Friday, December 5, 2025
சங்கிகளின் சங்கை அறுக்கும் சித்தர்கள்! - 1
Thursday, December 4, 2025
திருப்பரங்குன்றம் உணர்த்தும் பாடம்!
Tuesday, December 2, 2025
நான் வலைப்பூ தொடங்க உதவிய உந்து சக்தி!
நான் படிப்பது, பார்ப்பது, நுகர்வது, சுவைப்பது, உணர்வது என எனது புலனறிவுக்கு எட்டியவை குறித்து பிறரோடு பகிர்ந்து கொள்வதும், அதன் மீதான மற்றவர்களின் கருத்துக்களை அறிய விரும்புவதும் எனது அன்றாட வழக்கம். வினவு தொடங்கிய போது வினவில் வெளியான படைப்புகளைப் படித்து விட்டு அதன் மீதான கருத்துகளைக் கூட என்னால் தெரிவிக்க முடியாமல் தவித்த காலம். நான் படித்ததை நண்பர்களோடு, தோழர்களோடு பகிர்ந்து கொள்ள முயற்சித்தால் அவர்கள் வினவு படிப்பதில்லை அல்லது படிக்க வாய்ப்பில்லை என்பார்கள். உலகின் அழகிய மணமக்கள் ! கட்டுரையை செப்டம்பர் 2010-ல் படித்த போது அதன் மீதான கருத்தை எப்படியாவது சொல்ல வேண்டும் என்கிற உந்துதல் என்னுள் எழுந்த போது தமிழில் தட்டச்சு செய்யத் தெரிந்த தோழர் ஒருவரின் மூலம் அதன் மீதான எனது கருத்தை பதிவு செய்தேன். அது ஒரு நீண்ட கருத்துப் பதிவு. இப்படித்தான தொடங்கியது வினவோடு எனது உறவு.
அதன் பிறகு நானே தமிழில் தட்டச்சு செய்யத் தெரிந்து கொண்டு பல கட்டுரைகளில் எனது கருத்துக்களை பதிவு செய்யலானேன். மே 2010-ல் வாசகர்களே, நீங்களும் வலைப்பதிவு ஆரம்பிக்கலாம் !! என்கிற வினவில் வெளியான கட்டுரை அக்டோபர் 2010-ல் ஊரான் வலைப்பூ தொடங்கக் காரணமாக அமைந்தது. நவம்பர் 2010-ல் “ஐயர்” பரிகாரம் செய்தால் திருமணம் நடக்குமா? என்கிற கட்டுரையும், டிசம்பர் 2010-ல் மதுரை மல்லி கிலோ ஆயிரம் ரூபாய்! என்கிற கட்டுரையும் வினவில் வெளியான போது என்னாலும் சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து எழுத முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டது. அதன் பிறகு ஒரு சில கட்டுரைகளை நான் வினவுக்கு அனுப்பிய போது எனக்குக் கிடைத்த பதில் “மக்களின் போராட்டங்கள், அதன் விவரங்கள் பற்றிய கட்டுரைகள் இருந்தால் அனுப்புங்கள்” என்பதுதான். வினவின் வருகைக்குப் பிறகு சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து எழுதுவது அதிகரித்துள்ளது என்பதை வலையுலகம் நன்கறியும்.

பெரும்பாலும் தனிமனித சிந்தனை சார்ந்த கட்டுரைகளே என்னால் எழுத முடிந்தது. மக்களின் அன்றாடத் தேவைகள், அதற்கான போராட்டங்கள் போன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்டுரைகளை அனுப்பக் கோரினர். தனிமனித சிந்தனைப் போக்கு குறித்து எழுதுவது சுலபமானது, ஆனால் மக்களின் போராட்டம் குறித்து எழுத வேண்டுமானால் நம்மையும் மக்களின் போராட்டத்தில் இணைத்துக் கொண்டால்தான் அது சாத்தியம் என்பதை உணர வைத்தது வினவு.
தனி மனிதனின் சிந்தனையில் மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டால் சமூகம் தானாக மாறிவிடும் என்கிற மேம்போக்கான கருத்தையே பலரும் கொண்டிருக்கின்றனர். அதனால்தான் ஒழுக்க நெறிகளை அன்றாடம் போதித்து வருகின்றனர். ஆனால் இத்தகைய போதனைகள் எதுவும் மக்களிடம் எடுபடுவதில்லை. வாழ்நிலைதான் சிந்தனையை தீர்மானிக்கிறது, எனவே வாழ்நிலையை மாற்றுவதற்கான போராட்டம் இன்றி சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டுவிடாது என்கிற மார்ச்சிய பாடத்தைத்தான் வினவு நம்மிடையே பதிய வைக்கிறது.
