாதவர்கள் சாதனைகள் எதையும் செய்வதில்லையா? அல்லது பொட்டு வைத்தப் பெண்கள் மட்டும்தான் சாதனைகள் புரிகிறார்களா? எதற்காகப் பொட்டுக்கு இத்தனை அறிவியல் சாயம் பூசுகிறார்கள்? நினைவாற்றலுக்கும், சிந்திக்கும் திறனுக்கும் பொட்டு முக்கியப் பங்காற்றுகிறது என்பது உண்மையானால் இந்துப் பெண்கள்தானே, அதுவும் பொட்டு வைத்துக் கொள்கிற இந்துப் பெண்கள்தானே அறிவின் உச்சாணியில் இருக்க வேண்டும்.
பொட்டு வைப்பதால் இவ்வளவு பயன் என்றால் ஆண்களும் அதுபோல வைத்துக் கொள்வதில்லையே ஏன்? இந்து மதத்தின் 'பெருமையை' மேலை நாடுகளில் பறைசாற்றிய விவேகானந்தர்கூட பொட்டோடு இருக்கும் படத்தைக் காணமுடியவில்லை. அவர் நெற்றியில் பொட்டு இல்லை என்பதால் அவரிடம் பக்தி இல்லை என்று பொருளாகிவிடுமா?
தீய எண்ணங்கள் எழாமல் பொட்டு பாதுகாக்கிறதாம்.இதை ரஞ்சிதாக்களிடமும் நித்தியாநந்தாக்களிடமும்தான் கேட்க வேண்டும்.