ஒரு சமூகம் சீரழிந்துள்ளது என்றால் அது பின்பற்றும் அரசியல் – பொருளாதார கொள்கைகளும், நடைமுறைகளுமே காரணமாக அமைகின்றன. இதை மாற்றி அமைக்காமல் ஒட்டு மொத்த சமூகத்தையும் விடுவிக்க முடியாது. இதற்கு மார்ச்சியத்தைத் தவிர வேறு சித்தாந்தங்கள் ஏதும் கிடையாது. ஆனால் பெண்ணியம், சூழலியம், தலித்தியம், தமிழியம் என ஒவ்வொருவரும் தாங்கள் சார்ந்த பிரச்சனைகளை மட்டுமே எடுத்துக் கொண்டு அவற்றை சரி செய்தால் போதும் எனப் போராடுகின்றனர். இத்தகைய அணுகுமுறை மக்களை பிளவு படுத்துவதோடு மக்கள் விரோத அரசை தூக்கி எறிந்து ஒரு மாற்று மக்கள் அரசை அமைப்பதற்கு பெரும் தடையாக அமைகின்றன.
வினவு வெறும் ஊடகம் அல்ல. வினவு ஒரு போராளி. அதனால்தான் மக்களின் அன்றாட வாழ்வைப் பறிக்கும் அரசின் கொள்கைகள், நடைமுறைகள் குறித்தும் அதற்கு எதிரான போராட்டங்கள் குறித்தும் அதிக கவனம் செலுத்துகிறது. இத்தகைய போராட்டங்கள் குறித்து எழுதும் போது மக்களின் நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? சமரசவாதிகள் யார்? என்பதை அடையாளம் காட்ட வேண்டி வருகிறது. இத்தகைய சூழலில்தான் வாக்குச் சீட்டு அரசியல் கட்சிகள், சாதி – மத அமைப்புகள், இனவாதிகள் என பலரும் அம்பலப்பட்டுப் போகிறார்கள். அவர்களை மக்களின் எதிரிகளாக வினவு காட்டவில்லை. அவர்களேதான் அம்பலப்பட்டுப் போகிறார்கள். இதைப் புரிந்து கொள்ளாதவர்கள்தான் வினவுக்கு எதிராக நிற்கின்றனர். மக்களின்பால் பற்று கொண்டோர், பிறகு வினவின் கருத்தை ஏற்கின்றனர். பிழைப்புவாதிகள் மட்டுமே தொடர்ந்து வினவை எதிர்த்து வருகின்றனர். வினவின் வாசகன் என்கிற முறையில் வினவை நான் இப்படித்தான் புரிந்து கொண்டுள்ளேன்.
புகழ்வதற்காக நான் இதை எழுதவில்லை. புரிதலுக்காகத்தான் எழுதுகிறேன். வினவுக்கு ஆலோசனைகள் சொல்வதைவிட வினையாற்ற செல்வதே மேல் எனக் கருதுகிறேன்.
நன்றியுடன்
ஊரான்
www.hooraan.blogspot.com
Friday, November 28, 2025
சுயமரியாதைக்காரர்களுக்கும், பொதுவுடமையாளர்களுக்கும் வழிகாட்டும் சிங்காரவேலர்!
Thursday, November 27, 2025
முதன்முறையாகக் குலதெய்வக் கோவிலை நோக்கி…
Wednesday, November 26, 2025
சேக்கிழாரின் பெரியபுராணத்தில் ஆபாசமா?
Saturday, November 22, 2025
சரித்திர நாளா? தரித்திர நாளா?
Monday, November 17, 2025
அரசியல் ஈனம்!
Monday, November 10, 2025
காயத்ரி மந்திரம்: வெறும் குரங்குக் கூச்சலா?
மந்திரத்தால் மாங்காய் விழுமா?
Wednesday, November 5, 2025
பஞ்சணைப் பிரச்சாரம் (Arm Chair Criticism)!
என்று கேள்வி எழுப்பி,
"உத்தமர்கள் எங்கு சென்று வேலை செய்து வந்தால் என்ன?"
என்று வினவி,
"இந்துமதச் சபையார் சட்டசபையில் புகுந்து கொண்டு, சுயமரியாதைப் பிரச்சாரங்களைத் தடுக்க ஆரம்பித்தால் அவர்களை யார் தடுப்பது? நாஸ்திகக் கூட்டத்தைச் சட்டசபை மூலமாகத் தடை செய்தால் சபையில் யார் அதனை எதிர்த்துப் போர் புரிவது?”
“சமதர்மம் ஆகாய மூலமாவா_ வருமாமென்று கேட்கின்றோம்?”
“புரட்சிக்காரர்கள் சட்டசபைகளில் போகக் கூடாதென்ற மனப்பான்மையைக் குழந்தைகள் வியாதி என்றார் தோழர் லெனின்”
என சுயமரியாதை இயக்கம் மேற்கொள்ளவேண்டிய பாதை குறித்து ‘ஈரோட்டுத் திட்டம் “புரட்சி”!’ (16) என்ற தலைப்பில் “புரட்சி” இதழில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. சுயமரியாதை இயக்கம் அன்று சமதர்மக் கொள்கையையும் பேசியது.
புரட்சி
பக்கம் 5-17
24.12.1933
ஆங்கிலேயரின் அடிமை இந்தியாவில், சனாதனிகள் மட்டுமே படித்துவிட்டு, சென்னை மாகாணத்தில் ஆதிக்கம் செலுத்தியபோது, மேற்கண்ட வழிகாட்டுதல் எந்த அளவுக்கு சாலப் பொருந்துமோ, அதை இன்றைய ஆர்.எஸ்.எஸ்-பாஜக-சனாதனக் கும்பல் அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு செய்துவரும் அக்கிரமங்களைப் பார்க்கும் போது "புரட்சி" இதழின் வழிகாட்டுதல் அப்படியே இன்றும் நூறு சதவீதம் பொருந்துவதாகத்தான் நான் கருதுகிறேன்?
அதிமுக போன்ற அடிமைகளும், விஜய் போன்ற தற்குறிகளும் அதிகாரத்தில் இருப்பதாலோ அல்லது அதிகாரத்தைக் கைப்பற்றுவதாலோ மக்களுக்கு என்ன பயன் ஏற்பட்டுவிடப் போகிறது?
ஆர்.எஸ்.எஸ்-பாஜக-சனாதனக் கும்பலை எதிர்ப்பவர்கள், போதிய பிரதிநிதித்துவம் இல்லாமல் பலமற்றிருப்பது அல்லது ஒருசிலர் பிழைப்புவாதிகளாக இருப்பது என்ற இன்றைய சூழலில், அரசியலில் நேர்மையாக இருக்கும் கம்யூனிஸ்டுகள் அதிலும் குறிப்பாக மார்க்சிய-லெனினிய கம்யூனிஸ்டுகள் பலமற்று இருப்பது அல்லது தேர்தல்களைப் புறக்கணிப்பது என்பதைப் பார்க்கும் போது,
“உத்தமர்கள் எங்கு சென்று வேலை செய்து வந்தால் என்ன?" என்று,
காலத்திற்கேற்ப செயல் திட்டம் வகுத்துச் செயல்படுபவர்களே தங்களைக் காத்துக் கொள்வதோடு, சனாதனிகளிடமிருந்து மக்களையும் காக்க முடியும்!
ஊரான்
Saturday, November 1, 2025
சமதர்மமும் பொதுவுடமையும் மலர முட்டுக்கட்டை போடுவது யார்?
Friday, October 10, 2025
நோபல் பரிசு: நாய்களுக்குப் போடும் எலும்புத் துண்டா?
Monday, October 6, 2025
மரண பீதியில் திருவண்ணாமலை கிரிவலம்!
Sunday, October 5, 2025
யார் இந்த "ஊரான் ஆதி"?
Sekar P என்ற பெயரில் உள்ள முகநூல் கணக்கும் என்னுடையதுதான்.
"ஊரான்" மற்றும் "எதிர்த்து நில்" என இரு வலைப்பூக்களை (blog) நடத்தி வருகிறேன்.
பள்ளிப்பருவ காலம்முதல் கடவுள் மறுப்பாளனாக, பகுத்தறிவாளனாக வளர்ந்த நான் பின்நாளில், மார்க்சிய-லெனினிய அரசியலால் ஈர்க்கப்பட்டு, 1980 களில் தொடங்கி இருபதாண்டு காலம் "மக்கள் கலை இலக்கியக் கழகத்தின்" தலைமைக் குழு உறுப்பினராகவும், இருபதாண்டு காலம் களப்போராளியாகவும் "தமிழ்மணி" என்ற பெயரில் பாடாற்றியுள்ளேன். தற்போது "மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின்" தலைமைக் குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறேன்.
ஒன்றிய அரசு நிறுவனமான "பாரத மிகுமின் நிறுவனத்தில்" (BHEL) பணியாற்றிய நான் எனது அரசியல் மற்றும் BHEL வாழ்க்கையில் கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது. இது குறித்து "இழிகுணம்" என்ற தலைப்பில், "எதிர்த்து நில்" வலைப்பூவில் விரிவான தொடர் ஒன்றை எழுதியுள்ளேன். அதன் தொகுப்பு "இழிகுணம்" என்ற தலைப்பில் அமேசானில் மென்நூலாகவும் கிடைக்கும்.
15 ஆண்டுகளாக நான் வைத்திருந்த "ஊரான் ஆதி" profile புகைப்படத்தையும், தேவை கருதி தற்போதைக்கு மாற்றி அமைத்துள்ளேன்.
தொடர்ந்து ஆதரவளித்து வரும் நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் நன்றி!
ஊரான்
Wednesday, October 1, 2025
நம்பிக்கையில் மட்டுமே நம்பிக்கை கொண்டவர்கள்!
Wednesday, September 24, 2025
மைசூர்பாகில் மிதக்கும் கோவை!
Wednesday, September 17, 2025
இந்தியா ஆன்மீக நாடா? நாத்திக நாடா?
Thursday, August 21, 2025
மோடியும் முக்கால்னா பிரச்சனையும்!
யோகேஷ் சித்தார்த்தா ஓய்வு பெற்ற இந்திய வான்படை அதிகாரியாம். அவர் பணியாற்றிய காலத்தில் சியாச்சின் மலைப்பகுதியில் நமது இராணுவ வீரர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அவதியுற்றார்களாம்.
இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்காக யோகேஷ் சித்தார்த்தா யோசித்தாராம். தனது மொத்த சேமிப்பு பணத்தையும் வைத்திருந்த எல்லா நகைகளையும் தனது சொந்த வீட்டையும் விற்று ரூபா 1.25 கோடி செலவில் சியாச்சின் மலைப்பகுதியில் ஆக்சிஜன் உற்பத்திக் கூடத்தை அமைத்தாராம்.
இதன் விளைவாக சியாச்சின் மலைப்பகுதியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதால் 20 ஆயிரம் இராணுவ வீரர்கள் நிம்மதி பெருமூச்சு விடுகிறார்களாம்.
பிரச்சனைகளைப் பேசுவதற்கு ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஆனால், அதில் ஒரு சிலர்தான் பிரச்சனைகளை தீர்க்கிறார்கள். அரிய இந்தச் சேவையை செய்த சித்தார்த்தாவும் சுமீதா சித்தார்த்தாவும் அமைதியாக இருக்கிறார்களாம். அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகுமாம்.
சல்யூட் டு யூ சார்!"
இப்படி ஒரு செய்தி வாட்ஸ்அப்பில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
மூளையை மொத்தமாகக் கழட்டி வைத்துவிட்டுப் பார்த்தால் இது ஏதோ மிகப்பெரிய தியாகம் அர்ப்பணிப்பு போலத் தோன்றும்.
"சல்யூட் அடிக்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பது பற்றி யோகேஷ் சித்தார்த்தாவுக்குத் தெரிந்தது, நாட்டை ஆளும் மோடிக்குத் தெரியாமல் போனது எப்படி? இலட்சம் கோடிகளை விழுங்கும் இராணுவத்தால் தனது வீரர்களைக் காக்க ஒரு ஒன்னேகால் கோடி ரூபாயை இதற்கு ஒதுக்க முடியாதா?"
இந்த முக்கால்னா பிரச்சினையைத் தீர்க்க வக்கற்ற மோடி, அவ்விருவரையும் அழைத்துப் பாராட்டுவது அவருக்கே வெட்கமாகத் தெரியவில்லையா?"
என்றுதானே கேட்கத் தோன்றும்!
ஊரான்
.jpeg)
.jpeg)



.webp)
.jpeg)


.jpeg)
.jpeg)

.jpeg)




.jpg)

.jpeg)

